Home ஆரோக்கியம் உங்கள் கையில் உடல் ஆரோக்கியம்!

உங்கள் கையில் உடல் ஆரோக்கியம்!

17

ht2ஆரோக்கியமான உடல்நிலை ஒருவருக்கு வேண்டும் என்றால் அவர் சத்தான உணவு வகைகளை உட்கொண்டால் மட்டும் போதாது; சுத்தமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நோய்கள் நெருங்காது.
ஆனால், சுகாதாரம் இல்லாததால் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனைகளில் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகி 90 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கிறார்களாம். இதுதவிர, சுமார் 20 லட்சம் பேர் வரை நோய்த்தொற்றுதல்களுக்கு ஆளாகி கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
கை கழுவுவதில் இருந்து எல்லா விதத்திலும் சுத்தமாக இருந்தால் இந்த நோய்த் தொற்றுதலில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் டாக்டர்கள். ஸ்டெபிலோகாக்கஸ் ஆரியஸ் என்ற பாக்டீரியா தான் அசுத்தமான கைகளில் இருந்து கொண்டு நோயை பரப்புகிறது. நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து போராடும் சக்தி இந்த பாக்டீரியாவுக்கு இருக்கிறது. அதனால்தான், கையை சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்கள் அந்த பாக்டீரியாவின் தாக்குதலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.
இதில் இருந்து தப்பிக்க உலக சுகாதார நிறுவனம் சில ஆலோசனைகளை கூறியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், நோயாளிகளை பரிசோதித்த பிறகு தங்களது கைகளை கிருமி நாசினிக் கொண்டு கழுவ வேண்டும்.
மலம் கழித்த பிறகு கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
சாப்பிடப்போகும் முன்னரும் கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும் என்று கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.
இனி நீங்களும் சமர்த்தா கை கழுவி, சுத்தமா வெச்சுக்குவீங்க தானே?