Home ஜல்சா அண்ணனின் மனைவிக்கு தம்பி செய்த வேலை! பாவம் அந்த அண்ணா நம்பித்தானே விட்டார்!

அண்ணனின் மனைவிக்கு தம்பி செய்த வேலை! பாவம் அந்த அண்ணா நம்பித்தானே விட்டார்!

27

420342532anagarigam_048 (1)தனது அண்ணனின் மனைவியான அண்ணியை, பின் தொடர்ந்து அவரது வாயை வெட்டி விட்டு அவரது பிருடத்தை (பின் பகுதி) கத்தியால் குத்துமாறு கூறி, அடியாளுக்கு 50 ஆயிரம் ரூபாயை கொடுத்த, மைத்துனனை கடுகண்ணாவ பொலிஸார், செவ்வாய்க்கிழமை(28) கைது செய்துள்ளனர்.

இதேவேளை, ஒப்பந்தத்தின் அடிப்படையில் குற்றத்தை செய்ய முயற்சித்த அடியாளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முதலில் பெண்ணை கொலை செய்யுமாறு சந்தேகநபர், அடியாளிடம் கூறியுள்ளார். அதற்கு அடியாட்கள் மறுப்பு தெரிவிக்கவே, பெண்ணின் வாயை கிழித்து, அவரது பின்புறத்தில் கத்தியால் குத்துமாறு கூறி 50,000 ரூபாய் பணத்தை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மெற்கொண்ட பொலிஸார் குறித்த நபர்களை கண்டி-பிலிமத்தலாவ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாகவே குறித்த நபர், இவ்வாறு செய்யவதற்கு அடியாட்களை அனுப்பி முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.