Home ஜல்சா கௌரியுடனான எனது இல்லற உறவு: மனம் திறக்கிறார் நடிகர் ஷாருக்கான்

கௌரியுடனான எனது இல்லற உறவு: மனம் திறக்கிறார் நடிகர் ஷாருக்கான்

17

625-0-560-350-160-300-053-800-668-160-90-1பாலிவுட்டின் பாதுஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் தனது இல்லற வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.

ஷாருக்கான், கௌரி ஆகிய இருவரும் பாலிவுட் உலகின் சிறந்த தம்பதிகளாக வலம் வருவதற்கு காரணம் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் உண்மையான அன்பே காரணம்.

தங்கள் இல்லற வாழ்க்கை குறித்து ஷாருக்கான் கூறியதாவது, ஓர் இல்லறம் என்பது முழுமையடைவது குழந்தைகளின் பிறப்பில் தான். “கௌரியுடனான எனது இல்லற உறவு” வேகமடைந்தது எங்கள் குழந்தைகள் பிறந்த பிறகு தான்.

எங்கள் குழந்தைகளின் வளர்ப்பில் நாங்கள் கவனம் செலுத்த ஆரம்பித்த போதுதான். வாழ்வில் வேகம் அதிகரித்தது.

எனக்கு மூன்று குழந்தைகள், கையாள கடினமான 18 வயது மகன், எழில் நயம் வாய்ந்த 16 வயது மகள், மற்றும் மூன்று வயது குட்டி கேங்க்ஸ்டர்.

எங்களின் எண்ணம் எப்போதும் எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை எப்படி மிளிரவைக்க வேண்டும் என்பதை சார்ந்து தான் இருக்கும். எங்கள் குழந்தைகள் தான் எங்களது மையப்புள்ளி. எங்கள் உலகமே அவர்கள் தான்.

பொது வாழ்வில் தொடர்புடையதால், நான் மற்றும் எனது மனைவியுடனான வாழ்க்கை சற்று மன அழுத்தம் அதிகமாகவும் இருக்கும். ஓர் நடிகனாக இல்லறத்தை நடத்திக் கொண்டுசெல்வது சற்று கடினம் தான்.

எங்களுக்கான தனி வாழ்க்கை ஒன்று இருக்கிறது. அந்த தனிப்பட்ட வாழ்க்கையும் அடிக்கடி கேள்விக்குறியாக வந்து நிற்கும். அந்தளவிற்கு மன அழுத்தம் அதிகரிக்கும். எங்களுக்குள்ளான இடமே அவ்வப்போது கிடைக்காது.

இந்த விஷயத்தில் கௌரி மிகவும் அழகாக தன் வாழ்க்கையை கையாள்வார். அவர் எப்போதுமே தன்னை ஓர் பெரிய நடிகரின் மனைவியாக கருதிக் கொள்வது இல்லை. அவருக்கான இடத்தை அவர் சரியாக தக்கவைத்து கொள்கிறார்.

எனது சினிமா வாழ்வில் எழும் கிசுகிசுக்கள் குறித்து கௌரி எப்போதும் சந்தேகப்பட்டது கிடையாது. அதை பெரிதுப்படுத்தி கூறியது கிடையாது. என்னிடம் அது குறித்து விவாதம் நடத்தியது கிடையாது. எனது தொழில் பற்றி நன்கு அறிந்து அது சார்ந்த அவர் எப்போதும் தலையிட்டது கிடையாது.

கெளரி தனது தனி அடையாளத்தை மையப்படுத்தி வாழ்ந்து வருவது தான். அவரையும், என்னையும் இன்று வரை மகிழ்ச்சியான உறவில் இணைத்து வைத்துள்ளது என கூறியுள்ளார்.