Home ஆரோக்கியம் பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் பற்றிய தகவல் சொல்லும் டாக்டர்

பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் பற்றிய தகவல் சொல்லும் டாக்டர்

230

பொதுமருத்துவம்:‘அடிக்கடி சிறுநீர் கழிப்பதும், தங்களையும் அறியாமல் வேலை நேரத்தில் சிறுநீர் வெளியேறுவதும் இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்னை. வயதானவர்கள் மட்டுமல்ல இளம் பெண்களும் இதனால் அவதிப்படுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பிறக்கும் போதே சிலருக்கு சிறுநீரக பிரச்னை இருக்கும். வேறு சிலருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்னை காரணமாகவும் இதுபோல் நிகழும். ஹார்மோன் பாதிப்பு, நீரிழிவு நோய், கர்ப்பகாலம், பிரசவம், சிறுநீர் பையில் கட்டி மற்றும் ஓட்டை, சிறுநீர் பாதையில் அடைப்பு, மெனோபாஸ், காசநோய்… என பல காரணங்கள் இதற்கு பின்னால் இருக்கின்றன…’’ என்கிறார் சிறுநீரகம் மற்றும் மகப்பேறு டாக்டர் .

‘‘இயற்கையின் படைப்பில் பெண்களுடைய சிறுநீர் பைக்கும், சிறுநீர் வெளியேரும் யுரேத்திரா துவாரத்துக்கும் இடையே மிகக் குறைவான இடைவெளிதான், அதாவது, நான்கு முதல் ஐந்து செ.மீ.தான், உள்ளது. ஆனால், ஆண்களுக்கு இந்த இடைவெளி 15 செ.மீ. தவிர, சிறுநீர் வெளியேறும் துவாரம், மலம் கழிக்கும் பகுதி, பிறப்புறுப்பின் வாய் என எல்லாமே பெண்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் தொற்று ஏற்பட்டால் கூட அது மற்றவற்றை பாதிக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, சிறுநீர் வெளியேறும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி, அடிவயிற்றில் வலி… இவை எல்லாம் சிறுநீர் பிரச்னைக்கான அறிகுறிகள்.

இதற்கெல்லாம் காரணம், கிருமிகள். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல் சிறுநீர் கழித்ததும் அந்தப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிடாயின் போது உறுப்புகளை சுத்தமாக தண்ணீர் கொண்டு முன் புறத்தில் இருந்து பின் புறமாக கழுவவேண்டும். மாற்றி கழுவும் போது மற்ற உறுப்பு துவாரத்தில் உள்ள பாக்டீரியா கிருமிகள் சிறுநீர் கழிக்கும் துவாரத்தில் தங்கி தொற்று ஏற்பட வழிவகுக்கும். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ‘ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினன்ஸ்’ என்ற பிரச்னையால் அவதிப்படுகிறார்கள்.

சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்னையாலும், அதைச் சுற்றியிருக்கும் தசைகள் தளர்வடைவதாலும் இந்தப் பிரச்னை ஏற்படும். இவர்கள் தும்மினாலோ, சிரித்தாலோ, இருமினாலோ, ஏதாவது எடையை தூக்கும் போதோ அல்லது குனிந்து நிமிரும் போதோ சிறுநீர் கசிவு ஏற்படும். பொதுவாக மற்றவர்கள் 4 முதல் 6 மணி வரை சிறுநீரை அடக்க முடியும். ஆனால், இவர்களால் அடக்க முடியாது. சிறுநீர் பை முழுக்க சிறுநீர் தேங்கி இருக்கும் போது லேசான தும்மல் வந்தால் கூட பெரும் அளவில் கசிவு ஏற்படும். சிலர் அடக்க முடியாமல் சிறுநீர் கழிக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பிரச்னை சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றவர்கள், நரம்பியல் குறைப்பாடு உள்ளவர்கள், சிறுநீர் நோயாளிகள், தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள், உடல் பருமனாக உள்ளவர்களை அதிகம் பாதிக்கும்.

இதனால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் அசவுகரியத்தால் அவர்கள் மனதளவில் பாதிப்படைகிறார்கள். வெளியே சொல்லவும் கூச்சப்படுகிறார்கள். ஆனால், இனி இந்தப் பிரச்னையை கண்டு கூச்சப்படாமல் அதற்கான நிபுணரை அணுகி அறுவை சிகிச்சை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்’’ என்று சொன்னவர் சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு சிறுநீர் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றார். ‘‘கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பை குழந்தையை சுமப்பதால் அது விரிவடையும். அதனால் அதன் அருகில் இருக்கும் சிறுநீரக பையில் அழுத்தம் ஏற்படும். இதுதான் கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணம்.

சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்கும் போது, அழுத்தம் கொடுப்பதால், கர்ப்பப்பையை சுற்றியுள்ள தசைகளுடன் சிறுநீரக பையை சுற்றியுள்ள தசைகளும் விரிவடையும். இதனால் சிறுநீர் பையால் சிறுநீரை அதிக நேரம் அடக்க முடியாமல் போகிறது. காலப்போக்கில் சிறுநீர்பை அல்லது கர்ப்பப்பை கீழே இறங்கி போகவும் வாய்ப்புண்டு. அவ்வாறு இறங்கி போனால், அதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே சிறுநீரக பாதிப்பு இருக்கும். இதற்கு ‘வெசிக்கோ யுரோத்ரிக் ரிப்லெக்ஸ்’ என்று பெயர். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு சிறுநீரகத்தில் இருந்து வெளியாகும் சிறுநீர், பையில் தேங்காமல், மறுபடியும் சிறுநீரகத்துக்கே யுரேட்டர் குழாய் வழியாக செல்லும். இதற்கு காரணம் சிறுநீரை சிறுநீர்பைக்கு கொண்டு வரும் குழாயில் ஏற்பட்டுள்ள பாதிப்பு. இதையும் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு குறைவாக இருக்கும். திசுக்களின் வளர்ச்சி மற்றும் சீரான ரத்த ஓட்டத்துக்கு ஹார்மோன்கள் மிகவும் அவசியம். இவை குறைவாக சுரக்கும் போது பாதிப்பு ஏற்படும். இதனால் சிறுநீர் குழாய் செயல்பாட்டில் பிரச்னை ஏற்படும். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மட்டும் இல்லாமல் திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கும் இந்தப் பிரச்னைஏற்படும். திருமணமான புதிதில் பல பெண்கள் சிறுநீர் பிரச்னையால் அவதிப்படுவார்கள். இது அந்த காலகட்டத்தில் ஏற்படும் சாதாரண விஷயம்தான். நாளடைவில் அது சரியாகி விடும். சில சமயம் உடல் உறவின் போது அவர்கள் பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்னை காரணமாக சிறுநீர் பை பாதிப்படையும். அதற்கு தகுந்த மருந்துகளை எடுத்துக் கொண்டாலே போதும்.

அதே போல் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தாலும் அதை அலட்சியப்படுத்தாமல் சரி செய்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக யாருமே சிறுநீரை அடக்கக் கூடாது. குறிப்பாக பயணத்தின் போது. இதற்காக அந்த சமயத்தில் தண்ணீரும் குடிக்க மாட்டார்கள். இப்படி செய்வது பிரச்னைக்கு வாசலை திறந்து வைத்தது போல் ஆகும். ஒரு நாளைக்கு தேவையான இரண்டரை லிட்டர் தண்ணீரை அனைவரும் பருக வேண்டும்…’’ என்று சொல்லும் டாக்டர் , சிறுநீர் பிரச்னை வந்தால் அதற்கான அறிகுறிகள் எப்படி இருக்கும் என்றும் விவரித்தார்.

‘‘அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். அடக்க முடியாது. வருகிறது என்று போனாலும், முழுமையாக போக முடியாது. சொட்டு சொட்டாக வெளியேறும். குளிர் காய்ச்சல் இருக்கும். சிறுநீர் கழிக்கும் இடத்தில் எரிச்சல் மற்றும் வலி ஏற்படும். இது தவிர கருத்தடை சாதனம் பயன்படுத்துவதாலும் பெண்களுக்கு சிறுநீர் பை பாதிப்படையும். அதே போல் பிரசவ காலத்திலும் சிறுநீர் தொற்று வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில் அது குழந்தையை பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது…