Home ஆரோக்கியம் உங்களுக்கு அடிக்கடி வரும் முதுகு வலி பற்றிய அபாயங்கள்..!

உங்களுக்கு அடிக்கடி வரும் முதுகு வலி பற்றிய அபாயங்கள்..!

120

பொது மருத்துவம்:உங்களுக்குத் தீவிரமான முதுகுவலி பிரச்னை இருக்கிறதா..? நடக்கும்போது, கஷ்டத்தை உணர்கிறீர்களா..? உங்கள் காலின் கீழ்த்தசைப் பகுதி வலுவற்று காணப்படுகிறதா..? – உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். ஏனென்றால், இவை முதுகுத் தண்டுக்கு கீழிருக்கும் நரம்பு கொத்து சேதமடைந்ததால் ஏற்பட்டுள்ள பிரச்னையாக இருக்கலாம்..! புரியவில்லையா..?

இந்த நோய்க்கு ‘கவ்டா எகுய்னா சிண்ட்ரோம்’ என்று பெயர். இது ஒரு அரியவகை நோய். இந்த நோயால், முதுக்குத் தண்டுக்கு கீழிருக்கும் பல நரம்புகள் இணைந்த நரம்பு கொத்து பாதிப்படைகிறது. இதனால், இந்த நரம்புக் கொத்து அழுத்தத்திற்கு உள்ளாகி சுருக்கப்படுகிறது. இது, முதுகுத்தண்டின் இயக்கத்தையே பாதிக்கக்கூடும். நரம்பின் வேர்களால் கட்டுப்படுத்தப்படும், அடிவயிற்று இயக்கம் – உட்காருவதற்கான மூட்டுக்கிண்ணங்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும்.

என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்..?
இந்த நோயின் தாக்கத்தால், முதுகுத்தண்டின் ஒவ்வொரு எலும்பையும் இணைக்கின்ற இணைப்புத்தட்டு பாதிக்கப்படக்கூடும். கட்டி, தொற்று, முறிவு அல்லது முதுகுத்தண்டு குழாய் சுருங்குதல் போன்றவை ஏற்படக்கூடும். இவற்றை உடனடியாக சரிசெய்துகொள்ளாவிட்டால், நிரந்தரமாக முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகுதல், அடிவயிறு இறக்கம், இடுப்பெலும்பு கிண்ணம் பாதிப்பு, இனப்பெருக்க உணர்ச்சிகளை இழத்தல் போன்றவை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நோயின் அறிகுறிகள் படிப்படியாக தீவிரமாகி, ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகுதான் நன்கு உணரப்படும். எனவே, இடுப்பெலும்பு கிண்ணப்பகுதி அல்லது அடிவயிற்றுப் பகுதி எலும்புகளின் இயக்கத்தில் ஏதாவது மாறுபாடு இருப்பதாக உணர்ந்தாலோ, சிறுநீரை சிறிது நேரம் அடக்குவதில் ஏதாவது கஷ்டம் இருந்தாலோ உடனடியாக மருத்துவரிடம் சோதித்துக்கொள்வது அவசியம். இதைத்தவிர, கால்கள் மற்றும் புட்டப்பகுதிக்கும் இடையிலான தொடர்புணர்வு குறைவது, உள்தொடைப்பகுதி மற்றும் காலின் பின்பகுதி போன்றவற்றில் உணர்ச்சி குறைவதாகத் தோன்றினாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று சோதித்துக் கொள்வது அவசியம்.

என்ன செய்ய வேண்டும்..?
கவ்டா எகுய்னா சிண்ட்ரோம் நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாது. மேலும், முதுகுவலி தொடர்பான மற்ற நோயின் அறிகுறிகளோடு சேர்த்து குழப்பம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, எம்.ஆர்.ஐ, சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதன் மூலமாகவே இதைப்பற்றித் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த ஸ்கேன்களை எடுத்துப் பார்ப்பதற்கு தனியார் மருத்துவமனைகளுக்கோ அல்லது ஸ்கேன் மையங்களுக்கோ அலையத் தேவையில்லை. அரசு மருத்துவமனைகள் பலவற்றில் தற்போது இந்த ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளன. எனவே, முதற்கட்டமாக ஸ்கேன் செய்து மருத்துவரிடம் நோயின் அறிகுறி குறித்தும், அது நரம்புகளோடு தொடர்பு கொண்டிருக்கிறதா என்பது குறித்தும் அறிந்துகொள்வது அவசியம்.

நரம்புகள் சுருக்கப்பட்டிருந்தால் அல்லது சுருண்டிருந்தால் அறுவைச்சிகிச்சை செய்துகொள்ளலாம். தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கேற்ற ஆண்டிபயாட்டிக்குகள் உள்ளன. கட்டி ஏதாவது ஏற்பட்டு, அதன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருந்தால், ரேடியோதெரபி அல்லது ஹோமியோதெரபி சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும். சிலநேரங்களில், அறுவைச் சிகிச்சைக்கு பின்பும் ரேடியோதெரபி அல்லது ஹோமியோதெரபி சிகிச்சை செய்துகொள்ளலாம். தீவிரமாக பாதிக்கப்பட்ட சிலருக்கு வலி மருந்துகள், பிசியோதெரபி, வளைந்து நிமிரும் உதவிக்காக முதுகில் கட்டுகள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான சிகிச்சைகள் தேவைப்படலாம்.