Home பெண்கள் பெண்குறி நாப்கின் பயன்படுத்துவது தீமையா?

நாப்கின் பயன்படுத்துவது தீமையா?

63

”உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும் என்று நாம் விலை கொ டுத்து வாங்கும் பொருட்களே, நமக்கு ஆரோக்கிய கேட்டினை ஏற்படுத்தும் காரணியாக இருந்தால்..? அதுதான் நட க்கிறது பெண்கள் மாதவிடாய் காலங் களில் பயன்படுத்தும் ‘நாப்கின்’ விஷய த்தில்!”  அதிர்ச்சியான தகவல் சொல்கி றார், முனைவர் முகமது ஷாபீர். ‘பயோ டெக்னாலஜி’ துறையில் ஆய்வுசெய்து வரும் திருச்சியைச் சேர்ந்த ஷாபீர், அத ன் ஒரு பகுதியாக ‘நாப்கின்’ பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுச் செய்திகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

 

”இன்று சந்தையில் கிடைக்கும் சில நாப்கின்களை ஆய்வு செய்த போது, பல உண்மைகள் புரிந்தது. அந்த நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப் பட்டிரு க்கிறது. மறுசுழற்சிக்கு அவர்கள் பயன் படுத்துவது, பிளாஸ்டிக் வகைப் பொருட் கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பொதுவாக, நான்கு லேயர்களைக் கொ ண்ட நாப்கினில் முதல் லேயர்… சுத்திக ரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொரு ளாலானது; இரண்டாவது லேயர், மறு சுழற்சி செய்யப்பட்ட, அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர்; மூன்றாவது லேயர், ஜெல் (பெட்ரோலியப்பொருளால் தயாரானது); கீழ் லேயர்… பாலிதீ ன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது, தொழிற்சாலை களில் பயன்படுத்தும் பசை வகை.

 

இரண்டாம் லேயரில் உள்ள அச்சடிக்கப் பட்ட டிஷ்யூ பேப்பரில் டையிங் ரசாயன ம் இருப்ப துடன், ஹைப்போ குளோரைட் என்ற வேதிப்பொருளாலும் அந்த பேப்பர் பிளீச்சிங் செய்யப்படுகிறது. பெண்கள் இதைப் பயன்படுத்தும்போது, நுண்ணிய துகள்களாகப் படிந்திருக்கும் இந்த ரசாய னங்கள், ஈரப்பதத்தின் காரணமாக டை யாக்ஸேன் ஆக மாறுபாடடைகிறது. கே ன்சர் நோய்க்கான மூலக்காரணிகளில் … இந்த டையாக்ஸேனும் ஒன்று. தவிர, இத்தனை ரசாயனங்களால் ஆன இந்த நாப்கின்களைப் பயன்படுத்துவதால் பிற ப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்னை, வெள்ளைப்படுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் கேன்சர் என்று பல பிரச்னைகள் வரிசை கட்ட நேரிடுகிறது.

 

நாப்கின் தயாரிப்புக்குப் பிறகு, அவை பேக்கிங் செய்து அனுப்ப ப்படுவதிலும் போதுமான சுத்தம் இருப்பதில்லை என்பதும் கவ லைக்குரிய விஷயமே! அதிக விலை கொடுத்து வாங்கும் முன் னணி நிறுவன நாப்கின்களில் கூட தயாரிக்கப்படும் தேதிதான் இருக்குமே தவிர, காலாவதி நா ள் என்பது குறிப்பிடப்படுவதில் லை. சில கம்பெனி தயாரிப்புக ளில், ‘தயாரிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்தினால் நல்லது’ என்று போட்டிருக்கிறார்கள்” என்ற ஷா பீர்,

”இன்று பெண்களின் பூப்படையும் வயது 13 என் றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து மெனோ பாஸ் ஏற்படும் 45 வயது வரை, மாதத்தில் மூன் று, நான்கு நாட்கள் என கிட்டத்தட்ட 30 வருட ங்களுக்கும் மேலாக அவர்கள் மாதவிடாய் சமயங்களில் நாப்கின் உபயோகிக்க நேரிடுகிற து. ரசாயனக் கலவைகளால் உருவான நாப்கி னைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது, அதன் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாத தாகிறது” என்று நிறுத்தினார்.

 

”இதற்குத் தீர்வுதான் என்ன?” என்று அவரிடமே கேட்டோம்.

 

”வாங்கும் காசுக்குத் தரமான நாப்கின்களைத் தயாரித்துக் கொடு க்கும் மனசாட்சி, சம்பந்தப்பட்ட நிறுவ னங்களுக்கு இருக்க வேண்டும். இ தோ… இந்த நாப்கின் ஹாங்காங்கில் தயாரிக்கப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படவில்லை. பிரின்ட் எது வும் செய்யப்படாத துணிதான் பயன்ப டுத்தப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப் பட்டிருக்கும் ஜெல் என்பது, மக்காச் சோளத்தின் தண்டிலிருந்து எடுக்கப்ப ட்ட ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண் ட ஜெல். மேலும் இந்த நாப்கினில் பய ன்படுத்தப்பட்டுள்ள ‘அனியன்ஸ் சிப்’, கிருமி நாசம் செய்யும் தன்மை கொண் ட பொருள். மேலும் இதில் இருந்து வெளி யாகும் இன்ஃப்ரா ரெட் கதிர்கள் ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதுடன், அதை சமன் செய்ய வல் லது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள டிஷ்யூ பேப்பரும் தீங்கு விளைவி க்காதது.

 

வெளிநாட்டில் நாப்கின் என்பது பெண்களின் ஆரோக்கியம் சம்பந் தப்பட்ட பொருள் என்று அக்கறைப்படுவதால், அதன் தரக்கட்டுப்பாட் டு சோதனையை வலுவாக்கி இருக்கிறார்கள் . இந்தியாவிலோ, விளம்பரங்களுக்குக் கொ டுக்கும் முக்கியவத்துவத்தை, அதன் தர மேம் பாட்டுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொ டுக்காதது, நம் இந்தியப் பெண்களின் ஆரோக் கியத்தில் அவர்களும் அரசும் கொண்டுள்ள அலட்சியத்தைத் தான் காட்டுகிறது” என்று சாடிய ஷாபீர்,

 

”மாதவிடாய்க் காலங்களில் தரமான நாப்கின் கள் உபயோகிக்க வேண்டும். அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டாயம் நாப் கினை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பெண்களை பல பிரச்னைகளில் இருந்தும் பாதுகாக்கும்!” என்று வலியுறுத்தினார்.

 

மிகமிக கவலைத் தரக்கூடிய இந்த விஷயம் பற்றி ‘கன்ஸ்யூமர் அசோ ஸியேஷன் ஆஃப் இந்தியா’ அமைப் பின் டைரக்டர் ஆர். தேசிகனிடம் கே ட்டபோது, ”மலேஷியா, தைவான் போன்ற நாடுகளில் இருக்கின்ற வியாபாரிகள், தங்கள் நாடுகளில் எக்ஸ்பயரி ஆன மற்றும் பயன்படுத் தப்பட்ட குழந்தைகளுக்கான நாப்கி ன், சானிட்டரி நாப்கின் இவற்றை யெல்லாம் மொத்தமாக வாங்கி, ‘வேஸ்ட்’ என்று இந்தியாவுக்கு எக் ஸ்போர்ட் செய்வார்கள். சென்னைக்கு வரும் அவற்றை ராயபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைத்து, டூத் பிரஷ் மூலமா க சுத்தம் செய்து, புது நாப்கின்கள் போல இங்கே விற்பனை செய் வார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அரசு அதிகாரிகள் அப்படி விற்கப்பட்ட தரமற்ற நாப்கின் களை ஒட்டுமொத்தமாக அழித்தார்கள்.

 

இப்போது, ஷாபீர் சொல்லும் தகவல்களை, உங்கள் மூலமாகக் கேட்டு நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவர் சொல்கின்ற விஷயத்தில் உண்மை இரு க்கிறது என்பதில் சந்தேகமே இல்ல. ஆனால், இந்த ஆய்வை அவர் அறிவியல்பூர்வமாக நிரூபித்திருக்கிறாரா என்று தெரிய வேண்டும்” என்ற தேசிகன்,

 

”சானிட்டரி நாப்கினுக்கு என்று வாலன்டரி தரக்கட்டுப்பாடு சர் டிபி கேட் ஐ.எஸ்-5405 என்பது தரப்படுகிறது. ஆனால், இந்த தரச்சான்றித ழோடுதான் சானி ட்டரி நாப்கின் இந்தியாவில் விற்கப்பட வேண்டும் என்று சட் டம் இல்லை. தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற்று கொள்ளலாம் என்றுதா ன் கூறப்பட்டுள்ளது. பல கம்பெ னிகள் இதை ஃபாலோ செய்வதில்லை.

 

இப்போது, ஷாபீர் கொடுத்திருக்கும் ஆய்வு அறி க்கையை உடனடி யாக, பி.ஐ.எஸ். (பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ஸ்) அமைப்பின் டைரக்டர் ஜெனரல் ஷரத் குப்தா ஐ.ஏ.எஸ்-க்கு மெயில் அனுப்பி விடுகிறேன். கூடவே நாப்கின் விஷயம் குறித்து நாங்களும் தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கப் போகிறோம். அதை வைத்து, இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டிவிடலாம். எப்படியும் ஆறு மாதங்களில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கு வதை கட்டாயப்படுத்தும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று சொன்னார்.

 

சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் சாதனாவிடம் இதுபற்றி கேட்டபோது, ”ஷாபீர் சொல்கின்ற தகவல்கள் அத்தனை யுமே சரி என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், சில உண்மைகள் இருக்கவே செய்கின் றன என்பதை மறுக்க முடியாது. நீங்கள் இதுபற்றி பேசுவதற்காக வருகிறேன் என்று என்னிடம் போ னில் கேட்டதுமே… பிரபல கம்பெ னிகள் தயாரிக்கின்ற சில நாப்கின் களை வாங்கிப் பார்த்தேன். அவற்றின் உள்ளே இருக்கின்ற பொருட் கள் பற்றியோ, எப்படி சுத்தமானதாக தயாரிக்கப்பட்டிருக்கிறது என் பது பற்றியோ எந்த விவரங்களும் அ தில் இல்லை. அதேசமயம், எத்தனை மாதத்துக்குள் பயன்படுத்த வேண்டும் என்கிற தகவல் இடம் பெற்றிருக்கி றது.

 

முன்பெல்லாம் நாப்கின்களுக்கு பதி ல் துணியை பயன்படுத்தினார்கள். ஆ னால், அதில் உள்ள சுத்தம் சந்தேகத்து க்குரியதே. அப்படி பார்க்கும்போது நா ப்கின்கள் நான்கு மணி நேரத்துக்கு பிறகு தூக்கி எறிந்து விட போகிறோ ம் என்பதால் பிரச்னை இல்லை. பொ து வாக இன்ஃபெக்ஷன் ஆவதற்கு இரண்டு நாட்கள் பிடிக்கும். அது கூட, தொடர்ந்து ஒரே நாப்கினை பயன்படுத்தும்போதுதான் ஏற்படு ம். ஆனால், அப்படி யாரும் செய்வதில்லை . மற்றபடி, எந்த முறையில் சுத்திகரிக்கி றார்கள் என்பது கேள்விக்குரியதுதான். நாப்கின்க ளை பொறுத்த வரை ஐ.எஸ்.ஐ. முத்திரை அவசியம் என்பதை நானும் வலியுறுத்துகிறேன்” என்று அக்கறையோ டு சொன்னார் டாக்டர்.

 

நன்றி – தமிழ் குறிஞ்சி