Home ஆண்கள் உங்களுக்கு விறைப்பு தன்மை அதிகரிக்க இதை பற்றி அறியுங்கள்

உங்களுக்கு விறைப்பு தன்மை அதிகரிக்க இதை பற்றி அறியுங்கள்

938

ஆண்மை பெருக்கம்:ஆண்களுக்கு விறைப்புத் தன்மை குறைவாக இருபு்பது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகச் சாதாரண ஒன்றாக மாறிப் போய்விட்டது. நிறைய ஆண்கள் இந்த பிரச்னைக்காக மருத்துவர்களிடம் செல்கிறார்கள்.
இந்த விறைப்புத் தன்மை என்பது மறுசுழற்சிக்கான செயல்பாட்டைக் குறைத்துவிடும் என்பதை பெரிதாக யாரும் உணர்வதில்லை. சுகம் குறைவது மட்டுமே நினைவில் இருக்கிறது.

முன்னோர்களின் செக்ஸ் வாழ்க்கை இந்த பிரச்னை இந்த காலத்து ஆண்களுக்கு மட்டுமே வருகின்ற பிரச்னையாக நினைத்துவிடக் கூடாது. நம்முடைய முன்னோர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் கட்டாயம் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவர்கள் நம்மைப் போன்று, அஜாக்கிரதையாகவோ அல்லது தவறான வழிமுறைகளையோ கையாளாமல், இயற்கையான வழிகளையும் மூலிகைகளையும் பயன்படுத்தி தங்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டனர்.

மூலிகைகள் குறிப்பாக, ஆண்மைக்குறைபாடு, மலட்டுத் தன்மை, விறைப்புத் தன்மை குறைபாடு, விந்து வேகமாக வெளியேறுவது, விந்து நீர்த்துப் போன்ற பிரச்னைகளுக்கு கண்ட மருந்துகளையும் எடுத்துக் கொள்ளாமல், இயற்கையான உணவுப் பொருள்கள் மற்றும் மூலிகைகளைப் பயன்படுத்தி, பிரச்னைக்கு தீர்வு கட்டில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்

விறைப்புத்தன்மைக்கு 5 மூலிகை அந்த வகையில் உடலுறுவின் போது, வேகமாக விந்து வெளியேறாமல், நீண்ட நேரம் உறவில் ஈடுபடுவதற்காக ஐந்து வகையான இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவை, 1. அஸ்வகந்தா 2. சத்தாவாரி 3. தண்ணீர்விட்டான் கிழங்கு 4. பூனைக்காலி 5. கல்பாசி ஆகியவை ஆகும்.

அஸ்வகந்தா அஸ்வகந்தா மிகத் தீவர பலன்களைத் தருகின்ற மூலிகைகளில் ஒன்று. இதை ஆண், பெண் இருவருமே உட்கொள்ளலாம். இது விறைப்புத் தன்மை பிரச்னையை சரிசெய்வதோடு, நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட ஆற்றலைத் தருகிறது. இது மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்தக் கூடியது. அதனால் உங்களால் உடலுறவில் முழு கவனத்தையும் செலுத்த முடியும்.

சத்தாவாரி சத்தாவாரி வேர் ஆயுர்வேத மருந்து தயாரிப்புகளில் பல மருநு்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டும் மருந்தாக இருக்கிறது. குறிப்பாக, ஆண்களுக்கு மறுஉற்பத்திக்கான வலிமையை அதிகரிக்கிறது. பிறப்புறுப்புகளில் உள்ள நரம்புகளைத் தூண்டிவிட்டு, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

தண்ணீர்விட்டான் கிழங்கு தண்ணீர்விட்டான் கிழங்கு பற்றி பொதுவாக எல்லோருக்குமே தெரியும். இது காம உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய வயாகரா மூலிகைகளில் ஒன்று என்று. இது செக்ஸ் சம்பந்தப்பட்ட நோய்த்தொற்றுக்களைத் தீர்க்கக் கூடிய மூலிகை. உடலுக்கு உறுதியைத் தரக்கூடியது. நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடவும் விந்து வுகமாக வெளியேறாமல் இருக்கவும் துணைபுரிகிறது. விறைப்புத் தன்மையை அதிகரிக்கும்.

பூனைக்காலி பூனைக்காலி விதை மிகச்சிறந்த மறு உற்பத்திக்கான டானிக்குகளில் ஒன்று. இதை ஆண், பெண் இருவருமே பயன்படுத்தலாம். இது உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, செக்ஸ் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது. அதனா்ல இயல்பாகவே பிறப்புறுப்புக்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், விறைப்புத் தன்மையும் கூடுகிறது.

கருநீல பாசி கருநீல பாசி ஆண்களின் செக்ஸ் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் மூலிகைகளில் ஒன்று என உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இது செக்ஸ் சம்பந்தப்பட்ட நோய்த் தொற்றுக்களுக்கு தீர்வு கொடுப்பதோடு, விறைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.