Home சூடான செய்திகள் உளுந்தூர்பேட்டை டாஸ்மார்க் பாரில் ஆண்களுடன் அமர்ந்து தண்ணியடிக்கும் இளம்பெண் (Photos)

உளுந்தூர்பேட்டை டாஸ்மார்க் பாரில் ஆண்களுடன் அமர்ந்து தண்ணியடிக்கும் இளம்பெண் (Photos)

35

நேற்று முந்தினம் மதியம் 1 மணி அளவில் தமிழ்நாட்டின் உளுந்தூர்பேட்டை டாஸ்மார்க் பாரில் இந்த படத்தில் உள்ள பெண் பல ஆண்களுக்கு மத்தியில் அமர்ந்து மது அருந்தி உள்ளார். இதை கேள்விப்பட்ட சகோதரர் சந்தோஷ் அங்கு சென்று மது அருந்துவது தவறு என்று கூறி உள்ளார். அந்த பெண் அதை காதில் வாங்காமல் குடிப்பதை தொடர்ந்து உள்ளார். எனக்கு 22 வயது ஆகிவிட்டது. யாரும் கேட்க முடியாது என கூறி என்னை படம் வேண்டுமானால் எடுத்துக் கொள் என்று போஸ் கொடுத்து உள்ளார். அவர் ஊர் கள்ளக்குறிச்சியாம். அரசு இந்த படத்தை பார்த்தாவது டாஸ்மார்க்கை மூட வழி செய்ய வேண்டும். கட்டாயம் மதுவுக்கு எதிர்ப்பான போராட்டத்தை நடத்திடுவோம். மனதிற்கு வேதனை தந்த படம். என்று தலைப்பிட்டு இதனை நண்பர் ஒருவர் தனது பேஸ்புக்கில் நிலைத்தகவலாக பகிர்ந்துள்ளார்.

இது வரை காலமும் ஆண்களுக்கு மட்டும் தான் கவலை, துன்பம், காதல் தோல்வி வரும். உடன் கவலையில் டாஸ்மாக் போய் தண்ணியடித்து விட்டு வரும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட சமூகத்துக்கு முகத்தில் காறி உமிழ்ந்துள்ளார் இந்தப் பெண்.

ஒரு பெண்ணுக்கு துன்பம், கவலை எண்டு ஒன்றும் வராதா? பெண்கள் குடிக்க வெளிக்கிட்ட உடன் டாஸ்க்மாக்கை மூட வேண்டும் என்கிறது ஆணாதிக்க சமூகம்.

குடியால் எல்லோருக்கும் கேடு தான். அதுக்கு ஆண் பெண் என்ற பேதமில்லை.

பெண்கள் டாஸ்மாக்கில் குடிக்க வெளிக்கிட்ட உடன் தான் தமிழ்நாட்டில் மது ஒழிப்பு கொண்டு வருவார்களாக இருந்தால் அதுவும் ஒரு சந்தோசமான செய்தி தான்.