Home பெண்கள் மாதவிடாய் காலத்தில் துணையுடன் உறவு கொண்டால் ஆண்களுக்கு பேராபத்தா?

மாதவிடாய் காலத்தில் துணையுடன் உறவு கொண்டால் ஆண்களுக்கு பேராபத்தா?

1239

மாதவிடாய் காலத்தில் துணையுடன் உறவு கொள்வதால் ஆண்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமா என்றால் கண்டிப்பாக உயிரே போகும். ஆமாங்க, வாழ்நாள் முழுக்க கூடவே வாழ போகிற பெண்ணின் வலியை கூட புரிந்துகொள்ளாமல், அந்த பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்தால், கூடிய விரைவில் அந்த பெண் புரிந்துகொள்வார் ‘இப்படி ஒரு சுய நலவதியா? இந்த மனுஷன்?’ என்பதை!

ஆமாம். அந்த மூன்று நாட்கள் உதிரம் சிந்தி சோர்வாகி இருப்பார். இந்த நிலையில், தான் ஒரு உதவியாக இல்லாமல் உபத்தரமாகி அவருக்கு தொல்லை தந்தால், உருகிஉருகி காதலித்த மனைவியாக இருந்தால் கூட கோபத்தில் கணவனை வெறுத்து விடுவார்.

பொதுவாகவே பெண்களுக்கு இந்த நேரத்தில் கடுமையான வயிற்றுவலி, முதுகுவலி, மூட் ஸ்விங் எனும் எண்ண தடுமாற்றங்கள் என உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பிரச்சனைகளால் அவதிப்பட்டு கொண்டிருப்பார்கள். அந்த வலிகளையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் அவற்றை கட்டுப்படுத்திக்கொண்டு பல பெண்கள் பணி, குடும்பம் என ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

அதை மதித்து அவர்களுக்கு உறுதுணையாக இல்லாமல் இந்த நேரத்தில் உடலுறவு கொள்ள வேண்டும் என நச்சரித்து கொண்டிருந்தால், கண்டிப்பாக மனைவியின் காதல் முழுக்க முழுக்க கோபமாக மட்டுமே மாறும். பின்னாளில் இந்த கோபத்தால் உங்களுக்கு பேராபத்தே!