Home ஜல்சா கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் பிடித்து மிரட்டல்: வாலிபர் கைது

கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் பிடித்து மிரட்டல்: வாலிபர் கைது

23

Captureசங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலை அடுத்த குருவிகுளம் அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் தெய்வு. இவரது மனைவி மகாலட்சுமி (வயது 28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர்.

இதை அதே ஊரைச் சேர்ந்த ராபர்ட் மகன் அந்தோணி (35) என்பவர் நோட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று ரவி- மகாலட்சுமி இருவரும் உல்லாசமாக இருந்ததை அவர்களுக்கு தெரியாமல் அந்தோணி செல்போனில் படம் பிடித்துள்ளார்.

பின்னர் அவர் மகாலட்சுமியிடம் சென்று அந்த படத்தை காட்டி, தன்னுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் படத்தை நெட்டில் பரப்பி விடுவேன் என மிரட்டல் விடுத்தாராம். ஆனால் அதற்கு மகாலட்சுமி மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்தோணி அந்த ஆபாச படத்தை தனது நண்பர் மாரிமுத்து என்பவரின் செல்போனுக்கு அனுப்பி உள்ளார். அதன் பின்னர் அந்தோணியும், மாரிமுத்துவும் சேர்ந்து மகாலட்சுமியை மிரட்டி உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த மகாலட்சுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து மகாலட்சுமி சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மகாலட்சுமியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த ரவி, படம் பிடித்த அந்தோணி, அவரது நண்பர் மாரிமுத்து ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை கைது செய்தனர். ரவி, மாரிமுத்துவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குருவிகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.