Home ஆரோக்கியம் வயிற்று போக்கு சிகிச்சை முறைகள்

வயிற்று போக்கு சிகிச்சை முறைகள்

72

* பால்குடிக்கும் குழந்தைகளுக்கு, பாலில் கிருமித் தொற்று அல்லது வேறு ஏதேனும் குறைபாடு இருந்தால் வயிற்றுப் போக்கு வரும்.

* தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, தாய்க்கு செரிமானக் கோளாறு இருப்பின் வரலாம். வயிற்றுப் போக்குடன் வாந்தியும், வயிற்றில் இழுத்துப் பிடிப்பதுபோல வலியும் இருக்கும்.

* மலம் முழுவதும் திரவவடிவிலோ அல்லது குழம்பிய நிலையிலோ இருக்கும், துர்நாற்றம் இருக்கும், மஞ்சள் அல்லது பச்சை நிறம் சார்ந்திருக்கும்.

* பல் முளைக்கும் பருவத்தில் வயிற்றுப் போக்கு வரும்.

* சரியாகக் கவனிக்காவிட்டால், உடலில் நீரிழப்பு நேர்ந்து உயிருக்கு ஆபத்து வரும். மாமரத்தில் உள்பட்டையை அரைத்து, குழந்தையின் வயிற்றில் தடவலாம்.

* வாந்தியுடன் கூடியிருந்தால் 1½ நெல்மணி அளவு பொடித்த ஜாதிக்காய்ப் பொடியைக் கொடுக்கலாம் (வயிற்று வழி சரியாகும்).

* கோரைக்கிழங்கினைத் கொதிநீரிலிட்டு வேகவைத்து, 3 நெல்மணி அளவு, பாலில் கலந்து தினமும் இருமுறை கொடுக்கலாம்.

* தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு இருந்தால், தாயின் செரிமானத்தில் அல்லது வேறு குறைபாடு இருக்கிறது என்று பார்த்துச் சரிசெய்ய வேண்டும்.

* பெரியவர்களுக்கு வரும் வயிற்றுப் போக்கை 7 விதமாக ஆயுர்வேதம் சொல்லும்.

* வாதத்தினால் வரும் வயிற்றுப் போக்கு: கறுப்பாக இருக்கும், வழுவழுப்பாக இருக்கும், செரிமானம் ஆகாத உணவும், வறண்ட உணவும் இருக்கும், வலியுடனும், சத்தத்துடனும் உண்டாகும்.

* பித்தத்தினால் உண்டாகும் வயிற்றுப் போக்கு: மலம் மஞ்சள், நீலம் நிறத்தில் இருக்கும், எரிச்சல் உண்டாகும், ஆசனவாயில் புண் உண்டாகும்.

* கபத்தினால் உண்டாகும் வயிற்றுப் போக்கு: வெண்மை நிறமாக இருக்கும், சளியுடன், துர்நாற்றத்துடன் இருக்கும்.

* மூன்று தோ‌ஷ வேறுபாடுகளால் உண்டாவது: சதை, மாமிசத்தைக் கழுவிய நீர் போல இருக்கும். குன்றிமணியின் நிறத்தில், துர்நாற்றத்துடன், ரத்தத்துடன் மலத்துடனோ, மலமில்லாமலோ வரும்.

* ஜவ்வுபோன்று, ரத்தம், மலம் கலந்து வலியுடன் உண்டாகும்.

வாதத்தினால் உண்டாகும் வயிற்றுப்போக் கினைப் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

* வயிற்றுப் போக்கு இருக்கும்போது, வெறும் வயிற்றோடு விடுவதுதான் முதல் சிகிச்சை.

* செரிமானம் ஆகக்கூடிய மருந்தாகக் கொடுக்கவேண்டும்.

* ஓமம், இரட்டிமதுரம், கல்லுப்பு மூன்றும் கலந்து வெண்ணையுடன் சேர்த்து, 5 கிராம், 2 கிராம், 2 கிராம் என்ற அளவில் 3 முறை தினமும் கொடுக்க வேண்டும்.

* கடுக்காய்ப் பொடியை சுடுநீரிலோ, மோரிலோ 20 கிராம்-30 கிராம் வரை நான்கு மணிக்கொரு முறை கொடுக்க வேண்டும்.

* தாடிமாஷ்டக சூரணம், தினமும் இருமுறை, மோருடன் கலந்து கொடுக்கலாம்.

* சுக்குப் பொடி கலந்த கஞ்சி கொடுக்கலாம், சுடுநீர் மட்டுமே குடிக்கலாம். உப்பு, மிளகு, வெல்லம், கோதுமை உணவு, பூண்டு, இளநீர், கரும்புச்சாறு முதலியன சாப்பிடக் கூடாது.

* அதிக நடை, புகைப்பிடித்தல், தூக்கம் கெடல், எண்ணைப் தேய்த்துக் குளிப்பது முதலியன கூடாது.

மலத்துடன் சளி, ரத்தம் கலந்து, மலத்துடனோ, மலமில்லாமலோ உண்டாகும்.

பெருங்குடலின் கீழ்ப் பகுதியின் வீக்கம் காரணமாகவும் உண்டாகும் மற்ற அறிகுறிகளுடன் வயிற்றுவலியும் இருக்கும்.

நவீன மருத்துவம் அமீபாவால் வருவது, பேசில்லரி எனும் பாக்டீரியா காரணமாக வருவது என்று 2 வகையாக சொல்கிறது.

அமிபியா காரணமாக வரும் போது சளி போன்று ஜவ்வும், அமீபா எனும் நுண்ணுயிரும் காணப்படும். பேசில்லரி காரணமாக வரும் போது அதிக ரத்தம் வெளியேறும். அடிக்கடி மலங்கழியும்.

மருதாணி விதைகளை பொடித்து நெய்யுடன் கலந்து பாக்களவு தினமும் 2 அல்லது 3 முறை கொடுக்க வேண்டும்.

வாந்தி, வயிற்றுப் போக்குடன் கடுமையான வயிற்று வலி இருக்கும். விபிரியோ காலரா என்னும் பாக்டீரியாவால் உண்டாகிறது. தண்ணீர், காய்கறிகள், ஈக்கள், மலம் வழியாக இவை பரவும். ஆரம்பத்தில் வெறும் வாந்தி, வயிற்றுப் போக்கு மட்டும் இருக்கும்.

பிறகு வயிறு, குடல் ஆகிய பகுதிகளில் இழுத்துப் பிடிப்பது போன்ற வலி வரும். பிறகு காய்ச்சல் வரும். இறப்பு நேர்ந்தால் அப்போது கூட உடல் வெது வெதுப்பாக இருக்கும்.

ஆயுர் வேதப்படி வயிற்றுக் கடுப்பு வயிறு, குடல் பகுதிகளில் வரும் நோய்களில் கடுமையான நோய் ஆகும். வெறும் வாந்தி, வயிற்று வலி, காய்ச்சல் மட்டும் இருந்தால் அது அஜீரணத்தால் வருவதாக இருக்கும்.

வயிற்று போக்கை உடனே நிறுத்தாமல், கழிவுகள் வெளியேற சிறிது நேரம் தர வேண்டும். ஆனால் உடலிலுள்ள நீர் வெளியேறி விடும் அபாயம் இருக்கிறது.

அதனை தடுக்க மல்லி விதை போட்டுக் கொதிக்க வைத்த தண்ணீர், ஓமத் தண்ணீர் இரண்டையும் கலந்து அடிக்கடி கொடுக்க வேண்டும்.

மிருத் சஞ்ஜீவினி அரிஷ்டம் இவ் வியாதிக்கு நல்ல தீர்வாகும். கஞ்சியும், சுடுநீரும் மட்டுமே தர வேண்டும்.

தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உந்துதலே தாகம், உடலுக்குத் தண்ணீர் வேண்டும் என்ற தேவை வரும் போது தாகம் தோன்றும்.

இதுவே வியாதி ஆகும் போது, தொண்டையில் வறட்சி தோன்றும். ஆயுர் வேதப்படி, பித்தம் அதிகம் ஆனாலோ, உடல் திசுக்கள் ஓஜஸ் தரக் காரணமாக சோம குணத்தை இழக்கும் போது தாகம் என்ற நிலை உண்டாகும்.