Home ஆரோக்கியம் ஒருவர் எப்போதெல்லாம் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்?

ஒருவர் எப்போதெல்லாம் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்?

27

கழிவறைக்கு சென்று திரும்பும் போது.

• கழிவறைக்கு சென்று திரும்பும் போது.

• செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளை தொட நேர்ந்த பின்பு.

• தும்மல், இருமல் சமயங்களிலும், மூக்கு ஒழுகுவதை துடைக்கும் சமயங்களிலும் கைகழுவுவது அவசியம்.

• வெளியே பயணங்கள் சென்று திரும்பிய உடன் கைகளை சுத்தம் செய்தபின் மற்ற பணிகளில் ஈடுபட வேண்டும்.

• கழிவுகளை சுத்தம் செய்தால் நிச்சயம் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

• சாப்பிடும் முன்பும், பின்பும் அவசியம் கைகழுவுங்கள்.

• காயங்களுக்கு மருந்திடும் முன்பும், பின்பும், நோய் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும் முன்பும், பின்பும் கைகால்களை சுத்தம் செய்வது நல்ல பழக்கம்.

• காண்டாக்ட் லென்ஸ் கழற்றி மாட்டினாலும், பொது இடங்களில் கழிவறைகளை பயன்படுத்தினாலும், குழந்தைகளை எடுக்கும் முன்பாகவும் கை கழுவுவது அவசியம்.

• கை கழுவியவுடன் உலர்ந்த துண்டால் கைகளை துடைப்பது முக்கியம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது ஒரு வழி