Home ஜல்சா மாணவர்களுடன் நிர்வாணமாக புகைப்படம் எடுத்த ஆசிரியை: புயலை கிளப்பும் சர்ச்சை

மாணவர்களுடன் நிர்வாணமாக புகைப்படம் எடுத்த ஆசிரியை: புயலை கிளப்பும் சர்ச்சை

40

பிரான்ஸ் நாட்டில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியை ஆகிய அனைவரும் நிர்வாணமாக ‘குரூப்’ போட்டோ எடுத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு பிரான்ஸில் உள்ள Avignon நகரில் Lycee Frederic Mistral என்ற உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் 17 மற்றும் 18 வயதுடைய மாணவ, மாணவிகள் பயின்று வந்துள்ளனர்.

பொதுவாக, பள்ளி படிப்பு முடியும் திகதியில் அதனை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

ஆனால், இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பள்ளியின் இறுதி நாளை வித்தியாசமாக கொண்டாட திட்டம் வகுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆசிரியை ஒருவருடன் இணைந்து மாணவிகள் மற்றும் மாணவர்கள் அனைவரும் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளனர்.

எனினும், அவர்களின் அந்தரங்க உறுப்புகளை மட்டும் மறைக்கும் வகையில் கருப்பு அட்டைகளை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

பள்ளியின் இறுதி நாளை கொண்டாட இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்ட பள்ளி மற்றும் ஆசிரியை மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள் ‘இதுபோன்ற அறுவருக்கத்தக்க செயல்கள் பிரான்ஸில் மட்டுமே நிகழும்’ என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது பள்ளி மாணவ, மாணவர்களின் தனிச் சுதந்திரத்தை காட்டுவதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.