Home உறவு-காதல் கணவனிடம் திருமணத்திற்கு பின் பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்

கணவனிடம் திருமணத்திற்கு பின் பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்

267

காதல் உறவு:திருமண உறவில் ஆண்கள்தங்களைசமமாக நடத்த வேண்டும் என்று அதிகமானபெண்கள் எதிர்பார்ப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

திருமணத்தின்போது ஆண்களிடத்திலிருந்து பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பது தொடர்பானஆய்வை பாரத் மேட்டரிமோனிநடத்தியுள்ளது. இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள தரவுகள் பின்வருமாறு. 44 சதவிகித பெண்கள் தங்களின் வாழ்க்கை துணை தங்களை சமமாக நடத்த வேண்டும் என்றும் நன்றாக வேலையில் இருக்கு வேண்டுமென்றும் எதிர்பார்க்கின்றனர்.

90 சதவிகிதமான பெண்கள் கல்யாணத்திற்கு பிறகு எல்லா வேலைகளையும் சமமாக பிரித்து செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர். அதில் வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பில்ஆண்களின் சம பங்கு வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். 86% சதவிகித பெண்கள் தங்களது வாழ்க்கைத்துணை தனது பெற்றோரை அவரின் பெற்றோர்போல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

64 சதவிகித பெண்கள் தங்களது மத நம்பிக்கைகளை திருமணத்திற்கு பிறகு விட்டுகொடுக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். 35 சதவிகிதம்பெண்கள் தங்களது தனித்தன்மை வாய்ந்த திறமையை திருமணத்திற்கு பிறகு விட்டுக்கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

68 சதவிகித பெண்கள்,கணவர்கள் தங்களைதினமும் அலுவகலகத்திற்கு கொண்டுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. மேலும் 54 சதவிகித பெண்கள் ஷாப்பிங் செல்லும்போது, கணவரும் உடன் வரவேண்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை .

இந்த ஆய்வு தொடர்பாக பேசிய பாரத் மேட்டரிமோனியின் தலைமை செயல் அதிகாரி ‘இந்த ஆய்வு மூலம் இளம்பெண்கள்எதை எதிர்பார்க்கின்றனர் என்பது தெரிய வருகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு எங்களால் செயல்பட முடியும்’’,என்று தெரிவித்தார்.