Home சூடான செய்திகள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் ஆண்கலுக்கு ஆபத்து!!

கள்ளக்காதலில் ஈடுபட்டால் ஆண்கலுக்கு ஆபத்து!!

38

கள்ளக்காதலால் இதயங்கள் உடைந்து போவது இயல்பு. ஆனால் அதில் ஈடுபடும் ஆண்களின் ஆண்குறியும் உடைந்து போக வாய்ப்புள்ளது என்று கூறுகிறது ஒரு ஆய்வு.

கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்களின் ஆணுறுப்பு பெரும் சிதைவைச் சந்திப்பதாக அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. திருமணத்திற்கு வெளியே செக்ஸ், முறையற்ற செக்ஸ், கள்ளக்காதல், பல பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது போன்றவற்றால் ஆண்களின் ஆணுறுப்பு சிதைவடைவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் மேரிலான்ட் மருத்துவ மையத்தின் சிறுநீரகவியல் துறை தலைவர் டாக்டர் ஆண்ட்ரூ கிராமர் கூறுகையில், முறையற்ற உறவுகளில் ஈடுபடும் ஆண்களுக்கு அவர்களது ஆணுறுப்பு சேதம் அடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்கள் கிடைக்கிற இடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தத்தில் இருப்பவர்கள். வேலை பார்க்கும் இடம், கழிப்பறை, பாத்ரூம், பார்க், பீச், கார் உள்ளிட்ட இடங்களில் யாரும் பார்த்து விடக்கூடாது என்ற பயத்தோடு அவசரம் அவசரமாக உறவு கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் இவர்கள். இப்படி பயம், பதட்டம், அவசரத்தோடு உறவு கொள்வதால் ஆணுறுப்பு சேதமடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
வேகம் வேகமான உறவு, தவறான முறைகளைக் கையாளுவது, அவசர கதியில் இயங்குவது, தவறான பொசிஷன்களை கடைப்பிடிப்பது ஆகியவை காரணமாக இவர்களது ஆணுறுப்புகளுக்கு எப்போதுமே ஆபத்து உள்ளது என்று கிராமர் கூறியுள்ளார்.

மேலு்ம் அவர் கூறுகையில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த 16 பேரை நாங்கள் ஆய்வுக்குட்படுத்தினோம். இவர்களுக்கு ஆணுறுப்பில் காயம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. அந்த ஆய்வின்போதுதான் முறையற்ற வகையில் உறவு கொண்டதால் இந்த காயங்கள் அவர்களுக்கு ஏற்பட்டது தெரிய வந்தது.

மேலும் எங்களது ஆய்வுக்கு வந்திருந்தவர்களில் மூன்று பேர் முறையற்ற, கள்ளத்தனமான உறவுகளை மேற்கொண்டிருந்தவர்கள் என்பதும், இவர்களில் சிலர் ‘லிப்ட்’டில் கூட உறவு கொள்ளும் பழக்கமுடையவர்கள் என்பதும் தெரிய வந்தது என்று கிராமர் கூறியுள்ளார்.

மனைவியருடன் வாழ்ந்து வரும் ஆண்கள் உறவு கொள்ளும்போது ஏற்படுவதை விட பல மடங்கு மன அழுத்தம், பயம், பீதி, அவசரம் உள்ளிட்டவற்றை கள்ளக் காதலில் ஈடுபட்டுள்ள ஆண்கள் சந்திக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது