Home ஜல்சா கணவன், 2 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் பட்டதாரி பெண் ஓட்டம்

கணவன், 2 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் பட்டதாரி பெண் ஓட்டம்

26

Captureமார்த்தாண்டம்: கணவன், இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் பட்டதாரி பெண் ஓடிவிட்டார். மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரசல்குமார் (27). கட்டிட தொழிலாளி. மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஷைனி (22). சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரசல்குமார், தனது மனைவி ஷைனியை உயர் படிப்பு படிக்க வைத்து வருகிறார். இதற்காக ஷைனி அடிக்கடி திருநெல்வேலி சென்று வருவாராம். அப்போது அவருக்கு டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.கடந்த மாதம் 5ம் தேதி நள்ளிரவு ஷைனியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனே செல்போனுடன் பெட்ரூமில் இருந்து வெளியே வந்தார். மணிகணக்கில் யாருடனோ சிரித்து பேசிக் கொண்டு இருந்திருக்கிறார். காலையில் ரசல்குமார் எழுந்து பார்த்த போது மனைவி ஷைனியை காணவில்லை. பல இடத்தில் தேடிபார்த்தும் அவரை பற்றி தகவல் கிடைக்கவில்லை.

பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகை, ரூ.18 ஆயிரம் பணம் மற்றும் துணிமணிகளோடு ஷைனி மாயமாகியிருப்பது தெரியவந்தது. இதுபற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தினர். ஷைனியின் செல்போனுக்கு வந்த அழைப்புகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியை சேர்ந்த ஒருவருடன் அதிக நேரம் பேசியது தெரிய வந்தது. ஷைனியுடன் பேசியவர் டிரைவர் என்பதும், தற்போது அவருடன் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருக்கும் இடத்தை உறுதிபடுத்திக் கொண்ட போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால் போலீசார் வருவதை தெரிந்துகொண்ட கள்ளக்காதல் ஜோடி தப்பிவிட்டது. இதையடுத்து தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில் கேரள பகுதியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.