Home ஜல்சா திருமணத்துக்கு முந்தைய நாள் மாப்பிள்ளையை கொல்ல முயன்ற லெஸ்பியன் ஜோடி

திருமணத்துக்கு முந்தைய நாள் மாப்பிள்ளையை கொல்ல முயன்ற லெஸ்பியன் ஜோடி

41

மேற்கு வங்காள மாநிலம் புர்துவான் மாவட்டம் கல்னா என்ற இடத்தை சேர்ந்தவர் தீபா. அதே பகுதியை சேர்ந்தவர் ஜிரஞ்சித் பால். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். அவர்களுக்கு திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

தீபாவுக்கு ஓரின சேர்க்கை பழக்கமும் இருந்து வந்தது. இவரது நெருங்கிய தோழியாக இருந்தவர் நசீமா. இவர்கள் இருவரும் இந்த பழக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஜிரஞ்சித்தை தீபா திருமணம் செய்வது நசீமாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, இதுபற்றி தீபாவிடம் பேசினார். அவர்கள் இருவரும் ஜிரஞ்சித் பாலை கொன்று விடுவது என்று முடிவு செய்தனர்.

திருமணத்துக்கு முந்தைய நாள் தீபா தனது வீட்டுக்கு வருமாறு ஜிரஞ்சித் பாலை அழைத்தார். இதனால் அவர் அங்கு வந்தார். அப்போது அங்கு ஏற்கனவே வந்து தயாராக இருந்த நசீமா, ஆவேசமாக பாய்ந்து சென்று ஜிரஞ்சித் பாலை கத்தியால் குத்த முயன்றார். அந்த கத்தியை அவர் தட்டி விட்டார். கத்தி கீழே விழுந்தது. அப்போது தீபா அந்த கத்தியை எடுத்து ஜிரஞ்சித் பாலை குத்தினார்.

உடனே ஜிரஞ்சித் பால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீஸ் நிலையத்துக்கு சென்று இதுபற்றி புகார் கொடுத்தார். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தீபாவுக்கும், நசீமாவுக்கும் இடையே ஓரின சேர்க்கை இருப்பதை தீபாவின் பெற்றோர் ஒத்துக்கொண்டனர். இதை பல முறை கண்டித்தும் இவர்கள் கேட்கவில்லை என்று போலீசாரிடம் கூறினார்கள். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.