Home பெண்கள் தாய்மை நலம் பெண்களின் கர்ப்பத்தில் ஏற்பாடும் ஆபத்துகள் தகவல்

பெண்களின் கர்ப்பத்தில் ஏற்பாடும் ஆபத்துகள் தகவல்

82

தாய்நலம்:கர்ப்பம் என்பது அற்புதமான, வலி நிறைந்த மற்றும் மென்மையான ஒரு செயலாகும். மற்றொரு மனிதனின் வாழ்வு அவரின் தாயை சார்ந்திருக்கும் அழகிய தருணம். உங்கள் கர்ப்பகாலத்தில் நீங்கள் பலவற்றை அறிந்து வைத்திருக்கவும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டும். ஏதேனும் ஒன்று தவறானால் ஏற்படும் அறிகுறிகள் பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இங்கு கர்ப்பகாலத்தில் ஆபத்தை ஏற்படுத்த கூடிய 5 அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்.

1 அதிக இரத்தப்போக்கு
கருத்தரித்த முதல் இரண்டு மாதத்தில் அதிக இரத்தப்போக்கு மற்றும் வயிற்றில் அதிக வலி ஏற்பட்டால், கரு கருக்குழாயில் கரு வளர்ந்திருப்பதன் அறிகுறியாகும். கருவானது கருப்பையில் வளராமல், கருக்குழாயில் வளர்வதையே இடம் மாறிய கர்ப்பம் அல்லது கருக்குழாய் கருவளர்ச்சி என்கிறோம். இதை கண்டுபிடித்து தக்க சிகிச்சை எடுக்கவில்லை என்றால், அது தாய்க்கும் சேய்க்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

2 குழந்தையின் அசைவு
குழந்தை கருவில் இருக்கும் போது நகர்வதும், உதைப்பதும் ஆரோக்கியமான குழந்தைக்கான அறிகுறியாகும். ஆனால், உங்கள் குழந்தையின் அசைவுகள் குறைந்திருந்தாலோ அல்லது அசைவுகள் இல்லாமல் இருந்தாலோ, அது கவலைக்குரிய காரணமாகும். இது உங்கள் குழந்தை ஆபத்தில் இருப்பதற்கான அறிகுறியாகும். பொதுவாக இரண்டு மணி நேரத்தில் குழந்தை உங்களை எதனை முறை உதைக்கும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். அதை விட மிகவும் குறைவாக இருந்தால், மருத்துவ ஆலோசனையை நாடுங்கள்.

3 உயர் இரத்த அழுத்தம்
சில சந்தர்ப்பங்களில், இரத்தில் கலந்திருக்கும் நச்சு தன்மை அல்லது கர்ப்பகால வலிப்பு போன்றவை உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். இது கர்ப்பத்தின் 20-தாவது வாரத்தில் ஏற்படக்கூடியது. மேலும், மங்கலான பார்வை, தலைவலி மற்றும் வயிற்று வலி ஆகியவை உயர் இரத்த அழுத்தத்திற்கான பொதுவான அறிகுறிகளாகும். பெரும்பாலான சமயத்தில், குழந்தையை பிரசவிப்பதே இதற்கான சிறந்த சிகிச்சையாக கருதப்படுகிறது. உங்களது கர்ப்பகாலத்தில் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முயற்சியுங்கள். இதற்கான மருத்துவ பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.

4 குமட்டல் மற்றும் வாந்தி
கர்ப்பகாலத்தில் ஏற்படும் தொடர்ச்சியான குமட்டல் மற்றும் வாந்தி பேறுகால மிகை வாந்தியின் அறிகுறியாக இருக்கலாம். இது பெருபாலும் காலை நேர சோர்வு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். தொடர்ச்சியான குமட்டல் மற்றும் வாந்தியால், நீர்போக்கு மற்றும் உடல் எடை குறைதல் போன்றவை ஏற்படும். மருத்துவர் உங்களை மென்மையாக உணவு அட்டவணையை மேற்கொள்ள சொல்லி இருக்கலாம். ஆனால் அது பலனளிக்காத பட்சத்தில் உங்களுக்கு மருத்துவமனையில் நரம்பு வழியாக உணவு செலுத்தும் நிலை ஏற்படலாம். எனவே, நீங்கள் காலை நேர சோர்வுடன், குமட்டல் மற்றும் வாந்தியை தொடர்ந்து உணர்ந்தால், மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள்.

5 பனிக்குடம் உடைதல்
உங்கள் பிரசவ தேதிக்கு முன்பே பனிக்குடம் உடைதல் ஏற்படுவதை, முன்கூட்டியே பனிக்குடம் உடைதல் என்கிறார்கள். இதை கண்டிப்பாக மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும். இது குறைமாதத்தில் குழந்தை பிறப்பது மற்றும் நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. சில நேரங்களில், உங்கள் பிறப்புறுப்பில் இருந்து சிறுநீருக்கு பதிலாக அமினோடிக் திரவம் வெளியேறும். உங்கள் பிரசவ தேதிக்கு முன்னால், ஏதேனும் திரவம் வெளிவந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.