Home இரகசியகேள்வி-பதில் என் கணவரால் என்னை திருப்தி படுத்தவே முடியவில்லை தீர்வு சொல்லுங்கள் டாக்டர் ?

என் கணவரால் என்னை திருப்தி படுத்தவே முடியவில்லை தீர்வு சொல்லுங்கள் டாக்டர் ?

405

தீர்வு சொல்லுங்கள் டாக்டர்:வணக்கம் டாக்டர், உங்கள் அரிய சேவைக்கு நன்றி. நான் திருமணம் முடித்து ஒரு வருட காலமாகிறது. எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தடவையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும்.

ஆனால் மனைவிக்கு அதில் இஷ்டமில்லை. இதற்கு நான் என்ன செய்ய முடியும்?

பதில், ஒரு நாளைக்கு எத்தனை தடவை உறவில் ஈடுபட வேண்டும் என்று நிர்ணயிக்கப்படவில்லை..ஒரு விஞ்ஞான ரீதியான கருத்துக் கணிப்பில் திருமனவானவர்களில் நான்கு வீதமானவர்கள் ஒவ்வொரு நாளும் உறவில் ஈடுபவதாக அறியப்பட்டுள்ளது.

அதேபோல் அமெரிக்காவில் அவரேஜாக திருமணமாகி ஒன்றாக இருப்பவர்கள் வருடத்திற்கு .150 முறை உறவில் ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது. இது பற்றி எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்களின் லிங்க் ஏதாவது இருந்தால் தெரிந்த நண்பர்கள் தயவு செய்து சொல்லவும்.

நண்பரே உங்கள் கேள்விக்கு பதிலாக சொல்வது.. நாளைக்கு எத்தனை முறை உறவு கொள்ளலாம் என்பது வைத்தியர் தீர்மானிப்பதல்ல. காரணம் உங்கள் மனைவியோடுஉறவு கொள்வதென்பது சாதாரண உடற் தொழிற்பாடு..

இதனால் எந்த விதமான பாதிப்புக்களும் இல்லை. நீங்கள் எத்தனை ,முறை உறவு கொள்ள வேண்டும் என்பது உங்கள் மனைவியோடு சேர்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது. ஆண்களின் உடலைப்போல அல்ல பெண்களின் உடல்..மாதவிடாய் காரணமாக அவர்களின் உடலில் ஹார்மோன்களின் அளவு நாளுக்கு நாள் வேறுபாடும்.

இதனால் அவர்களின் உடல் நிலையம் உணர்வும் நாளுக்கு நாள் வேறுபட்டதாகவே இருக்கும். ஆண்களில் அந்தளவுக்கு பெரிதளவான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் அவர்களால் இலகுவாகஉறவில் ஈடுபட்டு விட முடியும்.

ஆனால் பெண்களில் அது அவ்வளவு சாத்தியமில்லை..(இருந்தாலும் விதிவிலக்கான பெண்களும் உள்ளார்கள்) பெண்களின் இந்த உடல் நிலை/ மனநிலை மாற்றம் கடவுள்/ இயற்கையினால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட கொடையாகும். அதாவது எல்லாப் பெண்களுக்கும் கரு முட்டை வெளிவரும் காலப் பகுதியில் உடலுறவின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

இது கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பதற்கான உடலின் மாற்றமாகும். அதே போல் சில நாட்களில் அவர்களின் மனநிலை உறவில் நாட்டம் குறைந்ததாக இருக்கும். இது பெண்ணுக்கு பெண் வேறுபடுவதால் ,கணவன் மனைவியின் சரியான புரிந்துணர்வு ஒவ்வொரு தம்பதியினருக்கும் முக்கியமானதாகும்.

இயற்கையாக ஏற்படும் உங்கள் மனைவியின் மன நிலை மாற்றத்தை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு அதற்குரிய மரியாதை கொடுத்து சில நாட்களுக்கு உங்கள் உணர்வுகளை அடக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.அதுவே ஒரு கணவனின் கடமையுமாகும்.

அவ்வாறு இல்லாமல் உங்கள் ஆசையை ஒவ்வொரு நாளும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் உணர்வுகளை உங்கள் மனைவி மேல் திணித்தால் அது சட்டப்படி கூட கற்பழிப்புக்குஒப்பானது..

ஏனென்றால் சில நாடுகளில் மனைவியானாலும் சம்மதம் இல்லாமல் உறவில் ஈடுபடுவது கற்பழிப்புக்கு ஒப்பான குற்றமாகவே கருதப்படும்.

பாலுறவில் மன அழுத்தம் வேண்டாம்!
பொதுவாக வாழ்க்கையில் கணவன் – மனைவி பந்தம் அல்லது இல்லறம் – தாம்பத்யம் என்பது புனிதமானது அதனைத் தவிர்த்து மனித வாழ்க்கை அமைவதில்லை என்பதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே பார்த்தோம்.

பலருக்கு தாம்பத்ய வாழ்க்கையைப் பற்றிய பல எதிர்பார்ப்புகளும், அதே அளவுக்கு சந்தேகங்களும் இருக்கலாம்.

என்னதான் உடலளவில் பலசாலியாக இருப்பவர்களும், முதலிரவு நாளில், மனைவியுடன் தனிமையில் தள்ளப்படும்போது, ஒருவித அச்சம், பீதி இருப்பது இயற்கையே. பலருக்கு முதலிரவை நினைத்தே ஒருவித பயம் ஏற்படக்கூடும், இந்த பயம் ஆண்/பெண் இருபாலருக்கும் இருப்பது இயல்பே.

வேறு சிலருக்கு முன் கூட்டியே விந்தணு வெளியேறி விடுமோ? முழு அளவில் பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்ள முடியாதோ? என்பன போன்ற பலவாறான சந்தேகங்கள் எழலாம். அந்த சந்தேகங்கள் உண்மையாகக் கூட இருக்கலாம்.

ஆனால், பாலுறவுப் புணர்ச்சியைப் பொருத்தவரை இருவரும் ஒருங்கே, ஒரே நோக்கத்துடன் மாற்று சிந்தனைகளுக்கு இடம் அளிக்காமல் புணர்ச்சியில் ஈடுபடுதல் அவசியம். வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டாம்.

அப்படியே உங்களுக்கு ஏதேனும் குறை இருப்பதாக, இருபாலரில் யாராவது உணர்ந்தால், திருமணம் ஆகி ஓரிரு மாதங்களுக்குள் உரிய மருத்துவரை அணுகி உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணவும்.

முதலில் மன அழுத்தம் அறவே கூடாது. மனதை இலேசாக வைத்துக் கொண்டு, பாலுறவுப் புணர்ச்சியை மேற்கொள்ளுங்கள். ஒருவித பயம் அல்லது அழுத்தத்துடன் நீங்கள் புணர்ச்சி கொள்வீர்களானால், அது உங்களுக்கும் திருப்தி அளிக்காது.

உங்களின் துணையையும் திருப்தி கொள்ளச் செய்யாது. எனவே கவலையின்றி இருங்கள். களிப்புடன் பாலுறவை வைத்துக் கொள்ளுங்கள்.
————————————————–
*டாக்டர், எனக்கு இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம் ஆகப் போகிறது. ஆனால் எனக்கு இரண்டு நிமிடத்தில் விந்து வெளியேறி விடுகிறது. இதனால் பயமாக இருக்கிறது. கல்யாணத்தை நிறுத்தி விடலாமா அல்லது ஊரை விட்டு ஓடி விடலாமா என்று கூட தோன்றுகிறது.

*வணக்கம் மருத்துவர் அய்யா, என் கணவரால் என்னை திருப்தி படுத்தவே முடியவில்லை. அவரின் ஆணுறுயை செலுத்திய உடனே, அவருக்கு விந்து வந்து விடும். அத்தோடு எல்லாம் முடிந்து விடும். இதற்கு தீர்வு என்ன? தயவு செய்து சொல்லுங்க. இல்லை என்றால் என் பார்வை வேறு ஆண்கள் பக்கம் போயி நான் வழி தவறி போயி விடுவேன் என்று தோன்றுகிறது.

மருத்துவரின் பதில்:

இன்னும் பல நூற்றுக்கணக்கான பேர் இதே கேள்வியை கேட்டு இருக்கிறீர்கள். நீங்கள் பெண்ணாக இருந்து, உங்கள் கணவருக்கோ இந்தப் பிரச்சனை இருந்தால் முதலில் அவரிடம் பேசி இது ஒரு பிரச்சனை என்பதை புரிய வையுங்கள். பிறகு கீழே சொல்லி உள்ள தீர்வை அவர் பின்பற்ற உதவி செய்யுங்கள்.

ஆண்களே! கிட்டத்தட்ட 45% ஆண்களிடம் இந்தப் பிரச்சனை உள்ளது. முதலில் உங்களுக்கு இந்தப் பிரச்சனை உண்மையாகவே உள்ளதா என்று கண்டு பிடியுங்கள். நீங்கள் குறைந்தது எட்டு நிமிடம் தாக்குப் பிடித்தால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை. அதற்கு குறைவான நேரத்தில் விந்து வெளியேறினால், அதை குணமடைய செய்ய, கீழே படியுங்கள்.

1) முதலில், ஒரு தனியறைக்கு செல்லுங்கள். அங்கே உங்கள் கைபேசி, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் இல்லாமலோ, அல்லது அவற்றை நிறுத்தி விடுங்கள். இந்த பயிற்சியை எவ்வளவு கவனமாக செய்கிறீர்களோ, அந்த அளவு நீங்கள் காமத்தில் நீடிக்கலாம். அதே போல, அடுத்த நான்கு வாரங்களுக்கு, தினமும் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும் என்பதையும் நினைவு கொள்ளுங்கள்.

2) இப்போது சுய இன்பம் செய்யத் தொடங்குங்கள். உங்கள் கைகளை வைத்து, மேலும் கீழுமாக ஆட்டி கை அடியுங்கள். நீங்கள் தலையணை, அல்லது மற்ற மிருதுவான பொருட்களின் மீது உங்கள் ஆண் குறியை தேய்த்து சுய இன்பம் செய்பவராக இருந்தால், அப்படி செய்யாதீர்கள். உங்கள் கைகளை வைத்தே, மேலும் கீழுமாக ஆட்டுங்கள். ஏனென்றால், பெண் குறியில் விட்டு ஆட்டுவது போலவே இந்த செயல் இருக்கும்.

3) கண்களை மூடிக்கொண்டு சுய இன்பம் செய்யுங்கள். வழக்கமாக நீங்கள், இணையங்களிலோ அல்லது புத்தகங்களிலோ ஆபாச படம் பார்த்து கை அடிப்பவராக இருந்தால், இந்தப் பயிற்சியின் போது அதை செய்யாதீர்கள். கண்கள் மூடி, உங்கள் கற்பனையை மட்டுமே பயன்படுத்துங்கள், இது உங்களை கவனமாக வைத்திருக்க உதவும்.

4) சரி, இதுதான் முக்கியமான கட்டம். நீங்கள் சுய இன்பம் செய்யும் போது, உங்கள் லேசாக துடிக்கிற மாதிரியோ, அல்லது லேசாக கூசுவது போலவோ இருக்கும். இந்த நிலை உங்கள் விந்து வெளியேறுவதற்கு சில நொடிகளுக்கு முன்னால் நடக்கும். இந்த நிலையை நீங்கள் படு கவனமாக கண்டு கொள்ள வேண்டும். இந்த நிலைக்கு பிறகு ஒரு சில நொடிகளில் உங்களுக்கு விந்து வெளியேறும் நிலை ஏற்படும்.

5) இந்த நிலையை கண்டு கொண்டீர்களா? அடுத்த சில நாட்களுக்கு சுய இன்பம் செய்யுங்கள். அப்படி செய்யும்போது, இந்த நிலையை உணர்வதிலேயே குறியாக இருங்கள். இந்த பயிற்சிக்கு இது ரொம்ப அவசியம்.

6) இப்போது சில நாட்கள் கடந்திருக்கும். அந்த நிலையை கண்டு கொள்வதில் கற்று தேர்ந்து விட்டீர்கள். இப்போது, வழக்கம் போல தனியறையில் உட்கார்ந்திருப்பீர்கள். இப்போது கை அடிக்கத் தொடங்குங்கள். இப்போது அந்த கூசும் அல்லது துடிக்கும் நிலை வந்ததும் 10-25 நொடிகளுக்கு நிறுத்தி விடுங்கள். முதலில் இது உங்களுக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் இந்த நிலை வந்ததும் 10-25 நொடிகளுக்கு உங்கள் தொடாமல் விட்டு விடுங்கள்.

7) 10-25 நொடிகளுக்கு பிறகு, மறுபடி கை அடிக்கத் தொடங்குங்கள். அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு மறுபடி அந்த கூசும் நிலை வந்ததும், மறுபடி கை அடிப்பதை நிறுத்தி விடுங்கள். மறுபடி 10-25 நொடிகளுக்கு பிறகு சுய இன்பம் செய்து, இந்த முறை இடையில் நிறுத்தாமல் உங்கள் விந்தை வெளியேற்றுங்கள். அடுத்த சில நாட்களுக்கு இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்.

8 அடுத்த இரண்டு வாரங்களுக்கு சுய இன்பம் மூலமாக இந்தப் பயிற்சியை செய்யுங்கள். பழகப் பழக, இடை இடையே நிறுத்தி பின் ஆரம்பிப்பதை அதிகப் படுத்தலாம். அதாவது, இரண்டு முறை நிறுத்தி மூன்றாவது முறை விந்தை வெளியேற்றி வருகிறீர்கள். இதை அப்படியே நான்கு, ஐந்து, ஆறு முறை என்று நிறுத்தப் பழகுங்கள். எட்டு முறை வரை நீங்கள் அந்த கூசும் நிலையில் நிறுத்தி பின் மறுபடி சுய இன்பம் செய்யலாம். உங்கள் சுய இன்பத்தின் மொத்த நேரம், கிட்ட தட்ட ஒன்பது நிமிடம் நீடித்தால் நீங்கள் இப்போது உங்கள் மனைவியுடன் உடலுறவு கொள்ள தயார் நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

9) உங்கள் மனைவிக்கோ அல்லது காதலிக்கோ, உங்களின் பிரச்சனை தெரிந்திருந்தால், அவரிடம் இந்த பயிற்சியை பற்றி எடுத்து சொல்லி, அவர்களையும் ஒத்துழைக்க சொல்லலாம். என் அனுபவத்தில் சொல்லுகிறேன், கிட்ட தட்ட எல்லா பெண்களும், உங்களுக்கு சீக்கிரமாக விந்து வெளியேறுவதை தீர்க்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

10) இந்த பயிற்சியில் நீங்கள் ஏற்கனவே தேர்ந்து விட்டதால், அடுத்த கட்டம் இதனை உங்கள் துணைவியோடு உடலுறவு கொள்வது தான். புணர ஆரம்பியுங்கள். அந்த குறிப்பிட்ட நிலை வந்ததும், 10-25 நொடிகளுக்கு நிறுத்தி, பின் மறுபடி தொடர்ந்து புணருங்கள்.

11) தன்னம்பிக்கையோடு இருங்கள். முக்கால்வாசி ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மைதான் காரணமாக இருக்கிறது. காமத்தின் போது தன்னம்பிக்கை என்பது நீங்கள் நினைப்பதை விட முக்கியமானது. உங்கள் துணைவியுடன் இதைப் பழகும்போது, துரிதமாக விந்து வெளியேறிவிட்டால், பின் வாங்கி விடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

பின் குறிப்பு: இது என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல. “மாஸ்டர்ஸ் அண்ட் ஜான்சன்” என்ற மருத்துவர்களின் கண்டுபிடிப்பாகும்.