Home இரகசியகேள்வி-பதில் நான் ஒரு வருடத்துக்கு முன் சுய இன்பத்தில் பல முறை ஈடுபட்டிருக்கிறேன்

நான் ஒரு வருடத்துக்கு முன் சுய இன்பத்தில் பல முறை ஈடுபட்டிருக்கிறேன்

39

Captureகேள்வி: எனக்கு வயது 19. நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். ஆனால் இன்னும் 2 வருடங்கள் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் இருவரும் 3, 4 தடவை உறவில் ஈடுபட்டிருக்கிறோம்.

அவ்வாறு இணையும்போது எனக்கு இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் விந்து வெளியேறுகிறது.

சுய இன்பத்தின்போதும் இதே நிலைதான். பொதுவாக ஆண்களுக்கு எத்தனை நிமிடங்களில் விந்து வெளியேறும்? எனக்கு ஏதும் நோய் இருப்பதால் இப்படி ஆகிறதா?

பதில்: பதற வேண்டாம். உங்களுக்கு ஒரு பிரச்சி னையும் இருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான ஆண் களுக்கு இதே நிலைதான். இது இயல்பானதே.

ஆனால், உங்கள் இருவர் மீதும் கொண்டிருக்கும் நம்பிக்கையாலேயே உங்கள் இருவரது வீட்டிலும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

திருமணத்துக்கு முன், அதுவும் இந்தச் சின்ன வயதிலேயே உங்களது உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடிக்கொண்டால், இன்னும் இரண்டு வருடங்கள் உங்கள் காதல் உயிர் வாழுமா என்ற சந்தேகம் எழுகிறது.

எந்த ஒரு சந்தோஷத்தையும் அடைந்தபின், அதைத் தாண்டி என்ன இருக்கிறது என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் எழவே செய்யும். காதலுக்கும், காமத்துக்கும்கூட இது பொருந்தும்.

இந்த வயதிலேயே உடல் இன்பம் இருவருக்கும் கிடைத்துவிட்டால், வெகு விரைவிலேயே பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவருக்கு சலிப்பு வந்துவிடும்.

அதுவும் உங்கள் திருமணத்துக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன.

எனவே, உடலுறவைத் தொடர்ந்தீர்களேயானால் உங்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுவிடலாம்.

உங்களுக்குத்தான் உங்கள் வீட் டாரின் சம்மதம் கிடைத்துவிட்டதே! இனி என்ன கவலை? இந்த இரண்டு ஆண்டுகளும் காதலைக் கண்களாலும் வார்த்தைகளாலும் மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இதுவே உங்கள் உறவு நிலைக்க ஒரு உன்னத வழி!

கேள்வி: நாம் சுத்த சைவக்காரர்கள். எனது மகளுக்கு வயது 10. கடந்த மாதம் அவர் பூப்பெய்தி விட்டார். இது குறித்து எமது உறவினர்கள் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர். நடைமுறைப் பிரச்சினைகள் பல இருப்பது ஒரு பக்கம்.

அவரது எதிர்காலத்தில் சில பிரச்சினைகளை – குழந்தைப்பேறு உட்பட – அவர் எதிர் கொள்ள நேரும் என்றும் மித்திரன் மகளிர் மருத்துவம் பகுதியில் வாசித்திருக்கிறேன். அது உண்மைதானா?

பதில்: உண்மைதான் என்றாலும், நீங்கள் பயப்படும் அளவுக்கு ஒன்றும் பெரிய விடயம் அல்ல. ஆனால், ஏனைய குழந்தைகளைக் காட்டிலும் உங்கள் மகளின் ஆரோக்கியம் குறித்து நீங்கள் சற்று அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தற்போதுள்ள பெண் குழந்தைகள் அதிக கொழுப்புள்ள உணவைச் சாப்பிடுவதால் உடல் பருமன் பிரச்சினை வருகிறது. இதில், சைவம், அசைவம் என்ற வேறுபாடுகள் இல்லை. நீங்கள் சைவக்காரர்களாக இருக்கலாம்.

ஆனால், அதிக கொழுப்புள்ள பாற்பொருட்கள் அல்லது பீஸா, பேர்கர் போன்ற பொருட்களைச் சாப்பிட்டிருக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு பருவம் அடையும் சராசரி வயது 13ல் இருந்து குறைந்து 10 ஆகியுள்ளது.

இதன் காரணமாகவே இப்போது பெண்கள் பூப்பெய்வது அதி விரைவாக நடந்து விடுகிறது. இதுதான் உங்கள் மகள் விடயத்திலும் நடந்திருக்கவேண்டும்.

உங்கள் பயத்தில் ஒரு நியாயம் இருக்கிறது. பூப் பெய்தும் பருவம் முன்கூட்டியே வந்து விடுவதால், அனேக பெண் குழந்தைகள் தங்களுக்கு சீக்கிரமாகவே மாதவிடாய் வருவதாகக் கூறுகிறார்கள்.

இவ்வாறு சீக்கிரமே மாதவிடாய் வருவதால் அவர்களுக்கு மன அழுத்தமும், கவனக் குறைவும் ஏற்படுகின்றன. பருமனாக இருக்கும் பெண் குழந்தைகள் தினமும் உற்பயிற்சி செய்யவேண்டும்.

கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால் பருமனான உடல் இருப்பவர்களுக்கு பூப்பெய்வது விரைவில் நடைபெறுவதோடு மட்டுமல்லாமல், கருப்பை நோய், மலட்டுத்தன்மை மற்றும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது.

நகரத்தில் வாழும் இளம் பெண்கள் அதிக கொழுப்புள்ள உணவான பாற்பொருட்கள், பேர்கர் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்வதே இல்லை.

இதனால் அவர்களின் ஹார்மோன் சமநிலை மாற்றமடைந்து சீக்கிரமே மாதவிடாய் ஏற்படுகிறது.

இளம் வயதில் பருவம் அடைவதால் மனரீதியான பாதிப்புகள் ஏற்படும். 10 முதல் 12 வயதுள்ள பெண் குழந்தைகள் அந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வது என்பது பற்றித் தெரியாதவர் களாக இருப்பார்கள்.

இதனால் அவர்கள் மற்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்கையில் தனக்கு மட்டும் ஏன் இவ்வாறெல்லாம் நடக் கின்றது என்று நினைக்கத் துவங்குவார்கள்.

இந்த எண்ணத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்பமாட்டார்கள்.

வீட்டிற் குள்ளேயே அடைந்து கிடப் பதால் பருமன் அதிகமாகி மற்ற நோய்களுக்கு வழி வகுக்கும்.

ஒரு பெண் குழந்தை பருவம் அடையும்போது தாய் அவளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளின் உணவு பழக்கவழக்கத்தை கண் காணிக்க வேண்டும். அவர்களை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

அவர்களுடன் அவர்களுக்கு உடல்ரீதியாக ஏற்படும் மாற்றம் குறித்து பேச வேண்டும்.

கேள்வி: எனக்கு 24 வயது. நான் ஒரு பெண். எனக்கு வீட்டில் திருமணம் பேசி வருகிறார்கள். நான் ஒரு வருடத்துக்கு முன் சுய இன்பத்தில் பல முறை ஈடுபட்டிருக்கிறேன். இதனால் எனது கன்னித்திரை விலகியிருக்குமா என்று சந்தேகப்படுகிறேன்.

இவ்வாறான சூழலில் திருமணம் செய்துகொண்டால் முதலிரவில் ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என்று பயமாக இருக்கிறது. இதனால் பயத்துடனேயே திருமணத்தை நோக்கியிருக்கிறேன்.

பதில்: பெண்கள் சுய இன்பம் காண்பதற்கு கன்னித்திரை வரை போகவேண்டியதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதனால் கன்னித்திரை பாதிக் கப்பட்டிருக்குமோ என்ற உங்களது அச்சம் தேவையற்றது. மேலும் இது இயல்பானது. இதன்மூலம் உங்களுக்கு எதுவித பிரச்சினையும் வரப்போவதில்லை.

ஒருவேளை, சுய இன்பத்தின்போது நீங்கள் அதிக மான தூண்டலுக்கு ஆளாகியிருந்தால் அதேயளவு தூண் டல்தான் உங்களுக்கு உச்சபட்ச இன்பத்தைத் தரும்.

அதற்கு நிகரான தூண்டலை உங்கள் கணவரால் செய்ய முடிந்தால் நல்லது.

அப்படியல்லாத பட்சத்தில் அவரை அந்த அளவுக்கு தூண்டச் செய்வது உங்கள் பொறுப்பு.

கேள்வி: எனக்கு வயது 34. என் கணவருக்கு 37. எமக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். உறவில் நான் எத்தனைதான் ஒத்துழைத்தாலும் அவருக்குத் திருப்தி வருவதில்லை. இதனாலோ என்னவோ அவரைவிட வயது கூடிய, திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல! திருமணமாகாத ஒரு இளம் பெண்ணுடனும் அவருக்குத் தொடர்பு உண்டு. அந்தப் பெண் ஏற்கனவே மூன்று முறை கருக்கலைப்புச் செய்துவிட்டார். என் கணவர் செல்வந்தர். காசு, பணத்துக்குக் குறைவில்லை. என்றாலும், என் வாழ்க்கையில் இன்னும் இரண்டு பெண்கள் நுழைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் ஆசையோடு அவருடன் பேசிக்கொண்டிருந்தாலும், அந்தப் பெண்களில் யார் கூப்பிட்டாலும் உடனே போய்விடுவார். திருமணமான பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வாழ்கிறார். அவர் அழைத்தால் அந்தப் பெண்ணும் வெளிநாடு சென்றுவிடுவார். ஆனால், அந்த இளம்பெண்ணை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.

அவள் காசு வாங்கிக்கொண்டு வேறொருவரைத் திருமணம் செய்துவிட்டால் பரவாயில்லை. என் கணவரையே திருமணம் செய்துகொண்டு வந்துவிட்டால்…? இதுபற்றி என் கணவரிடம் கேட்டால், உறவுகொள்ளும் எல்லாப் பெண்களையும் திருமணம் செய்வேனா என்கிறார். எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. எனது கணவர் எனக்கு வேண்டும். நான் என்ன செய்வது?

பதில்: தலைக்கு மேல் வெள்ளம் போகும்வரை விட்டு விட்டீர்கள். இனி என்ன செய்ய முடியும்? இந்த விடயங்கள் எல்லாம் எப்போது உங்களுக்குத் தெரியவந்தது? அப்போதே அது குறித்து உங்கள் பெற்றோரிடமோ, அவரது பெற்றோரிடமோ பேசியிருந்தால் ஏதேனும் ஒரு மாற்றம் இருந்திருக்கும்.

ருசி கண்ட பூனையை அவ்வளவு இலகுவாக உங்கள் வழிக்குக் கொண்டுவர முடியாது.

ஆனால், திருமணமாகாத அந்தப் பெண் உங்கள் கணவரைத் திருமணம் செய்ய வாய்ப்பில்லை. காரணங்கள் இரண்டு. ஒன்று, உங்கள் கணவர் ஏற்கனவே திரு மணம் முடித்தவர் என்பதால் அவரைத் திருமணம் செய்துகொண்டால் சிக்கல் எழும் என்று உணர்ந்தேயிருப் பார்.

எனவே, முடிந்தவரையில் காசைப் பெற்றுக்கொண்டு தன்னுடைய வாழ்க்கையைத் தேடிச் சென்றுவிடுவார்.

இரண்டாவது, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு அவர் மேல் உங்கள் கணவருக்கு இருப்பது காதல் அல்ல. அந்தப் பெண் மீதான ஈர்ப்பு நாளடைவில் தேய்ந்துவிடும் என்பதை உங்கள் கணவர் அறிந்தேயிருப்பார்.

மேலும், அவரே கூட அதை வெளிப் படையாக உங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இருந்தாலும், உங்கள் கணவரை உங்கள் வசப்படுத்து வது அவசியம். அவர் எதன் மீது எப்படிப்பட்ட விருப்பம் கொள்கிறாரோ அதனை நீங்கள் முதலில் உணர்ந்து கொள் ளுங்கள். முடிந்தால் அது போன்ற சந்தோஷத்தைத் தர முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் நினைத்தால் முடியாததல்ல.

அதன் பின் உங்கள் உறவினர்கள் மூலமாக நீங்கள் போராட வேண்டியிருக்கும். அதற்கு அவர் மசிகிறாரோ இல்லையோ, உங்கள் வீட்டுக்குள் இன்னொரு பெண் வராமல் இருப்பதற்காவது உங்களது முயற்சி வழிசெய்யும்.