Home ஜல்சா மனைவி மாற்று முறையில் உறவு: பிரபல தொழில் அதிபரின் மருமகள் பரபர புகார்

மனைவி மாற்று முறையில் உறவு: பிரபல தொழில் அதிபரின் மருமகள் பரபர புகார்

26

16-1466053187-sex3-6600 புவனேஸ்வர்: ஒடிஷாவின் முன்னணி தொழில் அதிபர் ஒருவரின் மருமகள் தனது கணவர் தேனிலவின்போது தன்னை கட்டாயப்படுத்தி மனைவி மாற்று முறையில் ஈடுபட வைத்ததாக புகார் தெரிவித்துள்ளார். ஒடிஷா மாநிலத்தின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் டிரைலோக்யா மிஸ்ரா. அவரின் மகன் சப்யசாச்சி மிஸ்ராவின் மனைவி லோபமுத்ரா(36). லோபமுத்ரா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருமணமான நாளில் இருந்து அவர்கள் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக தனது புகார் மனுவில் லோபமுத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருமணமானதில் இருந்து என்னை என் கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆஷா ஆகியோர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வருகின்றனர். அதை எதிர்த்தால் இது எல்லாம் பெரிய குடும்பங்களில் சகஜம், பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். 2006ம் ஆண்டு தேனிலவுக்கு போர்ட் பிளேர் சென்றபோது என் கணவர் என்னை கட்டாயப்படுத்தி வெளிநாட்டவருடன் உறவு கொள்ள வைத்தார். வெளிநாட்டவருடன் நானும், அவரின் மனைவியுடன் என் கணவரும் இருக்க அவர் கட்டாயப்படுத்தினார். திருமணமாவதற்கு முன்பு என் கணவர் பல பெண்களுடன் உறவு கொண்டுள்ளார். கள்ளத்தொடர்பு காரணமாக ஒருமுறை கைதும் செய்யப்பட்டுள்ளார். அவர் மாறிவிடுவார் என்ற நம்பிக்கையில் தான் அவரை மணந்தேன். ஆனால் அவர் திருமணத்திற்கு பிறகும் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருகிறார். எதிர்த்து கேட்டால் என்னை அடிப்பார். முன்பும் கூட என் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அவர் திருந்திவிடுவதாக கூறியதை அடுத்து அந்த வழக்கை வாபஸ் பெற்றேன் என்றார்