Home அந்தரங்கம் கோபம், ஏமாற்றம், மனஅழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் தாம்பத்திய உறவு!

கோபம், ஏமாற்றம், மனஅழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் தாம்பத்திய உறவு!

23

கோபம், ஏமாற்றம், மனஅழுத்ததில் இருந்து விடுபட தாம்பத்திய உறவு நிச்சயம் உதவும் என்கிறார்கள் பல ஆராய்ச்சியாளர்கள்.

உடல் உறவு வைத்துக் கொள்வதால் ஆக்சிடோசின் ஹார்மோன் தம்பதிகளுக்கு சுரக்கும். இது உடம்பில் நன்னம்பிக்கை, நட்பு, அன்பு, பக்திப் பரவசம், பாசம், காதல், காமம் போன்ற உணர்வுகளைத் தூண்டிவிடுகிறது .
அது கூடுதலாகப் போனால் சில விநாடிகளுக்கு மூளை செயலிழந்து சிந்தை
மறந்துபோகும். புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்குக் கலவியின் உச்சக்கட்டத்தில் இந்த நிலை ஏற்படும்.

சண்டை போட்ட தம்பதிகள், அதன் பிறகு கலவியில் ஈடுபடும் போது, அவர்கள் மனஅழுத்த்தில் விடுபட்டு ரிலாக்ஸ் ஆக இருப்பதை உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இளம் பெண் ஒருவர் கூறுகையில், நாங்கள எப்படி சண்டை போட்டிருந்தாலும், பெட் ரூமுக்கு வந்து விட்டால் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். எப்படி கலவியில் மகிழ்ச்சியுடன் ஈடுபவது, எப்படி உச்சகட்டத்தை அடைவது என்பதை பற்றி மட்டுமே சிந்திப்போம். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே அன்பு இன்னும் அதிகரிக்கும். கலவி உறவு எங்கள் காதல் உறவை மென்மேலும் மேம்படுத்தும் என்றார்.

இதுபற்றி அப்பெண் மேலும் கூறுகையில், எனது கணவனை 7 ஆண்டுகளாக தெரியும். ஆனால் இப்போதும் யாரா ஒருவர் இவர் என்பது போல் இவருவரும் உணர்கிறோம். ஆனால் எங்களுக்குள் இருக்கும் இந்த எமோசனல் தூரத்தை கடக்க தம்பாத்தியம் உதவுகிறது. ஒவ்வொரு நாளும் இப்போதுதான் வாழ்க்கையை தொடங்கியதாக உணர்கிறோம்.

சில நாட்களில் நாங்கள் இருவரும் சண்டை போட்ட பின் பேசிக்கொள்ளமால் அமைதியாக இருப்போம். ஆனால் தாம்பத்திய உறவு , எங்களுக்கு இருக்கும் சண்டையை நீக்கிவிடுகிறது. சண்டையை முறிப்பதில் பனிக்கட்டியை உடைப்பது போல், தாம்பத்திய உறவு பலமாக செயல்படுகிறது.

நாங்கள் இவரும் முகத்தோடு முகம் அணைத்து முத்தம் கொடுக்கும், இவருக்கும் இடையிலான சண்டையை மறந்து மன்னிப்பு கேட்டுக்கொள்வோம். அப்போது இவருக்கும் இடையே வார்த்தை பரிமாற்றங்கள் இருக்காது. உணர்வு பரிமாற்றங்களே இருக்கும்.
சண்டைகளால் எப்போதுமே எங்களுடைய உறவில் பலவீனத்தை ஏற்படுத்த முடியாமல் இருப்பதற்கு தாம்பத்திய உறவு தான் காரணம். இவ்வாறு கூறினார்.