Home இரகசியகேள்வி-பதில் உடலுறவுக்குப் பின்னும் மனைவி சுயஇன்பம் செய்து உச்சக்கட்டத்தை அடைவதை தடுக்க முடியாதா?

உடலுறவுக்குப் பின்னும் மனைவி சுயஇன்பம் செய்து உச்சக்கட்டத்தை அடைவதை தடுக்க முடியாதா?

228

உடலுறவுக்குப் பின்னும் மனைவி சுயஇன்பம் செய்து உச்சக்கட்டத்தை அடைவதை தடுக்க முடியாதா?

நானும் என் மனைவியும் பத்து வருடங்களாக மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். உடலுறவின்போது என் மனைவி இதுவரை உச்சக்கட்டத்தை அனுபவித்ததில்லை.
கடந்த சில வருடங்களாக உடலுறவுக்கு முன்பு, உச்சக்கட்டத்தை அடைவதற்காக என் முன்னிலையில் சுய இன்பம் அனுபவிக்கிறாள். அவளது தோழிகள் அனைவரும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதாகவும், தான் மட்டுமே ஏமாற்றப்படுவதாகவும் சில காலமாக அவள் என் மீது குற்றம் சாட்ட ஆரம்பித்திருக்கிறாள்.

எனக்கும் அது குற்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. என் மனைவி திருப்திகரமான உச்சக்கட்டத்தை அடைந்தாள் என்பதை எப்படி உறுதி செய்து கொள்வது? விருப்பமான ஆணைப் பற்றி கற்பனை செய்து கொள்ள உற்சாகப்படுத்தினால் பெண்களால் உச்சக்கட்டத்தை அடைய முடியும் என்பது உண்மையா?

பெண்ணின் உச்சநிலை என்பது ஆணின் பேச்சு, வாசனை, தொடுகை, அன்பு, அணுகுமுறை மாதிரியான பல சமாசாரங்களைப் பொறுத்த ஒரு நிகழ்வு. இவற்றைத் தவிர அவளது தேவைகள், எதிர்பார்ப்புகள், மனநிலை மாதிரியான விஷயங்களும் அவள் உச்சநிலையை நிர்ணயிக்கின்றன.

உங்கள் மனைவியின் தேவைகள் என்னென்ன என்பதை முதலில் அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவள் சொல்லத் தயங்கினாலும், உற்சாகப்படுத்தி, “தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டேன்“ என்கிற உத்தரவாதம் தந்து பேசச் செய்யுங்கள். உங்கள் மனைவியின் தேவைகளையும் ஆசைகளையும் அறிந்து, அவற்றை நிறைவேற்றி வைத்தாலே, அவளை உச்சக்கட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிடலாம்.

பாலுறவின்போது ஒவ்வொரு பெண்ணின் தேவையும் வேறுபடும். உச்சத்தைத் தொட சில பெண்களுக்கு காதுமடல் ஸ்பரிசம் தேவையாக இருக்கும். சிலருக்கு இறுக்கி அணைத்துக்கொள்ள வேண்டுமெனத் தோன்றும். சில பெண்களுக்கு அழுத்தமான முத்தம் தேவைப்படலாம்.

இந்தத் தேவைகளைப் புரிந்துகொள்ளாமல், அவசர அவசரமாக உறவில் ஈடுபடுகிறீர்களா என்று யோசித்துப் பாருங்கள்.

ஆணின் உடல், காமத்துக்கு வெகு விரைவில் தயாராகிவிடும். ஆனால், பெண்ணின் உடல் தயாராக அதிக நேரம் தேவைப்படும். அடுப்பில் வைக்கப்பட்ட நீர், மெல்ல மெல்லச் சூடேறி கொதிநிலைக்கு வருவதுபோல, முன் விளையாட்டுகள் மூலம் பெண்ணின் மனத்தையும், உடலையும் காமக் கொதிநிலைக்கு நீங்கள்தான் கொண்டுவர வேண்டும். அந்தக் கொதிநிலையில் கூடினால்தான் அவளால் உச்சக்கட்டத்தை அடைய முடியும்.

இப்படி அவள் முழுமையாகத் தயாராவதற்குக் காத்திராமல், உங்களது தேவையை மட்டும் நிறைவேற்றிக் கொண்டீர்களாக என்றும் யோசியுங்கள். முன் விளையாட்டு என்றில்லை. அவள் எதிர்பாராதபோது ஒரு முத்தம், ஓர் அணைப்பு, ஒரு குறும்பு ஸ்பரிசம், கேலிப் பேச்சு, குறுகுறு பார்வை, ரகசியச் சிரிப்பு என்று ரொமான்ஸில் கலக்கினால்கூட போதும்.

உங்கள் அகவாழ்வை இப்படி அக்கு வேறு, ஆணி வேறாக அனலைஸ் செய்து பாருங்கள்.

பெண் என்கிற பிறவிக்குக் காமக்கிளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் அந்த ஆண் நிறைய ஹோம்ஒர்க் செய்து அவளைத் தயார்ப்படுத்த வேண்டும். அந்த அதிமுக்கியமான ஹோம்ஒர்க் என்னென்ன தெரியுமா?

1. அவளைப் பேச விட வேண்டும். (பெண்ணின் மூளையில் மொழிக்கான மையம் ரொம்பப் பெரிசு என்பதால் பேசினால் ஒழிய அவளுக்கு மனசு ஆறாது!)

2. அவளோடு நிறைய பேசுங்கள் (ஒரு பெண்ணின் மனதை அடைய சிறந்த வழி அவளது காதுகள்தான்!) கேலியாக, ஹாஸ்யமாக, புத்திசாலித்தனமாக, அன்பாக, கொஞ்சலாக, கொஞ்சமே கொஞ்சம் ஆபாசமாகப் பேசி அவளை செட் பண்ணிவையுங்கள்.

3. அவள் வேலைகளில் உதவுங்கள் – படுக்கைக்கு வெளியே நீங்கள் அவளை ஒரு மிஷின் மாதிரி நடத்தினால் படுக்கைக்கு வந்த பிறகும் அவள் இயந்திரத்தனமாகச் செயல்படுவாள் என்பதால் எல்லா சந்தர்ப்பத்திலும் அவள் விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொண்டு அவளை ஒரு மனுஷி மாதிரி நடத்திப் பாருங்கள் – படுக்கையில் அவள் மோகினியாக மாறுவாள்!

4. புணர்ச்சி அல்லாத ஸ்பரிசங்கள் அவள் ஆசையைக் கிளறவல்லவை என்பதால் சந்தர்ப்பம் கிடைக்கும்போதும் (கிடைக்காதபோது ஏற்படுத்திக் கொண்டும்) அவளைத் தொட்டுத் தொட்டு ஸ்ருதி சேர்த்து வையுங்கள்.

5. படுக்கைக்கு வந்ததும் காய்ந்த மாடு கம்பில் பாய்ந்தது மாதிரி டமால் டுமீலென்று வேகவேகமாக அவளை அணுகாமல் நிதானமாக அவளைத் தொட்டு, ரசித்து, விளையாடி மோகத்தைத் துாண்டுங்கள். பிறகு பாருங்களேன் உங்கள் மனைவியின் ரியாக்ஷனை!
———————————————–

கேள்வி: என் நண்பர் ஒருவர். மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாம் என்று கூறுகிறான். அப்படி ஈடுபடுவது சரியா? அவன் கூறுவது உண்மையா?

பதில்: உங்கள் நண்பர் கூறுவது சுத்தப் பொய்! மது அருந்தும்போது உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே தூண்டப்படும். ஆனால், உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியாது.

மேலும் தொடர்ந்து மது அருந்தினால் ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்ட்ரான் உருமாறி பெண்பால் ஹார்மோனான ஈஸ்டராய்டுகளாகி விடுகிறது.

இதனால் தான் மது போதையில் மூழ்கிய ஆண்களுக்குத் தோல் மென்மையாகிவிடுகிறது. தசை போட்டுவிடுகிறது. பெண்ணைப் போல மார்பகங்கள் உருவாகிவிடுகின்றன. முகத்திலும் பிறப்புறுப்பிலும் ரோமங்கள் குறைந்துவிடுகின்றன.

இது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய ஆபத்தாக விந்தணுக்களின் எண்ணிக்கையும் டெஸ்டோஸ்ட்ரானின் உற்பத்தியும் ரொம்பவும் குறைந்து ஒரு கட்டத்தில் ஆண்மையே பறி போய்விடுகிது. ஆக, மது ஆண்மைக்கு உலை வைக்கிறதே தவிர உச்சக்கட்டத்தை நீட்டிப்பதில்லை.

—————————————–

சிசேரியன் செய்த மனைவியுடன் உடனே உடலுறவு வைக்கலாமா?

கடந்த மாதம் என் மனைவிக்கு சிசேரியன் முறையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. உடனடியாகக் கருத்தடை ஆபரேஷனும் செய்து விட்டோம். தையல்களையும் பிரித்தாகி விட்டது.

என் மனைவியின் பிறப்புறுப்பில் மட்டும் லேசான ரத்தப்போக்கு இருக்கிறது. மற்றபடி எந்தப் பிரச்னையுமின்றி நலமாகவே இருக்கிறாள். நாங்கள் உடலுறவு கொண்டு பல மாதங்களாகி விட்டன.

உறவில் ஈடுபட நான் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தும் என் மனைவி வேண்டாமென மறுக்கிறாள். நாங்கள் உறவு கொண்டால் அவளது உடல்நிலையில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?
சிசேரியனுக்குப் பிறகு எத்தனை நாட்கள் கழித்து உடலுறவில் ஈடுபடலாம்?

சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது அடிவயிற்றின் சதைகள் பிரித்து மறுபடியும் தைக்கப்படுகின்றன.

இந்த தையல்கள் கூடி தசைகள் மூட மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும் என்பதால், வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு மூன்று மாத பாலியல் ஓய்வு தேவைப்படுகிறது.

இந்த கால அவகாசத்துக்குப் பிறகு படிப்படியாக அவர்கள் நடைமுறை வாழ்வுக்கு திரும்பலாம் – பாலியல் ஈடுபாடு உட்பட.