Home ஜல்சா நண்பனுடன் உறவுகொண்ட தாயார்: பொலிசாரிடம் புகார் அளித்த மகள்

நண்பனுடன் உறவுகொண்ட தாயார்: பொலிசாரிடம் புகார் அளித்த மகள்

28

அமெரிக்காவில் தனது நண்பனுடன் பாலியல் உறவுகொண்ட தாயாரை அவரது மகள் பொலிசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து தற்போது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள San Antonio நகரத்தில் Alberta Padilla(52) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.

பாடசாலை மட்டுமின்றி மாணவ, மாணவிகளுக்கு தனியாக ட்யூசனும் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், 17 வயதான வாலிபருக்கு பாடம் சொல்லிக்கொடுத்து வந்தபோது இருவருக்கும் ரகசிய உறவு ஏற்பட்டுள்ளது.

மேலும், வாலிபருக்கு செல்போன், உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்த ஆசிரியை தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் பூங்கா ஒன்றில் வாலிபருடன் ஆசிரியை உறவில் ஈடுப்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் ஆசிரியையின் மகளுக்கு தெரியவந்ததுள்ளது. ஆசிரியையின் மகளும் அந்த வாலிபரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

தனது நண்பனுடன் தாயார் ரகசிய உறவு வைத்துள்ளதை கண்டுபிடித்த மகள் அதனை உடனடியாக பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

புகாரை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை அன்று ஆசிரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தற்போது 20,000 டொலர் பினையில் ஜாமீன் கோரியுள்ள ஆசிரியை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்