Home ஜல்சா தூண்டி விளையாடும் பெண்கள் – உளவியல் வேசிகள்!

தூண்டி விளையாடும் பெண்கள் – உளவியல் வேசிகள்!

31

Captureகுறிப்பு: இங்கே நாம் பேசப்போகும் விஷயம் கற்பழிப்பு வன்கொடுமை செய்யும் கொடூரமான ஆண்களைப் பற்றி அல்ல! பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களின் செயல்களை ஞாயப்படுத்தும் முயற்சியும் சிறிதும் இல்லை. பேசப்போவதெல்லாம் மிகச் சாதாரண குடும்பங்களில் வாழும் அப்பாவி ஆண்கள் மனதில் பாலுணர்ச்சித் தூண்டுதலை விதைத்து விளையாடும் பெண்களைப் பற்றியும், அத்தகைய பெண்களால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் ஆண்களைப் பற்றியும் தான்!
பாலியல் கொடுமை! ஒரு கொலை! கொடூரக் கொலை!

அது ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சநஞ்சமல்ல.

பெண்களிடம் மிருகமாக நடந்து கொள்ளும் ஆண்களுக்கான தண்டனை என்னென்னவாக இருக்கலாம் என்பது பற்றி தீர்மானிக்க அனைத்து கட்சி ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. சிலர் அத்தகைய ஆண்களுக்கு ‘மரணதண்டனை’ வழங்கிக் கொன்று விட வேண்டுகிறார்கள். சிலர் அத்தகைய ஆண்களின் உறுப்புக்களை ஏதாவது செய்துவிடலாம் என்று விதவிதமான கற்பனைகலந்த, ஆத்திரத்துடன் கூடிய யோசனைகளைச் சொல்லி வருகிறார்கள்.

அவைகள் அத்தனையும் பெண்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கும் ஆண்களை எப்படி தண்டிக்கலாம் என்கிற பேச்சு தான். பெண்களை மதிப்பாக நடத்தும் நல்ல, கண்ணியமான ஆண்களுக்கு அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால் பாலியல் குற்றம் என்றால் பெண்களின் உடல் மீது மிருக உணர்வு கொண்ட ஆண்கள் செய்யும் அத்து மீறல்கள் மட்டுமே எனப்பார்க்கப்படுகிறது.

ஆண்களின் உணர்வுகளோடு பாலியல் ரீதியாக விளையாடும் பெண்களைப் பற்றி அவர்கள் இழைக்கும் குற்றம் பற்றி யோசிப்பது கிடையாது. உதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணை தொடர்ந்து ‘குருகுரு’ எனப் பார்த்தாலே அது ‘ஈவ் டீசிங்’ ஆக கணக்கிட சட்டத்தில் வழி இருக்கிறது. ‘என்னைப் பாலுணர்வுடன் வன்மமாகப் இவன் பார்த்தான்’ என்றால் கூட ‘ஈவ் டீசிங்’ சட்டத்தில் ஒருவனை கைது செய்துவிட முகாந்திரம் இருக்கிறது.

ஆனால் ஆண்களின் பாலியல் உணர்வுகள் மீது கை படாமல் தொட்டு விளையாடுவதும் பாலியல் வன்முறைதான் என்று இவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது!

ஆணோ பெண்ணோ, பாலுணர்வு என்பது இயற்கையானது. அதனைத் தூண்டுவது என்பது தூண்டுபவர்க்கும் தூண்டப்படுபவர்க்கும் இருக்க வேண்டிய உரிமை அல்லது உறவால் மட்டுமே நடக்க வேண்டும். அல்லாதவர்கள் பிறரின் பாலுணர்ச்சியை தூண்டி விளையாட எவ்வித உரிமையும் அல்லாதவர்கள். அந்த விதத்தில் பார்க்கும் போது பொது இடங்களில் அல்லது தனிப்பட்ட முறையில் ஒரு ஆணின் பாலுணர்வை அவனுக்குச் சம்பந்தமில்லாதவர்கள் வெளிப்படையாக தூண்டும் வகையில் நடந்து கொண்டால் அதுவும் பாலியல் வன்முறையே!

பொது இடங்களில், ஒரு ஆணின் பாலுணர்ச்சியைத் தூண்டி விட்டு அதற்கு வடிகால் தர மறுப்பது பாலியல் குற்றமாகக் கருதப்பட வேண்டும். குறிப்பாக சினிமா நடிகைகள் அரை நிர்வாணக் கோலத்தில் ஆட்டம் பாட்டம் போட்டு, ஆண்களை வடிகால் தேடி அலையும் மிருகங்களாக மாற்றி விடும் இந்த தூண்டுதலை – ‘ஆடம் டீஸிங்’ என்றோ அல்லது ஆண்களுக்கெதிராக ‘வடிகால் தராத பாலியல் தூண்டுதல்’ என்கிற பெயரொலோ குற்றமிழைத்தவர்களாகச் சொல்லி தண்டிக்க வேண்டும்.

பொது இடத்தில் ஒரு ஆண் தன் லுங்கியைத் தூக்கி உள்ளாடையை சம்பந்தமில்லாத ஒரு பெண்ணுக்கு வலியக் காட்டினால் கண்டிப்பாக அது ‘ஈவ் டீசிங்க்’ தான். ஆனால் ஒரு பெண் தன் முந்தானையை விலக்கி உள்ளாடையை – மார்பகத்தை – கவர்ச்சியக பொதுவில் காட்டினால் அது ‘ஆடம் டீஸிங்க்’ ஆகாதா? ஆவர் நடிகை என்றால் அது பாலியல் குற்றம் இல்லையா?

ஆண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டுவதில் குற்ற உணர்ச்சியே இல்லாதப் பெண்கள் தூண்டப்பட்ட ஆண்களின் எதிர் வினையை மட்டுமே குற்றமாகச் சொல்வது தான் நடைமுறையில் இருக்கிறது.

பொதுவாக தற்காலத்தில் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் ஆனால் ஆண்கள் மட்டும் மரக்கட்டைகளைப் போல உணர்ச்சிகளின்றி இருந்து பெண்களிடம் தவறாக நடந்து விடாமல் கண்ணியம் காக்க வேண்டும் என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது. இவ்வித போக்கு அப்பட்டமாக ஆண்களின் இயற்கையான பாலுணர்ச்சிகளின் மீது காட்டப்படும் கடும் அலட்சியம், அவமரியாதை என்பதே சரி.

உதாரணமாக ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று கூறிக்கொண்டு பழகுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அந்தப் பெண் ஆணின் தோளில் கைபோட்டு அமர்ந்து பேசுவாள், ஆணின் சட்டைப் பைக்குள் கைவிட்டு அவனது ஏதாவது பொருளை உரிமையுடன் எடுத்துக் கொள்வாள். ஆனால் அதே காரியத்தை ஒரு ஆண் செய்தால் அது உரிமையாகவோ நட்பாகவோ பார்க்கப்படாது.

ஒரு ஆணின் உடல் மீது ‘நட்பு’ என்கிற பெயரில் ஒரு பெண் தானாகவே கைவைத்து உரசினாலும் ஆண் அதனால் தூண்டப்படாமல் அவளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இயற்கையான பாலுணர்வுப்படி அது ஞாயமாக இருக்க முடியாது. ஒரு பெண்ணின் மீது நண்பனாகவே இருந்தாலும் அவன் கை பட்டால் அது அவளது உணர்ச்சியைத் தடுமாற வைக்குமென்றால் ஆணுக்கும் அப்படித்தான் என்பதை பழகும் பெண்கள் மறந்து விடுவார்கள்.

கும்பலாக எங்கேனும் ஆண்கள் உட்கார்ந்திருக்கும் இடங்களில், வயசுப் பெண்கள் அடிக்கடி வளையவந்தால் வீட்டுப் பெரியோர்கள் கடிந்து கொள்வார்கள். “அத்தனை ஆண்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் ஏன் தேவையில்லாமல் வளையவருகிறாய்” என்பார்கள். இது பெண்ணுக்கெதிரான அடிமைத்தனம் அல்ல. ஆண்கள் இருக்கும் இடத்திற்கு பெண்கள் போகக்கூடாது என்கிற கட்டாயமும் அல்ல. ஆனால் ‘ஆண்களின் மனதில் தேவையில்லாமல் உன்னைப் பற்றி நினைக்கும் தூண்டுதலை நீ செய்து விடாதே’ என்பதற்கான எச்சரிக்கை தான் அது.

நம் பாரம்பரியத்தில் ஆண்களின் பாலுணர்வுக்கு தேவையான அளவு மரியாதை கொடுக்கப்பட்டிருந்தது. அந்த உணர்ச்சியைச் சீண்டிப்பார்க்காமல் இருக்கும் பொறுப்பு பெண்களுடையது என்று வரையறுக்கப்பட்டிருந்தது. அதுவும் பெண்களாலேயே கண்காணிக்கப்பட்டும் வந்தது. காரணம் அதனால் முதலில் பெண்ணுக்கு பாதிப்பு, பிறகு குடும்பங்களுக்கு பாதிப்பு, அப்படியே அது பெருகினால் அது ஒரு சமூகத்தின் பாதிப்பு என விரிவடைந்து விடும் என்பதால் வீட்டிலிருந்தே உணர்ச்சிகள் புரிந்து கொள்ளப்பட்டன, கண்காணிக்கப்பட்டன.

ஆனால் இந்த நாகரீக வாழ்க்கை முறையில் அது பெண்ணடிமைத் தனமாக விளம்பரம் செய்யப்பட்டது. ‘அண்களின் பாலுணர்ச்சி பற்றி எங்களுக்கு எந்த அக்கரையும் இல்லை, நாங்கள் எப்படி வேண்டுமானாலும் உடையணிவோம், நாங்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வோம், ஆனால் ஆண்கள் அத்துமீறாமல் இருப்பது அவர்கள் கடமை. எங்கள் பொறுப்பு அவற்றில் எள்ளளவும் இல்லை’ என்ற மனப்பாங்கு பெண்களிடம் பரப்பப்பட்டது. இதனால் பெண்களுடன் பழகும் நிலையில் இருக்கும் சராசரி ஆண்களுக்கு உண்டாகும் உளவியல் ரீதியான பாதிப்பும் , பெண்களோடு பழகும் போது ஏற்படும் உணர்ச்சியின் உந்துதலும், அவை லேசாக கவனிக்கப்பட்டு விட்டால் கூட ஏற்படும் குற்ற உணர்ச்சியும் வெளியே தெரியாத அவஸ்தைகளே ஆகும்.

இறுக்கமாக உடையனிந்து தங்களது மார்பகங்களின் அளவுகளுக்கு விளம்பரம் தேடும் பெண்கள் இன்று சாதாரண குடும்பத்தில் கூட அதிகரித்து வருகிறார்கள். ஆனால் இது போன்ற பெண்கள் முன்னால் நின்று பேசும் எந்த கண்ணியமான ஆணும் தடுமாறாமல் இருக்க முடியாது. ஆனால் அது பற்றி இந்தப் பெண்களுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இருப்பதில்லை. மாராப்பு போடுவதே அடிமைத்தனம் என்று சொல்லி உரையேற்றப்பட்ட இந்தப் பெண்கள், தன் முன் நின்று பேசும் ஆண் வினாடி நேரம் அவளது பெருத்த மார்பை சற்றே உற்று நோக்கி விட்டால் அவனை ஏதோ நாகரீகமற்றவனை, காட்டு வாசியைப் பார்ப்பது போல பார்த்து ஒரு குற்ற உணர்ச்சியை அந்த ஆணுக்கு உண்டாக்கிச் செல்வார்கள்.

இதனால் இந்த ஆண் உள்வெட்கம் அடைகிறான். நீண்ட நாட்கள் ஒரு வித அவமானத்தால் மனம் தவிக்கிறான். இயற்கையாக தனக்கு உண்டாகும் பாலுணர்வு கூட தவறானதோ என்கிற குழப்பத்திற்கு ஆளாகிறான். ஆனால், ஒரு ஆண்மகனை என் உடலுறுப்பை உற்றுப் பார்க்கத் தூண்டிய குற்றம் என்னுடையது என்று எந்தப் பெண்களுக்கும் தோன்றுவதில்லை. தூண்டப்பட்ட ஆண்மகன் அதன் காரணமாக ஒரு பெண்ணை பார்த்தால் தவறு. தூண்டப்பட்ட ஆண்மகன் அதே பெண்ணை காமத்தின் வயப்பட்டு அடைய நினைத்தாலும் தவறு. ஆனால் அதே ஆணின் பாலுணர்ச்சியைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது மட்டும் தவறில்லை.

திறந்த மார்பகத்தோடு சுற்றித் திரிவது தான் பெண் சுதந்திரம் என்று கூறி, திறந்த மார்பகப் போராட்டங்கள் நடத்தும் மேலை நாட்டுப் பெண்ணியச் சிந்தனைகள் நம் நாட்டுக்கு எந்த விதத்திலும் உதவாது. பெண்களின் பாதுகாப்பு கட்டாயமாக வலியுறுத்தப்படும் அதே வேளையில், ஆண்களின் பாலுணர்ச்சிக்கான மரியாதையும் வலியுறுத்தப்பட வேண்டும். ஆண்களின் பாலுணர்ச்சி பொது இடங்களில் தூண்டப்படாமல் பாதுகாப்பதற்கும் தேவையான விழிப்புணர்ச்சி பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் வெறும் பெண்ணியப் பார்வையால் கண்ணைக் குருடாக்கிக் கொண்டு ஒரு சில பெண்கள் நடந்து கொள்ளும் விதம் சமூகபாதிப்பை உண்டாக்குமே அன்றி அது பெண்களின் சுதந்திரத்திற்கான அடையாளமாகாது.

ஆண்கள் மரக்கட்டைகள் அல்ல, ஆண்களின் பாலுணர்ச்சிகளுக்கான மரியாதை வலியுறுத்தப்பட வேண்டும்.

ஆண்களுடன் உறவாடாமல் ஆனால் அவர்களின் பாலுணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அதை சத்தமில்லாமல் வேடிக்கை பார்க்கும் எந்தப் பெண்ணும் ‘உளவியல் வேசிகள்’ ஆவார்கள்! இதைப் பெண்கள் மனதில் கொள்வது அவசியம்!

பெண்கள் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் என்பது அவர்கள் சிந்தனையில் தான் இருக்கிறது.

மரியாதைக்குரிய பெண்களா? உளவியல் வேசிகளா?