Home ஆரோக்கியம் பெண்களே ”அதை” தள்ளிப்போட அடிக்கடி மாத்திரை பயன்படுத்துபவரா..? எச்சரிக்கை தகவல்..!

பெண்களே ”அதை” தள்ளிப்போட அடிக்கடி மாத்திரை பயன்படுத்துபவரா..? எச்சரிக்கை தகவல்..!

37

மாதவிலக்கை தள்ளிப்போட பயன்படுத்தும் மாத்திரைகள் ஏற்படுத்தும் அபாயங்களை இப்போது பார்க்கலாம்.

வீட்டில் சுபநிகழ்வுகள் , கோயில் விழாக்கள், உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக மாதவிடாயை தள்ளிப்போடுவது இயல்பான ஒன்றாக உள்ளது.

இதற்காக உபயோகிக்கும் மாத்திரையில் உள்ள மூலப்பொருட்கள், உடலில் ‘புரோஜெஸ்ட்ரான்’ (Progesterone) எனும் ஹார்மோனை தற்காலிகமாக நிறுத்தி மாதவிலக்கை தாமதப்படுத்துகிறது.

இதனால் இயற்கையாக நிகழவேண்டிய மாதவிடாய் தள்ளிப்போகிறது. இந்த மாத்திரையைத் தொடர்ந்து பயன்படுத்தினால், புரோஜெஸ்ட்ரான் சுரப்பில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

மாதவிடாய் சுழற்சி சீரற்ற முறையில் நடக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

உடலில் நீர் கோத்தல், தலைவலி, மார்பகங்களில் வலி, வலியுடன் கூடிய மாதவிலக்கு, பக்கவாதம், ரத்த உறைவுப் பிரச்னை ஆகிய பிரச்னைகள் வரவும் வாய்ப்பு உள்ளது.

உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்பு உள்ளவர்கள், 40 வயதைக் கடந்த பெண்கள் ஆகியோர் மாத்திரையை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பொதுவாக, மாதவிலக்கு வந்த நாளில் இருந்து 14ம் நாளில், சினைப்பையில் இருந்து முட்டை வெளிப்படுதல் (Ovulation) நிகழும். இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால், முட்டை வெளிப்படுதல் தாமதமாகலாம். இதனால், திருமணம் ஆனவர்கள், குழந்தைப்பேறை தற்காலிமாகத் தள்ளிப்போட அல்லது தவிர்க்க கர்ப்பத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது, ஓவலேஷன் ஆகும் தினத்தை கணிக்க முடியாமையால் கர்ப்பம் தரிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

அந்தக் கருவின் (Fetus) வளர்ச்சியும் ஆரோக்கியமானதாக, இயல்பானதாக இல்லாமல் இருக்கும். எனவே, பீீரியட்ஸை தாமதமாக்கும் மாத்திரைகளை தவிர்ப்பதுதான் நல்லது.

மாதவிலக்கைத் தள்ளிப்போடும் மாத்திரையைப் பொறுத்தவரை பாதுகாப்பான முறை என்று எதுவுமே கிடையாது. மருந்து கடைகளில் வாங்கி சுயமாக சாப்பிட்டால், பக்க விளைவுகள் வரும்.

தவிர்க்கவே முடியாது என்றால், மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்படி, எப்போதாவது ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அடிக்கடி இது தொடர்ந்தால் பக்கவிளைவுகள் வரும் அபாயம் நிச்சயம்