Home ஜல்சா திருமணத்துக்கு பிறகு உறவு தெரிந்தது: தாத்தாவை மணந்த இளம்பெண்

திருமணத்துக்கு பிறகு உறவு தெரிந்தது: தாத்தாவை மணந்த இளம்பெண்

21

captureவாஷிங்டன்:

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள மியாமி பகுதியைச் சேர்ந்த 68 வயது முதியவர் சமீபத்தில் 24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்தார்.

அந்த முதியவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து அது விவகாரத்தில் முடிந்தது. இருந்தும் அவருக்கு முந்தைய மனைவிகள் மூலம் ஏராளமான குழந்தைகள் உள்ளனர்.

முதியவருக்கு தனது 3-வது மனைவியுடன் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்தது. ஒருநாள் தனது காதல் மனைவிக்கு அவர் வீட்டில் இருந்த பழைய போட்டோ ஆல்பங்களை காட்டினார்.

அதில் இருந்த தனது மகன்கள் மற்றும் மகள்களின் படங்களை காட்டினார். ஒரு ஆண் நபரை காட்டி இவன் தனது மகன் என்றார். அதை கேட்டதும் 3-வது இளம் மனைவிக்கு தலையில் இடி விழுந்தது போன்று அதிர்ச்சி ஏற்பட்டது.

ஏனெனில் அவர் மகன் என கூறியவர் அப்பெண்ணின் தந்தை ஆவார். இதன் மூலம் தான் தனது சொந்த தாத்தாவை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்தியது தெரிய வந்தது.

இருந்தாலும், அப்பெண் கணவரை விட்டு பிரியவில்லை. அவருடனேயே சேர்ந்து வாழ்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “போட்டோவில் எனது தந்தையை பார்த்ததும் எனக்கு விவரிக்க முடியாத அளவு அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் எங்களுக்கு இடையே ஒருவித இறுக்கமான உறவு இருப்பதை அறிகிறேன்” என்றார்.