Home பாலியல் இந்த நாட்களில் உடலுறவின் போதும் கர்ப்பத்தை தவிர்க்க முடியும்!

இந்த நாட்களில் உடலுறவின் போதும் கர்ப்பத்தை தவிர்க்க முடியும்!

69

உடலுறவு என்பது இயற்கை அளித்த வரம் என்றாலும், கேட்காமல் இன்னொரு வரத்தையும் சேர்த்தே கர்ப்பத்தின் மூலம் தந்துவிடுகிறது. ஆனால், ஒரு சிலர் உடலுறவின் மீது நாட்டம் கொண்டாலும், உள்ளத்தின் வேண்டுகோளால் கர்ப்பம் என்பதை தவிர்க்க விரும்புகின்றனர். குறிப்பாக ஓரிரு குழந்தையை பெற்றுக்கொண்ட கணவன் – மனைவிகள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு கர்ப்பத்தை தவிர்க்க ஆசைப்பட, உடலுறவு என்பது அவர்கள் வாழ்க்கையின் அங்கமாக என்றுமே இருந்து வருகிறது. எனவே, எந்த நாட்களிலெல்லாம் உடலுறவு கொள்வதன் மூலம் கர்ப்பத்தை தவிர்க்க முடியும் என்பதை ஒரு ஆண் மற்றும் பெண் தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த பதிவை படித்தறிவதன் மூலம் பாதுகாப்பான உடலுறவால் நீங்களும் கர்ப்பத்தை தவிர்க்கலாமே!

எப்படி கணக்கிடுவது?
உங்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் முதல் நாளிலிருந்து அடுத்த மாதம் எப்போது மாதவிடாய் மீண்டும் ஏற்படுகிறது என்ற தேதியை தெரிந்துக்கொள்ளுங்கள். இவற்றுள் பாதுகாப்பான மாதவிடாய் நாட்களாக 1 முதல் 7 வரையில் அமைகிறது. இந்த நாட்களில் செக்ஸ் வைத்துக்கொள்வதால் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு என்பது குறைவு. ஆனால், இந்த நாட்கள் என்பது எல்லா பெண்களுக்கு ஒரே மாதிரி இருப்பதுமில்லை. அது அவரவர் மாதவிடாய் நாள் நீட்டிப்பை பொறுத்தே அமைகிறது. பொதுவாக சாதாரணமான மாதவிடாய் என்பது 28 அல்லது அதற்கு குறைவான நாளுக்குள் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டுவிடும். ஒருவேளை 28 நாட்களை கடந்து உங்கள் மாதவிடாய் ஏற்படுமெனில் அப்போது செக்ஸ் வைத்துக்கொள்வது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.

பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 3 நிலைகள் எது?
அண்டவிடுப்புக்கும் முன் அல்லது நுண்குமிழ் நிலை:
இந்த நிலை என்பது ஒரு பெண்ணின் 2 மற்றும் 14ஆவது நாளில் காணப்பட, உங்கள் உடலிலிருந்து ஹார்மோன்கள் வெளியாக முட்டையை தூண்டி கருப்பை வளர உதவுகிறது. இந்த ஹார்மோன்கள் கருப்பையை தடிமனாக்க இதனால் கருத்தரிக்கும் முட்டையையும் பெறுகிறது. இந்த நிலையை எஸ்ட்ராடியோல் எனப்படும் ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது.

அண்டவிடுப்பு நிலை:
இந்த நிலை என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் இடைப்பட்ட நாட்களில் ஏற்பட, கருப்பை நுண்குமிழ் திறக்க கருத்தரிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தும் முட்டைகள் வெளியாகிறது. இந்த நிலையில் ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு என்பது அதிகம் காணப்படுகிறது.

அண்டவிடுப்புக்கு பின் நிலை:
இந்த கடைசி நிலையில் தான் ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதும் அல்லது அடுத்த மாதவிடாய்க்கு தயாராவதும் உறுதி செய்யப்படுகிறது. இந்த நிலை என்பது 10 முதல் 16 நாட்கள் வரை காணப்பட, சராசரியாக 14 நாட்களும் அமைகிறது. ஒருவேளை 12 நாட்களுக்கு குறைவாக இந்த நிலை காணப்படுமெனில் அப்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு என்பது குறைவாக அமைகிறது. ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மாதவிடாய் என்பது 26 மற்றும் 32 ஆவது நாளில் வர, இந்த நிலை என்பது 12 மற்றும் 19ஆவது நாட்களில் காணப்படும்.

அதாவது ஆணின் விந்து 3 முதல் 5 நாட்கள் வரை பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் தங்கிவிடும். இதனால் கர்ப்பம் தரிக்க அதிகம் வாய்ப்பிருக்க, அண்டவிடுப்பு நாளிலிருந்து ஐந்து நாட்கள் முன்னதாக வரை அதுவும் அமைகிறது. ஆனால், பெண்ணின் கருப்பை வெளியிடும் முட்டை என்பது 24 மணி நேரங்களுக்கே வாழும். ஒருவேளை இந்த 24 மணி நேரத்திற்குள் விந்தணுக்களுடன் முட்டை இணையாவிட்டால் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இதனால் தான் ஒரு சிலருக்கு கருத்தரிக்க முடியாமல் போவதற்கு காரணமாக இருக்கிறது.

நீங்கள் கருத்தரிக்க ஆசைக்கொண்டால் ஒரு சில நிலைகளில் இருப்பதன் மூலம் முட்டையை விந்துணுக்களுடன் சேர்த்திட உதவலாம்.