Home ஆரோக்கியம் மூன்று வேளையும் வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டால் என்ன நடக்கும்?…

மூன்று வேளையும் வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டால் என்ன நடக்கும்?…

14

என்னவோ ஏதோவென்று நீங்கள் பயன்படும் அளவுக்கு எதுவும் நடக்காது. நல்லது தான் நடக்கும்.

முக்கனிகளில் ஒன்றான வாழை நார்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்களை கொண்டது.

தொடர்ந்து சில நாட்களுக்கு வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடல் எடை மிக வேகமாகக் குறையும் என்று சிலர் சொன்னதைக் கேட்ட ஒரு அமெரிக்கப் பெண்மணி அதை முயற்சி செய்து பார்க்கலாம் எனத் தீர்மானித்திருக்கிறார்.

அப்படி அவர் தொடர்ந்து சில வாரங்கள் வாழைப்பழங்களை மட்டுமே காலை, மதியம், இரவு என சாப்பிட்டிருக்கிறார். அதன்பின் அவர் உடல் மிகுந்த ஆரோக்கியம் உடையதாகவும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்திருப்பதையும் உணர்ந்திருக்கிறார். அதனால் இந்த யோசனையை தன்னுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து பயன்பெறச் செய்தாராம்.

அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக நம்மில் பலரால் அதிகம் உண்ணப்படும் உணவாக வாழைப்பழம் விளங்குகிறது.

அதிக நுண்ணூட்டச் சத்துகள், குறைந்த விலை, என்பதையெல்லாம் கடந்து, எல்லா காலகட்டத்திலும் எளிதாக கிடைக்கக்கூடியது. அதனால் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதில் பெரிதாக சிரமம் ஏதும் இருக்காது. உணவாக இது இருப்பதால், அன்றாட உணவில் இதைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

மற்ற உணவுகளை விடுத்து, வெறும் வாழைப்பழத்தை மட்டுமே உண்டு வந்தால் உடல் எடை குறையும். ஆனால், அன்றாட உணவுடன் சேர்த்து, வாழைப்பழங்களை உண்டால் உடல் எடை அதிகரிக்கும்.

ஒரு நாளைக்கு உங்களுக்கு எவ்வளவு வாழைப்பழங்கள் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதோ அவ்வளவு சாப்பிடலாம். ஆனால் வாழைப்பழத்தைத் தவிர வேறு எதுவும் சாப்பிடக்கூடாது.

பச்சை கீரை வகைகள் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

சிலர் டீ, பால், காபி சாப்பிடலாமா என்று கேட்பார்கள். அவை எதுவும் கூடாது.

இத்தனை பழங்கள் தான் சாப்பிட வேண்டும் என்று கணக்கில்லை. உங்களுக்கு எத்தனை சாப்பிட்டால் நிறைவாக இருக்கிறதோ அவ்வளவு சாப்பிடலாம்.

இந்த டயட் மேற்கொள்ளும் போது. கட்டாயம் ஒரு நாளைக்கு 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.

அதோடு ஒரு நாளைக்கு 20 நிமிடங்களாவது கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இதைத்தொடர்ந்து சில வாரங்கள் பின்பற்றி வந்தால், உடல் எடையில் மிகச்சிறந்த மாற்றங்கள் தெரியும்.

மேலும் பெக்டின் எனும் வேதிப்பொருள் அடங்கியிருப்பதால், வாழையை சாப்பிட்டு பல மணி நேரங்களுக்கு நமக்கு பசியெடுக்காமல் இருக்கும்.

இந்த டயட்டினால் ரத்த சர்க்கரை அளவு கூடுமன்று சிலர் பயப்படலாம். இது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் தான் வைத்திருக்கும்.