Home ஆரோக்கியம் இந்த உணவுகளை எடுத்தல் உங்களுக்கு மலச்சிக்கல் வரும்

இந்த உணவுகளை எடுத்தல் உங்களுக்கு மலச்சிக்கல் வரும்

121

பொது மருத்துவ தகவல்:மலச்சிக்கல் ஏற்பட்டாலே அதை பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பலருக்கு கூச்சமும் தயக்கமும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் நாம் இன்று மலச்சிக்கலை ஏற்படுத்தும் நோய்கள் பற்றி பகிர உள்ளோம்.

மலச்சிக்கல் எனப்படுவது சமிபாட்டு பிரச்சினைகளில் ஒன்றே. உணவுக் கழிவுகள் குடலின் மூலம் வெளியேற்றும் போது சிக்கல்கள் ஏற்படுவதனால் பலரும் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சினைக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது.

உணவு உடல் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் உதவுவதுடன் பசியையும் போக்கும். இதில் ஏற்படும் பக்கவிளைவுகளாக வாய்வு, வயிறு ஊதிப் போதல், மலச்சிக்கல் போன்றன ஏற்படும். இக்தற்கு காரணம் நாம் உண்ணும் சில உணவுப் பொருட்களே.

மலச்சிக்கலை ஏற்படுத்தும் உணவுகள் சில:

1. பழுக்காத வாழைப்பழம்.
பழுக்காத வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிகளவில் காணப்படுகின்றது. இது மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றது. நன்றாக கனிந்த பழத்தில் ஸ்டார்ச் குறைவாகவும், நார்ப் பொர்ட்கள் அதிகமாகவும் காணப்படுவதனால் மலச்சிக்கலை குணப்படுத்தி விடும்.

2. துரித உணவு:
துரித உணவுகளில் அதிகளவான கொழுப்பு, உப்பு காணப்படுவதுடன், நார்ப் பொருட்கள் இருப்பதில்லை. இதனால் போதியளவு ஊட்டச்சத்துக் கிடைக்காமல் குடலில் கழிவுகளை வெளியேற்றுவதில் கடினத் தன்மை ஏற்படுகின்றது.

3. ரெட் மீட்:
ரெட் மீட்களான பன்றி, மாடு, செம்மறி ஆட்டு இறைச்சிகளில் அதிகளவான் இரும்புச் சத்து காணாப்படுகின்றது. ஆனால் இவை கழிவுகளை இறுக்கமடியச் செய்து மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றது. அத்துடன் இவற்றில் நார்ப் பொருட்களும் குறைவாகவே உள்ளது.

4. சுத்திகரிக்கப்பட்ட மாவு:
சுத்திகரிக்கப்பட்ட மாவில் முக்கியமான ஊட்டச்சத்துக்களான விட்டமின் பி2, நார்ப் பொருள், இரும்புச் சத்துக்கள் நீக்கப்பட்டு விடுகின்றன. இதனால் உடலிற்கு போதியளவு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. அத்துடன் இதனால் மலச்சிக்கலும் ஏற்ப்டுகின்றது.

5. பதப்படுத்தப்பட்ட உணவு:
மலச்சிக்கலைக் குணப்படுத்துவதற்கு நார்ப் பொருட்கள் அவசியமானது. ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நார்ப் பொருட்கள் இல்லாமையால் மலச்சிக்கல் ஏற்படுகின்றது.

6. கோப்பி:
காலையில் ஒரு கப் கோப்பி குடிப்பதனால் உடலிற்குச் சக்தி கிடைப்பதுடன், இதனால் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இது உடலில் வறட்சித் தன்மை ஏற்படுவதன் மூலம் குடலில் இருந்து கழிவுகளை ஏற்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும்.

7. வெள்ளை அரிசி:
வெள்ளை அரிசியினை சுத்தப்படுத்தி அதன் கோதுகள் நீக்கப்படுவதனால் நார்ப் பொருட்கள் நீங்கி விடும். இதனால் மலச்சிக்கல் ஏற்படும். ஆனால் சிவப்பு அரிசியில் நார்ப் பொருட்கள் அதிகம் இருப்பதனால் மலச்சிக்கலை ஏற்படுத்தாது.

8. பால் பொருள்:
பால் உணவுப் பொருளான மாட்டுப் பால், சீஸ் சாப்பிடுவதனால் அதில் உள்ள புரோட்டின் மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றது. இது குடலில் கழுவுகளை வெளியேற்ருவதில் சிக்கலை ஏற்படுத்துகின்றது. எனவே இவற்றை குறைப்பது சிறந்தது.

9. கொழுப்பதிகமுள்ள உணவுகள்:
அதிகமான கொழுப்பு உணவுகளை உட்கொள்வதனால் உடலிற்கு நன்மையையும் தருவதுடன் சில கெடுதல்களையும் செய்கின்றது. அவகோடா, கடலை வகைகள், ஒலிவ் எண்ணெய், மீன், முட்டை போன்றவற்றில் அதிகளவான் கொழுப்புக்கள் உள்ளன. இவை உடலிற்கு சக்தியைத் தருவதுடன், உடலின் பல உறுப்புக்களையும் பாதுகாக்கின்றது. ஆனல் இதில் குறைவான நார்ப் பொருட்கள் இருப்பதனால் மலச்சிக்கல் ஏற்படுகின்றது.

10. மதுபானம்:
மதுபானம் அதிகமாக உட்கொள்வதனால் சிறுநீருடன் சேர்ந்து அதிக திரவம் வெளியேறுவதனால் உடல் வறட்சி அடைகின்றது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுகின்றது. பெருங்குடலில் போதியளவு நீர் இருந்தால் மட்டுமே கழுவுகளை இலகுவாக வெளியேற்ற முடியும்.