Home ஜல்சா மகளை பாலியல் வன்கொடுமை செய்து அதனை பேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்ட தந்தை!

மகளை பாலியல் வன்கொடுமை செய்து அதனை பேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்ட தந்தை!

47

ஜேர்மனி நாட்டில் நண்பருடன் சேர்ந்து பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து அதனை பேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்ட தந்தையை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் உள்ள Lubeck நகரில் 27 வயதான தந்தை தனது 2 வயதான மகளுடன் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ததால் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது 47 வயதான நபருடன் சேர்ந்து தந்தை மது அருந்தியுள்ளார்.

பின்னர், தன்னுடைய நண்பருடன் சேர்ந்து மகளை பாலியல் சித்ரவதை செய்துள்ளார். இக்கொடூரமான காட்சிகளை பேஸ்புக்கில் நேரலையாகவும் வெளியிட்டுள்ளார். இக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொலிசாருக்கு எண்ணற்ற புகார்கள் சென்றுள்ளன. வெளியான பரபரப்பை தொடர்ந்து பேஸ்புக்கில் இருந்து வீடியோ உடனடியாக நீக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தந்தையையும் நண்பரையும் பொலிசார் அதிரடியாக கைது செய்தனர். தந்தையிடம் நடத்திய விசாரணையில், விருந்து நிகழ்ச்சிக்கு முன்னதாகவும் குழந்தையிடம் பலமுறை தந்தை அநாகரீகமாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. தந்தையையும் அவரது நண்பரையும் சிறையில் அடைத்துள்ள பொலிசார் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.