Home சூடான செய்திகள் பெண்களை மார்புகளை தீண்டுவதன் மூலம் அப்படி என்ன சுகம் கண்டீர் ?

பெண்களை மார்புகளை தீண்டுவதன் மூலம் அப்படி என்ன சுகம் கண்டீர் ?

904

சூடான செய்திகள்:ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்வில் இப்படியொரு நிகழ்வை ஒருமுறையாவது எதிர்கொண்டிருப்பாள்.பேருந்து பயணத்தில், கோவில் நெரிசலில், மருத்துவ பரிசோதனையில், திரையரங்கை விட்டு வெளியேறும் போதென… ஏதாவது ஒரு இடத்தில், ஏதவாது ஒரு தருணத்தில் தனது மார்பகங்களை எவனோ ஒரு கயவன் வேண்டுமென்றே கசக்கி செல்வதை தடுக்க முடியாமல், எதிர்க்க முடியாமல்… துடித்திருப்பாள்!

அப்படி என்ன சுகம் கண்டீர் பெண்களை மார்புகளை தீண்டுவதன் மூலம்? நிச்சயம் இப்படிப்பட்ட செயலை செய்யும் கொடூரர்களை, இத்தகைய செயலை உன் அம்மா, சகோதரியிடம் போய் செய்வாயா என்று கேட்க மாட்டேன்.

ஏனெனில், ஒரு பெண்ணாக அதன் வலி எனக்கு புரியும்.
ஒரு பெண் சுதந்திரமாக, பாதுகாப்பாக வெளியே போய்வர ஒரு ஆண் துணை தேவைப்படுகிறது. அதுவும், வேறொரு ஆணிடம் இருந்து பாதுகாக்க. இப்படியான சூழலில் நீ எல்லாம் எப்படி ஆம்பளைன்னு சொல்லிட்டு வெளிய திரியிற என்று தான் கேள்வி கேட்க தோன்றுகிறது.

என் வாழ்வில் மூன்று முறை இத்தகைய கொடுமையான நிகழ்வுகளை நான் கடந்து வந்துள்ளேன். ஆனால், அந்த வயதில், அந்த தருணத்தில் அதை எதிர்க்கவோ, அதுகுறித்து பகிர்ந்துக் கொள்ளவோ தைரியம் இல்லாமல் போய்விட்டது.ஆனால், நிச்சயம் இதுகுறித்து வெளிப்படையாக பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அது இன்று வெளிப்பட்டுள்ளது…
அப்போது எனக்கு 14 வயது, எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் எனது பாட்டி வீட்டுக்கு சென்று வருவது வழக்கம்.
அங்கே தான் என் அம்மாவின் தம்பியும் இருந்தார். அந்த நாட்களில் தான் என் வயதொத்த உறவினர்களும் வருவார்கள். அந்த நாட்களில் விளையாட்டும், மகிழ்ச்சியும் அதிகமாக இருக்கும்.
என் அம்மாவின் தம்பி (மாமா) எங்களை விட சில வயது மூத்தவர். மிகவும் நகைச்சுவையாக பேசி எங்களை மகிழ்சிப்பார்.ஆனால், அந்த முறை சென்ற போதுதான், அவரது செய்கையில், நடவடிக்கையில் தவறு இருப்பதை உணர முடிந்தது. எங்களை தகாத முறையில் தீண்ட அவர் பலமுறை முயன்றார். ஆனால், அதை எப்படி மற்றவரிடம் எடுத்துக் கூறுவது என்று ஆரம்பத்தில் தெரியவில்லை.

ஒரு நாள் இரவு உணவு சாப்பிட்டப் பிறகு, எங்கள் வீட்டு பால்கனியில் நடந்துக் கொண்டிருந்தேன். என்ன செய்கிறாய் என்று பின்னாடி இருந்து வந்து கேட்டான்.முதலில் தோளில் கை வைத்தான். பிறகு, கொஞ்சம், கொஞ்சமாக எனது மார்பை தொட முயற்சித்தான். டக்கென விலகி, உறங்க செல்கிறேன் என்று நகர்ந்தேன்.
மறுநாள் மாலை ஷாப்பிங் செல்ல உடன் அழைத்து சென்றான். திரும்ப வரும் போதே, நீயே வண்டி ஓட்டு என்று கூறினான்.
நானும் பைகளை தூக்கி வர இயலாது என்று வண்டியோட்ட சம்மதித்தேன். ஆனால், வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போதே, திடீரென பின்னாடி இருந்து எனது மாரை தீண்டினான்.

வண்டியை உடனே நிறுத்தி கையை எடு என்றேன்… ஏன் என்றான்… கோவமாக திட்டியவுடன்… ஓ!!! பெரிய மனுஷி ஆயிட்டியா..!!! என்று நகைத்தான்.
அவன் மீது கடுங்கோபம்.. வீட்டில் கூறியிருக்க வேண்டும். ஆனால், எப்படி இதுகுறித்து பேசுவது என்று கூறவில்லை. அதன் பிறகு அவன் என்னிடம் அவ்வாறு நடந்துக் கொள்ளவில்லை.

ஆகையால் அவனை பெற்றி அம்மாவிடம் கூறாமல் விட்டுவிட்டேன். ஆனால், மறுமுறை பாட்டி வீட்டுக்கு சென்ற போதுதான்.

அவன் மற்ற உறவுக்கார பெண்களிடமும் அப்படி நடந்துக் கொள்வது குறித்து அறிய முடிந்தது. அன்றே அம்மாவிடம் கூறினேன். அதுவே நாங்கள் பாட்டி வீட்டுக்கு சென்ற கடைசி முறையாகும்.

இரண்டாவது நிகழ்வு: 17 வயதில்… நான் 15 வயதில் இருந்து கண்ணாடி அணிந்து வந்தேன். 17 வயதில் கண்ணாடி பவர் அதிகரித்துக் கொண்டே போவதால், லென்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.எங்கள் ஏரியாவில் ஒரே ஒரு கடை தான் இருந்தது. அப்பாவுடன் சென்று அங்கே லென்ஸ் தேர்வு செய்தேன். மறுநாள் மாலை வாருங்கள் லென்ஸ் எப்படி வைக்க வேண்டும் என்று கூறுகிறேன் என்றான்.
அவன் கூறியது போலவே மறுநாள் மாலை அந்த கடைக்கு சென்றேன். அங்கே வேலை செய்துக் கொண்டிருந்த நபருக்கு 25வயதிருக்கும்.
ஒரு கையில் முடியை பிடித்துக் கொள்ளுங்கள், மறு கையில் இமைகளை விரித்து பிடிக்கவும் என்றான். அதுபோல் செய்தேன்… ஒரு கையில் லென்ஸ் எடுத்து வைத்தவன். மறு கையில் எனது மாரை அழுத்த முயற்சித்தான். பகீர் என்றது. தெரியாமல் பட்டிருக்கும் என்று கருதினேன்.

இரண்டவாது நாள்… இரண்டாவது நாள் லென்ஸ் வைக்க சென்ற போது, அவனது முழங்கையை வைத்து எனது மாரை முட்டினான்.

சட்டென்று நகர்ந்ததும். சாரி தெரியாம பட்டிருச்சு.. என்று மன்னிப்பு கேட்டான். அப்போதே அவனை அடித்திருக்க வேண்டும்.

ஆனால், தெரியாமல் பட்டிருக்கும் என்று விட்டுவிட்டேன். மூன்றாவது நாளும் இது தொடர்ந்தது. நான்காம் நாள் அப்பாவை உடன் அழைத்து சென்றதும், அன்றில் இருந்து நீங்களே இனி லென்ஸ் வைத்துக் கொள்வது என கூறுகிறேன் என்று கற்பித்தான்.

மூன்றாம் நிகழ்வு: 21வயதில்… எத்தனை வெயிலாக இருந்தாலும் சரி, முழுக்கை ஷ்ரக் மற்றும் முகத்திற்கு ஸ்கார்ப் அணிந்து தான் செல்ல வேண்டும்.முகத்தை கண்டுவிட்டால், வண்டிக்கு பின்னே எத்தனை நாய் விரட்டும் என்பதற்கு கணக்கில்லை. இது பெண்கள் எதிர்கொள்ளும் மற்றுமொரு கொடுமை. என்ன செய்வது கொடுமையை பொறுத்துக்கொள்ள தானே வேண்டும்
நான் வண்டி ஒட்டிகொண்டிருந்த போது அம்மா அழைத்தாள்… வண்டியை ஓரம்கட்டி… சில நிமிடத்தில் வீட்டை அடைந்துவிடுவேன் என்று கூறி அழைப்பை கட் செய்தேன்.
திரும்பி பார்த்தால், அருகே பைக்குடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்தான். அந்த ஏரியாவில் இருக்கும் ஒரு இடத்திற்கு வழி சொல்லுமாறு உதவி கேட்டான். நான் எப்படி செல்ல வேண்டும் என்று கூறி நகர்ந்தேன்.
ஆயினும் என்னை முன்னேறி செல்ல விடாமல், தனது வண்டியை என் வண்டி முன் வந்து நிறுத்தி எனக்கு இதுமட்டும் போதாது என்று கூறி.. மறுநொடிய எனது மார்பை பிடித்து அழுத்திவிட்டு… “நன்றாக இருக்கிறது” என்று கூறி பல்லிளித்து சிரித்தான்.

உள்ளுக்குள் பதட்டம் அதிகரித்தது. வண்டியை முறுக்கி கொண்டு திரும்பி கூட பாராமல் வெகுதூரம் வந்துவிட்டேன். நெரிசலான சாலையிலும் கூட திரும்பி பாராமல் வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டுக்கு வந்த பிறகு தான் என் மீதே எனக்கு கோபம் அதிகரித்தது. அவனை எங்கே பளார் என்று அறைந்திருக்க வேண்டாமா? நான் ஏன் பயந்து ஓடிவந்தேன் என்று என்மீது நானே கோபித்துக் கொண்டேன்.
மீண்டும் ஆண்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்… அப்படி என்ன சுகம் கண்டீர் பெண்களின் மாரை தீண்டுவதன் மூலமாக?