Home சமையல் குறிப்புகள் சீரக சம்பா மட்டன் பிரியாணி

சீரக சம்பா மட்டன் பிரியாணி

43

தேவையான பொருள்கள் :

சீரக சம்பா அரிசி – 4 கப்
மட்டன் – அரை கிலோ
இஞ்சி, பூண்டு – 4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 4
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 4
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தேங்காய் – ஒரு மூடி
தயிர் – அரை கப்
லெமன் – 1
புதினா – ஒரு கட்டு
கொத்தமல்லித் தழை – ஒரு கட்டு
நெய் – அரை கப்
எண்ணெய் – அரை கப்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

கிராம்பு – 3
பட்டை – 3 சிறிய துண்டு
ஏலக்காய் – 3
பிரிஞ்சி இலை – ஒன்று
சோம்பு – ஒரு ஸ்பூன்

செய்முறை :

* மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

* அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் பால் எடுத்து வைக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

* கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து வைக்கவும்.

* குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் கால் கப் தயிர், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்த பின் ப,.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.

* இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.

* அடுத்து அதில் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

* ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கவும்.

* பின்பு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும்.

* சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.