Home ஜல்சா நடிகை அமலபால் மேனேஜருடன் கள்ளத்தொடர்பு விவகாரம்

நடிகை அமலபால் மேனேஜருடன் கள்ளத்தொடர்பு விவகாரம்

209

ஜல்சா செய்திகள்:நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின், தமிழ் திரையுலகில் தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமே நடித்து வருவதால் என்னவோ… அவரைப் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வருவது வாடிக்கையாகி விட்டது.

ஏற்கனவே கடந்த மாதம், நடிகர் விஷ்ணு விஷாலுடன், ‘ராட்சசன்’ படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த செய்தி வெளியாவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு தான் விஷ்ணு தன்னுடைய மனைவி ரஜினியிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக அறிவித்தார். உடனடியாக இப்படி ஒரு செய்தி வெளியானதால் அது அவருக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக இருந்தது.

இந்த செய்தி குறித்து விஷ்ணு விஷால் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்ததோடு, இது முற்றிலும் பொய்யான தகவல் என கூறி தீயாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது நடிகை அமலா பால் மீண்டும் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அமலாபாலுக்கும் அவருடைய மேனேஜர் பிரதீப் குமார் என்பவருக்கும் ரசகசிய தொடர்பு உள்ளதாக சில செய்திகள் வெளியானது.

தற்போது அமலாபால் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளது “என்னை பற்றியும் எனது மேலாளர் பற்றியும் தவறான ஒரு செய்தி பரவி வருகிறது. அவர் எனது மேலாளர் மட்டும்தான். அவர் எனது தேதிகளை பார்த்துக்கொள்பவர் மட்டுமே என்று கூறி உள்ளார்”.