Home ஜல்சா கணவனை ஏமாற்றி.. கள்ளக்காதலனுக்கு அல்வா கொடுத்த பெண் பொலிஸ்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

கணவனை ஏமாற்றி.. கள்ளக்காதலனுக்கு அல்வா கொடுத்த பெண் பொலிஸ்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

31

தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா(27). இவர் கடந்த 23 ஆம் திகதி பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் மர்ப நபர்கள் இரண்டு பேர் அவர் மீது ஆசிட் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இதனால் வழிதாங்க முடியாமல் துடிதுடித்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதன் பின்னர் பொலிசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரபாகரன் என்பவரை சந்தேகத்தின் பேரில் அழைத்து பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் கூறிய வாக்குமூலம் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், தனக்கும் லாவண்யாவுக்கும் வீடு வாங்குவது தொடர்பாக பழக்கம் ஏற்பட்டதாகவும், அதுவே நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அவர் லாவண்யாவுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் 28 லட்சம் ரூபாய்க்கு வீடும் வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் லாவண்யா திடீரென்று அவருடன் பேச்சுவார்த்தையை குறைத்துள்ளார். இதனால் பிரபாகரன் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் அவர் தன் நண்பர் ஒருவரிடம் லாவண்யா தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவள் பலருடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என்றும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் தகராறு முற்றியதால், லாவண்யா அவர் அண்ணன் வீட்டிற்கு தனியாக சென்றுள்ளார். இதை அறிந்த பிரபாகரனின் ஆட்கள், அவர் மீது ஆசிட்டை வீசி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

மேலும் ஆசிட் வீசப்பட்ட லாவண்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது என்றும் அவர் கணவரின் பெயர் சுரேஷ் எனவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.