Home பெண்கள் தாய்மை நலம் கருச்சிதைவுக்கு பின் கர்ப்பமாக ஆசையா? இதெல்லாம் மறக்காதீங்க

கருச்சிதைவுக்கு பின் கர்ப்பமாக ஆசையா? இதெல்லாம் மறக்காதீங்க

15

ஒவ்வொரு பெண்ணும் திருணமம் ஆனவுடன் கர்ப்பம் அடையும் போது, மிக சந்தோஷமாக கொண்டாடுவார்கள். ஏதோ ஒரு சூழலில் கலைந்துவிட்டது என்றவுடன் என்ன செய்வதென தெரியாமல் அப்பெண் தவிப்பாள். அவளால் அதை தாங்கிக் கொள்வது கடினமாக இருக்கும். அந்த சூழலை கடந்து மீண்டும் கர்ப்பமடை விரும்பும் பெண்கள், இந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு, உங்கள் உடல் 4-6 வாரங்களில் தயாராகி விடும். இன்னும் சிலருக்கோ 6 மாதங்கள் வரை ஆகலாம். எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட கருச்சிதைவு உங்களுக்கு ஏற்பட்டிருந்தால்,

உங்களின் உடல் இன்னொரு கர்ப்பத்துக்கு தயாராக உள்ளதா என்பதை மருத்துவரிடம் பரிந்துரை செய்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒருமுறை கருச்சிதைவு ஏற்படும்போது அதன் மரபு ரீதியான ஒரு சில விஷயங்கள் பிறப்புறுப்பின் அருகாமையில் இருக்க வாய்ப்பிருக்கிறது. இதனை சோதனை மூலம் கண்டறிய வேண்டியது அவசியம்.

கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு, 4-6 வாரங்களில் கருமுட்டை வெளிப்பட தொடங்கி, இந்த சுழற்சி மீண்டும் இயல்பாக நடக்கத் தொடங்கையில், இயல்பான கருத்தரிப்புத் திறனை நீங்கள் அடைய வாய்ப்பு உள்ளது.

நீங்கள் 35 வயது உடையவராக இருந்தால் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன்பின்னர் செயல்படுவது நன்று. புகைப்பிடித்தல் பழக்கத்தினாலும் கரு மலட்டு தன்மை என்பது உண்டாகலாம்.

ஒருமுறை கருச்சிதைவு என்றால் உடனே மனம் தளர்வது உங்கள் மனதை மீண்டும் கர்ப்ப நிலைக்கு தள்ள முடியாமல் தவிக்க வைக்கும். எனவே, கருச்சிதைவுக்கு பின்னர் உடலளவிலும், மனதளவிலும் நீங்கள் 100 சதவிகித தெளிவாக இருத்தல் வேண்டும்.

ஏதோ ஒரு நன்மைக்கே நம் கரு கலைந்திருக்கிறது என நினைத்து அதை கடந்து மீண்டும் எப்படி கருவுற்று குழந்தை பெற்றுக்கொள்வது என்பதை சிந்தியுங்கள். நம்பிக்கை என்பது உங்களிடம் இருக்கும் பட்சத்தில் மிக விரைவில் அழகிய குழந்தையை நீங்கள் ஈன்றெடுக்கலாம். நீங்கள் நம்பிக்கையற்று பயம் மற்றும் பதட்டத்துடன் இல்லாமல் இருங்கள்..

கருச்சிதைவு என்பது கவலை தரக்கூடிய ஒரு விஷயம் என்றாலும், நாளை பிறக்க போகும் குழந்தையை கண்டு இதுவும் கடந்து போகும் என்பதை உணருங்கள்.