Home இரகசியகேள்வி-பதில் நான் ஒருவருடன் தொடர்பில் உள்ளேன். என்னால் மீண்டு வரமுடியவில்லை?

நான் ஒருவருடன் தொடர்பில் உள்ளேன். என்னால் மீண்டு வரமுடியவில்லை?

598

அந்தரங்க கேள்வி பதில்:காதல் திருமணங்கள் தோல்வியடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பல்வேறு காரணங்களால் திருமணத்தின் தொடக்கத்திலிருந்த காதலும், இன்பமும் பின்பு நீடிப்பதில்லை, நீடித்து இருக்கும் திருமணங்களிலும் காதலும் இன்பமும் இருக்கும் என்பதில்லை.

புதுமைப்பித்தனின் ஒரு சிறுகதையில் வருவது போன்று கணவனும் மனைவியும் தேய்ந்துபோன சக்கரங்கள் போல் பழகிப் போவதும், அதுவே அவர்களுக்கு வசதியாகவும் இருப்பதால் திருமணங்கள் நீடிக்கின்றன.

திருமணமான தம்பதியினர் அதே நிலையில் நீடிப்பது கிடையாது. ஆண் மகன் வெளியே சென்று சம்பாதித்தால் ஆதிக்கம் செலுத்துபவனாகவும், வீட்டில் இருக்கும் பெண் அடங்கிப்போகிறவளாகவும் மாறுகின்றனர்.

உடல் நலம், பணச் சிக்கல்கள், தினசரி மன இறுக்கங்கள் இவை எல்லாமே கணவன் – மனைவியின் நெருங்கிய அன்பை பாதிக்கின்றன. இருவரும் ஒன்றாகச் செலவிடும்நேரத்தையும் குறைக்கின்றன.

வாழ்நாள் முழுவதும் அன்பு நிலைத்திருப்பதற்கு, தம்பதிகளுக்குச் சில யோசனைகள்;

அன்பு மற்றும் காதல் தானாக நிலைப்பதில்லை.

நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதை நாம் முதலில் வழங்க வேண்டும் என்றொரு பழமொழி இருக்கிறது. காதலும், அன்பு ம் தொடர நீங்கள் தான் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். நேரம் ஒதுக்க வேண்டும். நீங்கள் அன்பு செலுத்தாவிட்டால் உங்களுக்குப் பலனாக அன்பு கிடைப்பது இல்லை. இதனை உணர்ந்து காதலையும் அன்பையும் பலப்படுத்த தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

மனைவிக்கும் கணவருக்கும் மதிப்பு கொடுங்கள்

மனைவிதானே? இதையெல்லாம் சொல்லவேண்டியதில்லை அல்லது சொன்னபடி இன்று திரைப்படத்துக்குப் போகாமல் நாளை போய்க்கொள்ளலாம் என எண்ணுவீர்கள்.

‘மனைவிதானே’ என நீங்கள் எடுத்துக் கொள்வதை ‘ மதிக்க வில்லை’ என அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

குறைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள்

காதலி\ காதலன் ஒரு மனிதர்தான். யாராக இருந்தாலும் குறைகள் இருக்கும். என்வே, குறையற்ற, பிழையற்ற மனிதரைத்தான் ஏற்றுக்கொள்வேன் என எண்ண வேண்டாம்.

ஊக்கம் கொடுங்கள்;

உங்கள் காதலன் \ காதலி உங்களையே நூறு சதவீதம் சார்ந்து வாழ வேண்டுமென எண்ணாதீர்கள். அவர் தனக்கென வேலை, நண்பர்கள், பொழுது போக்குகள் வைத்திருப்பதை உற்சாகப்படுத்துங்கள். தனியாக வளர ஊக்கம் கொடுங்கள், தனிப்பட்ட வளர்ச்சியடைந்த இருவரிடையே உறவு நீடித்துள்ளது எனவும் அவர்கள் மனம் ஒத்தவர்களாக வாழ்வை நடத்துகிறார்கள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வற்புறுத்தாதீர்கள்

உங்கள் துணை பாலுறவை விரும்பவில்லை என்றால் விட்டுக் கொடுங்கள். வற்புறுத்தாதீர்கள். காலம் இருக்கிறது. பாலுறவு மட்டுமின்றி, அவருக்கு விரும்பமில்லாத எதிலும் உங்கள்வற்புறுத்தல் தேவையற்றது என்பதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

காதலைத் தொடருங்கள்

உங்களுடைய ரொமாண்டிக் காதலை விட்டு விடாதீர்கள். திருமணத்துடன் எல்லாம் முடிந்து விடவில்லை. காதல் கவிதைகள் எழுதுவது,

பரிசுப் பொருள்களைக் கொடுப்பது, காதல்கடிதங்கள் கொடுப்பது, கடற்கரைக்கு அழைத்துச் செல்வது என எல்லாவற்றையும் தொடருங்கள். மேலே சொன்ன ஆலோசனைகளைத் தீவிரமாக்க் கடைப் பிடித்தாலே தம்பதியரின்இல்லற வாழ்க்கை, நல்லறமாக செழிக்கும்.
——————————————————————-
என் வயது 24. காதலியைப் பார்க்கும்போது பேச வேண்டும்; எப்போதும் அவள் என்னுடன் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், தொட வேண்டும் என்றொ, உறவுகொள்ள வேண்டும் என்றோ தோன்றவில்லை பிற்கால தேவைகள், குழந்தைகள், , பொது அறிவு இவற்றைப் பற்றிவும் விவாதிப்பது உண்டு. நான் வேறு பெண்ணிடம் உறவுகொண்டதும்இல்லை. என் நண்பர்கள் நேர் மாறாக உள்ளனர். நான் நடப்பது சரியா?

நீங்கள் நடந்து கொள்வது போன்ற ‘ ஒருவனுக்கு ஒருத்தி’ முறைதான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நலமானது; இயல்பானதும் கூட . மற்ற பெண்களிடம் நட்பு முறையில் பழகுவது சரியானதுதான். நண்பர்கள் தவறு செய்கிறார்கள் என்பதால் நாமும் தவறு செய்ய வேண்டும் என்பதில்லை.
—————————————

நான் திருமணமானவன். சொந்தமாக நிறுவனம் நடத்துகிறேன். பணிபுரியும் பெண் உதவியாளருடன் தொடர்பு உள்ளது. இது வலுகட்டாயமாக ஏற்பட்டதல்ல. தானாக இருவருக்கும்நெ ருக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்வது தவறு என்பது தெரிந்தாலும் என்னால் விட முடியவில்லை. என்ன செய்வது? இது போன்ற உறவு உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்?

’செக்ஸ் ஹராஸ்மெண்ட்’ என்பது வேறு . இதுபோன்ற தவறான செக்ஸ் நெருக்கம் என்பது வேறு. தவறான செக்ஸ் நெருக்கம் என்பது உலகம் முழுவதும் பரவலாக உள்ளது.

ஏன் இந்த உறவு ஏற்படுகிறது?

ஆண்களுக்கு மனைவியைத் தவிர, பிற பெண்களுடன் உறவுகொள்வதில் உள்ள ஆர்வம்.

ஆண்கள் தங்கள் அதிகாரத்தின் மூலமாகக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்துதல்.

தங்களுடைய ஆசிரியர் அல்லது மேலதிகாரிகளின் நல்லெண்ணத்தை நட்பை இழந்துவிடுவோமோ என்று பெண்களின் மனத்திலுள்ள பயம்.

இதனால் மண வாழ்க்கை திசை மாறிப்போய் வாழ்க்கை நரகமாகி விடலாம். எனவே, இத்தகைய தவறான உறவில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதுதான் நல்லது.
————————————-
செக்ஸ் குறித்து மருத்துவரிடம் கேட்க தயங்கும் கேள்விகளும், அதற்கான பதில்களும்!

திருமணம் ஆகும் முன்னும் சரி, ஆனபிறகும் சரி… திருமணமாகி பல காலம் கழிந்தும் சரி… தங்களுக்குள் இருக்கும் தாம்பத்தியம் குறித்து சந்தேகங்களை வெளிப்படையாக கேட்பதில் பலருக்கு கூச்சம், வெட்கம், அச்சம் இருக்கிறது.

சிலர் பெரிய பிரச்சனை என்று கருதுவது எல்லாம் பொதுவாகவே அனைவரும், அவரவர் தாம்பத்திய வாழ்க்கையில் எதிர்கொள்ளும் விஷயமாக தான் இருக்கின்றன. அதற்கான தீர்வுகளும் மிக எளிமையானதாக தான். ஆனால், அச்சத்தின் காரணமாக அதுகுறித்து வெளியே யாரிடமும் கேட்காமல் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள்.

முதல் முறை உடலுறவில் ஏற்படும் சில சமாச்சாரங்களில் இருந்து, ஆண், பெண் புணர்ச்சி இன்ப நிலை வரையிலும் பல சந்தேகங்கள் இருப்பினும், தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களே கூற தயங்கும் கேள்விகள் என மருத்துவர் சிலவற்றை கூறுகிறார்கள். மேலும், அதற்கான பதில்களும் அவர்கள் அளித்துள்ளனர்.

புணர்ச்சி இன்ப நிலை!

ஆண்களை பொறுத்தவரையில் உடலுறவில் ஈடுபடும் போதும், விந்து வெளிப்படும் போதும் இந்த புணர்ச்சி இன்ப நிலையை எட்டுகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.

ஆனால், பெண்கள் மத்தியில் அப்படியாக இல்லை. பெண்களின் புணர்ச்சி இன்ப நிலையானது கொஞ்சம் வேறுபட்டு காணப்படுகிறது.

வேறுபாடு!

ஒவ்வொரு பெண்ணும் தங்கள் புணர்ச்சி இன்ப நிலையை வெவ்வேறு முறையில் அடைகிறார்கள் என்று ஆய்வறிக்கை தகவல்கள் கூறுகின்றன.

சிலர் மயக்க நிலையிலும், சிலர் கால்கள் கிறக்கமாகும் நிலையலும், சிலர் வியர்க்கும் நிலையிலும் புணர்ச்சி இன்ப நிலையை எட்டுவாதாக கூறுகின்றனர்.

எப்படி அறியலாம்?

ஆனால், ஒரு பெண் புணர்ச்சி இன்ப நிலையை எட்டிவிட்டாரா? இல்லையா? நிறைவு அடைந்தாரா என்பதை ஒரு முறையில் கண்டறிய முடியும்.

அவரது இதயத்துடிப்பு மேலோங்கும், கடுமையாக அல்லது வேகமாக மூச்சு விடுவார்கள், கருவிழி தளர்ந்து போகும், உடலில் சிறிய அளவில் நடுக்கம் காணப்படும். இதை எல்லாம் வைத்து ஒரு பெண் புணர்ச்சி இன்ப நிலையை அடைந்துவிட்டார் அல்லது தாம்பத்தியத்தில் நிறைவு பெற்றிருக்கிறார் என்று அறிந்துக் கொள்ள இயலும்.

கடுமை!

பல பெண்கள் புணர்ச்சி இன்ப நிலை எட்டுவதில் தாங்கள் கடினமாக உணர்வதாக கருதுகிறார்கள். இதை ஒரு பெரிய பிரச்சனை என்றும் எண்ணுகிறார்கள். ஆனால், இது பெண்கள் மத்தியில் காணப்படும் சாதாரணமான ஒன்று தான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இயற்கையாகவே பெண்களின் உடற்கூறு கொஞ்சம் சிக்கலான ஒன்று. சில சமயம் தாங்கள் புணர்ச்சி இன்ப நிலை அடைந்ததை பெண்களே அறிவதில்லை.

என்னென்ன காரணங்கள்?

ஒருவேளை தாம்பத்திய உறவில் ஈடுபடும் முறையானது அல்ல சில வகைகளை அவர்கள் அறியாதிருக்கலாம். துணையின் தீண்டல்கள் முறையற்று இருக்கலாம்.

சில ஆரோக்கிய நிலை, மருத்துவ நிலை பிரச்சனைகள் காரணமாக கூட தாம்பத்தியத்தில் புணர்ச்சி இன்ப நிலை அடைவது கடினமாக அமையலாம்.

மன அழுத்தம்!

ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலுமே கூட, பெண்கள் மன அழுத்தம், பதட்டமாக இருக்கும் பட்சத்தில் புணர்ச்சி இன்ப நிலை அடைவதில் சிக்கல் கடினம் காணலாம்.

இப்படியான உணர்வு உள்ளவர்கள் முடிந்தவரை ரிலாக்ஸாக இருக்கும் போது தாம்பத்தியத்தில் ஈடுபட முயலுங்கள்.

ஓரல் செக்ஸ்!

ஓரல் செக்ஸ் என்பது ஃபோர் ப்ளேவில் ஈடுபடும் சமாச்சாரங்கள் ஆகும். 69 போன்ற சில நிலைகளில் பிறப்புறுப்பு இணைப்பு இன்றி தம்பதி தாம்பத்திய உறவில் ஈடுபவை இந்த ஓரல் செக்ஸ்.