Home பெண்கள் பெண்குறி பெண்ணுறுப்பின் கன்னித்திரை கிழிபடாமல் இருக்க காரணம் என்ன தெரியுமா?

பெண்ணுறுப்பின் கன்னித்திரை கிழிபடாமல் இருக்க காரணம் என்ன தெரியுமா?

264

பெண்களின் அந்தரங்கம்:கன்னித்திரை கிழிபடாமல் இருந்தால் தான் அந்தப்பெண் “செக்ஸ்” அனுபவம் பெறாத கன்னி பெண் என்று நினைக்கிறார்கள். அதில் உண்மை இல்லை என்கிறது மருத்துவம். மருத்துவ ரீதியாக வெறும் 42 சதவீகித பெண்களுக்கு தான், முதல் முறையாக உடலுறவு கொள்ளும் போது கன்னித்திரை கிழிகிறது. 47 சதவீகித பெண்களுக்கு இது எலாஸ்டிக் மாதிரி நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கிறது. உடலுறவு முடிந்ததும் பழையபடி மூடிக்கொள்ளும். இவர்களுக்கு முதல் உறவின் போது கிழியாது. ரத்த கசிவு, வலி எதுவும் இருக்காது. இந்த உண்மையை தடையவியல் நிபுணர்கள்தான் கண்டுபிடித்தார்கள்.

கன்னித்திரை எலாஸ்டிக் தன்மை உள்ளது. இரண்டு வகை பெண்களை தவிர இன்னொரு வகை பெண்களும் உண்டு. 11 சதவீதம் உள்ள இவர்களது கன்னித்திரை மிகவும் மெல்லியதாக இருக்கும். இதனால் சின்ன வயதிலேயே, உடற்பயிற்சி செய்யும் போது, சைக்களில் காலை தூக்கி போட்டு ஓட்டும் போதோ திரை கிழிந்துவிடும். சில பெண்கள் கன்னித்திரை இல்லாமலேயே பிறக்கிறார்கள். என்னதான் விஞ்ஞான வளர்ச்சி உச்சம் தொட்டாலும் சில அடிப்படையான விஷயங்களுக்கு இன்னமும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. அவற்றில் ஒன்றுதான் கன்னித்தன்மை.

சுய இன்பத்தின் போது கை விரலையோ அல்லது வேறு பொருளையோ நுழைப்பதன் மூலம் பெண்கள் கன்னித்திரை கிழிந்து போகலாம் கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும். இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும்.

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் பொருத்தி விடுகிறார்கள் எனத் தெரிகிறது