Home ஆரோக்கியம் மூளைக்கு சோர்வு ஏற்படாமல் இருக்க‍ நீங்கள் உண்ண‍ வேண்டிய இயற்கை உணவு

மூளைக்கு சோர்வு ஏற்படாமல் இருக்க‍ நீங்கள் உண்ண‍ வேண்டிய இயற்கை உணவு

137

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல‍! எதிலும் எல்லாவற்றிலும் அவர்களது அனுபவத்திலும் அதீத ஆய்வுத் திறத்தாலும் நன்கறிந்த பின் பே நமக்கு பல்வேறு
இயற்கை உணவுகளையும், அது எந்தெந்த உள்ளுறு ப்பை சீராக இயங்க வைக்கும் என்பதையும் சொல்லிச் சென்றுள்ள‍னர். அவற்றில் ஒன்றினை இங்கு காண் போம்.
எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாக வாழைப்பழம் ஒன்றுதான். மேலு‌ம், இத‌ற்கு கால‌நிலை எதுவு‌ம் இ‌ல்லாம‌ல் எ‌ல்லா கால‌ங்க‌ளிலு‌‌ ம் ‌கிடை‌க்கு‌ம் ஒரு பழமும் இதுதான் எ‌ன்பது கு‌றி‌ப்‌ பிட‌த்த‌க்கது.

மேலு‌ம் வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷம் இரு‌ப்பதாக‌க் கூறு‌கிறா‌ர்க‌ள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவ து ‌தினமு‌ம் ‌மூ‌ன்று வேளை உணவு‌க்கு‌ப் ‌பிறகு ஒரு வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்‌டா‌ல் மூளை சுறுசுறு‌ப்பாக இ‌ய‌ங்கு‌ம் எ‌ன்‌கி‌ன் றன‌ர் அவ‌ர்க‌ள்.

மூளையைசுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழை‌ப்பழ‌ம். அதாவது, வாழைப்பழம் மனிதனின் மூளைக் கு தேவையான எல்லா புரதச்சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் 3 இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள் ளது. அதாவது சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளு கோஸ் உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையா ன ஃபைபரையும் அ‌திகமாக‌க் கொண்டு ள்ளது.
ஒரு ம‌னித‌ன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை பெறு‌கிறா‌‌ன் எ‌ன ஆராய்ச்சிகள் தெரிவி க்கின்றன.
வாழை‌ப்பழ‌த்‌தி‌ல் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க்க‌ள் ம‌ட்டு‌ம் ‌ நிறை‌ந்‌தி ரு‌க்க‌வி‌ல்லை, மேலு‌ம், பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய் தடு ப்பு மரு‌ந்தாகவு‌ம்கூட வாழை‌ ப்பழ‌ம் உ‌ள்ளது. எனவே ஒ‌வ்வொரு ம‌னித னு‌ம் ‌‌தினமு‌ம் ஒரு வாழை‌ப் பழ‌த்தையாவது சா‌ப்‌பிடு‌ம் வழ‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்‌ தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
அ‌க்கால‌த்‌தி‌ல் அத‌ற்காக‌த்தானோ எ‌ன்னவோ வெ‌ற்‌றி லையுட‌ன் வாழை‌ப்பழ‌த்தை வை‌த்து‌க்கொடு‌க்கு‌ம் மு றை கடை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ‌ர்களு‌க்கு‌ தெ‌ரியாத தா எ‌ன்ன? முத‌லி‌ல் மல‌‌ச்‌சி‌க்க‌ல் ‌ வியா‌தி‌யி‌ல் இரு‌ந்து ம‌னிதனை‌க் கா‌‌ப்பா‌ற்று‌ம் இய‌ற்கை மரு‌ந்து வாழை‌ப்பழ‌ம் தா‌ன்.

வாழைப்பழத்தில் அதிகமான பைபர் இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழி செய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கி விடுகிறது. நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பி விட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்து க் கொள்வார்கள்.
உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவு ள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடி‌த்தா‌ல் சோ‌ம்ப‌ல் போயே‌ப் போ‌ச்சு.
மேலு‌ம் நெ‌ஞ்செ‌ரி‌ப்பு, உட‌ற்பரும‌ன், குட‌ற்பு‌ண், உட‌லி‌ல் வெ‌ப்ப‌ நிலையை ‌சீராக வை‌க்கவு‌ம், மன அழு‌த்த‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு வாழை‌ப்பழ‌ம் ந‌ல்லமரு‌ந்தாக உ‌ள்ளது. புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்க‌ ள் புகை‌ப்‌பிடி‌த்தலை ‌ விடு‌‌ம்போது வாழை‌ப்பழ‌ம் அ‌திகமா க சா‌ப்‌பி‌ட்டா‌ல் எ‌ளி‌தி‌ல் ‌விடுபடலா‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்படு‌கி றது.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.