Home சூடான செய்திகள் தாய் தலையீடு இல்லாமல் நடிக்கின்றேன்: கார்த்திகா

தாய் தலையீடு இல்லாமல் நடிக்கின்றேன்: கார்த்திகா

16

எனது அம்மா ராதா என்னுடைய விடயங்களில் தலையிடுவதில்லை என்று “கோ” நாயகி கார்த்திகா உறுதிபட தெரிவித்துள்ளார்.
கொலிவுட்டில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கார்த்திகா “கோ” படத்தில் அறிமுகம் ஆனார்.

அறிமுகமான முதற்படமே சூப்பர் ஹிட் ஆனதால் தற்போது தமிழுடன் மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் கார்த்திகா கவர்ச்சியாக நடிக்கக்கூடாது என அம்மா ராதா இயக்குனர்களிடம் வற்புறுத்துவதாகவும் மேலும் கதாப்பாத்திரங்கள் தெரிவை ராதாவே முடிவு செய்கிறார் என்றும் தகவல் வெளியாகின.

இத்தகவலால் கோபமான கார்த்திகா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கார்த்திகா, என்னுடைய விடயங்களில் அம்மா தலையிடுவதில்லை. படப்பிடிப்புக்கு சென்றதுமே இயக்குனரின் குழந்தையாகி விடுகின்றேன்.

அவர் சொன்ன படியே திரையில் நடிக்கின்றேன். எனது அம்மா கடின உழைப்பால் முன்னேறி வந்தவர். அவர் மீது மரியாதை வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து ராதா, சினிமாவில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. நடிகர், நடிகைகள் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேறி வருகின்றனர். நிச்சயம் எனது மகளும் நன்றாக வருவாள் என்றார்.