Home வீடியோ பெண்கள் எந்த காலம்வரை உடல் தொடர்பில் இருக்கலாம் ?

பெண்கள் எந்த காலம்வரை உடல் தொடர்பில் இருக்கலாம் ?

348

பெண்கள் எவ்வயது வரை உடலுறவில் ஈடுபடலாம்?

பெண்களே! நம் நாட்டில் எல்லோரும் வெளிப்படையாக பேசத் தயங்கும் விஷயம் உடலுறவு. இதை பற்றி பேசுவது, மிக மோசமான செயல் என்று நம்பப்பட்டு வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. உடலுறவு பற்றிய அனைத்து தகவல்களையும் ஆண்கள் மற்றும் பெண்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவும் வகையிலேயே இந்த பதிப்பு..

வாழும் காலம் முழுவதும் பெண்கள் உடலுறவில் ஈடுபாடு காட்டமுடியும் என்றாலும், பெரும்பாலான பெண்கள் மெனோபாஸ் காலத்தைக் கடந்த பிறகு பிறப்புறுப்பு வழியான உறவுகளை விரும்புவதில்லை. அதற்கு முக்கியக் காரணம், உறவுக்குத் தயாராகச் சுரக்கும் திரவங்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சுரப்பதில்லை. அதனால், ஆண் உறுப்பு உள்ளே சென்று வரும் சமயத்தில் எரிச்சல், வலி உண்டாக வாய்ப்பு உண்டு.

இதை ஜெல்லி அல்லது எண்ணெய் போன்ற பொருள்களின் உதவியால் தீர்த்துக்கொள்ள முடியும் என்றாலும், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஆண்களுக்கு வெளி விளையாட்டுகள் மூலம் இன்பம் தருவதுடன் தங்கள் ஆசைகளை அடக்கிக்கொள்கிறார்கள். ஆனால், பெண்களும் இறுதிக்காலம் வரையிலும் உடலுறவு இன்பம் அனுபவிக்க இயலும் என்பதுதான் உண்மை.

வயது, மனம், ஆசை போன்றவற்றைப் புரிந்த ஆண் துணையாகக் கிடைத்தால், பெண் எந்த ஒரு வயதிலும் இன்பம் காண முடியும். பிறப்புறுப்பு தவிர, வயதானதும் மார்பகங்கள் தொங்கிப்போகும் நிலையில், அதை ஆண்களிடம் காட்டுவதற்கும் பெண்கள் தயங்குகிறார்கள் என்பதால், அறுபது வயதுக்கு மேற்பட்ட பெண்கள், செக்ஸ் இன்பத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் அதில் இருந்து விடுபட்டு வருகிறார்கள்.

பெண்களுக்கு உடலுறவில் இன்பம் தரும் உறுப்புகள் எவை?

ஆண்களைப்போல், பெண்களின் உடல் முழுவதும் இன்பம் இருக்கிறது. ஆனாலும், அதிகபட்ச இன்பம் தரும் இடங்களாக உதடுகள், நாக்குகள், காது மடல், நெற்றி, மார்பகங்கள், காம்புகள், தொப்புள், தொடை, பிறப்புறுப்பு, கிளைட்டோரிஸ், ஆசனவாய், பெருவிரல் போன்ற இடங்களைச் சொல்ல முடியும். ஆனால், பெண் உறுப்பின் உள்பக்கத்தையே ‘ஜி ஸ்பாட்’பகுதியாக மருத்துவம் சொல்கிறது.

இந்த தகவல்களை அனைவரும் அறிந்திருப்பதில்லை; இதை பகிர்ந்தால், என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழுந்தால், நிச்சயம் நீங்கள் சுயநலவாதியே! அப்படி நான் நினைத்திருந்தால், இந்த பதிப்பை நீங்கள் படித்துக் கொண்டிருக்க இயலாது. உண்மையை உணருங்கள் தோழிகளே! மற்றவர் விழிப்புணர்வு அடைய பகிர்வதில் எத்தவறும் இல்லை.