Home ஜல்சா ஆபாச படம் வெளியானதால் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட இந்தி நடிகை வருமானம் இன்றி ரோடு-கோவில்களில் படுத்து...

ஆபாச படம் வெளியானதால் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட இந்தி நடிகை வருமானம் இன்றி ரோடு-கோவில்களில் படுத்து தூங்குகிறார்

15

201606190254471410_Exiled-from-the-home-Hindi-actress-in-movie-release_SECVPFஇந்தி நடிகை அலிஷாகானின் ஆபாச படம் இணையதளத்தில் வெளியானதால் அவரை வீட்டில் இருந்து விரட்டி விட்டனர். இதனால் அவர் சாப்பாட்டுக்கு கூட வழி இன்றி ரோட்டிலும், கோவில்களிலும் படுத்து தூங்குகிறார்.

இந்தி நடிகை

டெல்லியை சேர்ந்த மாடல் அழகி அலிஷாகான். இவர் ‘மை ஹஷ்பன்ட் வைப்’ என்ற இந்தி படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் அலிஷாகான் இளைஞர் ஒருவருடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். தன்னுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞரே அந்த வீடியோவை வெளியிட்டு விட்டதாக அந்த புகாரில் கூறி இருந்தார்.

அனாதையாக சுற்றுகிறார்

அதன் பிறகு அலிஷாகானுக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை. சினிமா துறையில் இருந்து ஒதுக்கப்பட்டார். நீண்ட நாட்களாக அவர் என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தது.

ஆனால் தற்போது அலிஷாகான் வீட்டில் இருந்து விரட்டப்பட்டு தெருக்களில் அனாதையாக சுற்றி திரியும் தகவல் வெளியாகி உள்ளது.

வீட்டை விட்டு விரட்டினர்

ஆபாச படம் வெளியானதும் அவர் குடும்பத்தினர் அதிர்ச்சியானார்கள். அலிஷாகானை அவரது தாயும், தம்பியும் சேர்ந்து வீட்டை விட்டே விரட்டியடித்து விட்டனர். உறவினர்கள் மற்றும் தோழிகளும் அவரை சேர்க்கவில்லை. யாரும் உதவியும் செய்யவில்லை. கையில் காசு இல்லாமல் தற்போது அனாதை போல் தெருக்களில் சுற்றி திரிகிறார். இரவில் தூங்குவதற்கு வீடு இல்லை. கோவில்களிலும் தெரு ஓரங்களிலும் படுத்து தூங்குகிறார். சாப்பாட்டுக்குகூட வழி இல்லாமல் பிச்சைக்காரியைப்போல் பரிதாபமான தோற்றத்தில் அவர் திரியும் படங்கள் இணையதளங்களில் வெளியாகி இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.