Home இரகசியகேள்வி-பதில் எச்.ஐ.வி வைரஸ் செக்ஸ் மூலம் மட்டுமா பரவும் ? உங்கள் கேள்விகளுக்கான பதில் !

எச்.ஐ.வி வைரஸ் செக்ஸ் மூலம் மட்டுமா பரவும் ? உங்கள் கேள்விகளுக்கான பதில் !

28

இன்று உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கும் நோய் எது என்று கேட்டால் அது எச்.ஐ.வி என்று அழைக்கப்படும் எயிட்ஸ் நோய் ஆகும். அதுவும் மனிதர்களின் வீக் பாயின்ட் எதுவோ அதனைப் பார்த்து அங்கே அடிக்கிறது இந்த நோய். பொதுவாக செக்ஸில் ஈடுபட்டால், (செக்ஸில் ஈடுபடும் பாட்னர்) க்கு அந்த நோய் இருந்தால் மற்றைய நபருக்கு தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எயிட்ஸ் வைரஸ் ரத்தத்தில் காணப்படுகிறது. இந்த வைரஸ் ஆண்களின் பாலியல் உறுப்பு ஊடாகவும் பெண்களின் பாலியல் உறுப்பு ஊடாகவும் பரவும். மற்றும் ரத்த மாற்றம் செய்துகொள்வோர் மற்றும் சுத்திகரிக்கப்படாத ஊசிகளைப் பாவிப்பதாலும் இது பரவுகிறது. குறிப்பாக பெண்களின் உடலை எயிட்ஸ் நோய் தாக்கினால், அது முதலில் இனப்பெருக்க உறுப்பையே பாதிக்கிறது. உடலுறவில் ஈடுபடும்போது, பெண்களின் பிறப்பு உறுப்பில் கசியும் ஒருவகை திரவத்தில், இந்த வைரஸ் காணப்படும். இது ஆண்களின் குறியின் நுனியில் படும்போது, மென்மையான அவ்விடத்தினூடாக ரத்த நாளத்தை அடைந்து ஆண்களுக்கும் பரவுகிறது.

இதேபோல ஆண்களுக்கு இந் நோய் காணப்பட்டால், அது ஆண்களின் இனப்பெருக்க உறுப்பு மற்றும் சுரப்பிகளையே முதலில் தாக்குகிறது. ஆண் பெண்ணோடு உடலுறவில் ஈடுபடும்போது ஆணின் விந்து ஊடாகவும், மற்றும் உணர்ச்சிப் பெருக்கில் ஆண் குறியில் இருந்து கசியும் பிறிதொரு திரவம் ஊடாகவும், இது பெண்களின் பிறப்புறுபினூடாகச் சென்று, ரத்தத்தில் கலக்கிறது. இதன் காரணமாகவே இந் நோயைத் தடுக்க ஆண்கள் ஆணுறை அணியவேண்டும் என்று, பல விளம்பரங்கள் போடப்பட்டு வருகிறது. இந் நோய் ஒருவரைத் தாக்கினால், அவ்வளவு சுலபத்தில் கண்டறிய முடியாது. இந் நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவருக்கு அன்றைய தினம் சிறிதாக ஒரு காச்சல் தான் காயும். சிலவேளை அதுகூட இருக்காது. நாளாக நாளாக, இந்த வைரஸ் எமது உடலில் உள்ள, வெள்ளை அணுக்களைத் தாக்கி, அதனை முற்றாகச் செயலிழக்கச் செய்துவிடும். இதன் காரணமக எமது உடலில், நோய் எதிர்ப்பு தன்மை முற்றாகப் பாதிக்கப்படும். இதனால் ஜலதோஷம், காச்சல், எல்லா வகையான நோய்களும் மிக விரைவாக எம்மை தொற்றிக்கொள்ளும்.

இதுவே கடைசியில் எமக்கு எமனாகி, கொன்றுவிடும். இந் நோயை குணப்படுத்த இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். ஆனால் ஒருவர் உடம்பில் இந்த வைரஸ் பரவினால், அது மேற்கொண்டு விருத்தியாகாமல் ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள், இந்த வைரஸை செயற்கை முறைமூலம் கண்டுபிடித்ததாகவும், பின்னர் இதனை குரங்கு ஒன்றிற்கு கொடுத்து சோதனை செய்தவேளை, குறிப்பிட்ட குரங்கு பரிசோதனை நிலையத்தில் இருந்து தப்பிவிட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அது தப்பிச் செல்லும்போது ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளது. இதனூடாகவே அந்த ஆபிரிக்க இனத்தவருக்கு முதன் முதலாக எயிட்ஸ் நோய் பரவியது என்று பரவலாக எல்லோராலும் கூறப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும், ஒருத்திக்கு ஒருவன் என்று வாழ்ந்துவிட்டால் இந் நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று பலரும் கூறுகிறார்கள். இதுவும் ஒருவகையில் உண்மை தான். பல பெண்களிடம் செல்லும் ஆண்களும், பல ஆடவரை நாடிச் செல்லும் பெண்களுமே இந் நோயின் தாக்கத்துக்கு ஆளாகிறார்கள். அதிலும் பாதுகாப்பு இன்றி உடலுறவு கொள்வோரும் அடங்குவர்.

5 நிமிட இன்பத்துக்காக வாழ் நாள் முழுவதும் அல்லலுறவேண்டுமா என்று யோசிக்கும் ஆண்களும் பெண்களும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார்கள். குறிப்பாக சுய இன்பம் காணும் பழக்கமுடைய ஆண்களும் பெண்களும் இந் நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிவிடுகின்றனர் என்ற கருத்தும் உண்டு. அதற்காக நீங்கள் அதற்கு அடிமையாகிவிடவேண்டாம் ! ஒரு பெண்ணோடு பல வருடங்களாக உறவை வைத்துக்கொள்ளுங்கள் அது போதும்…. ஆனால் அப் பெண் உங்களோடு மட்டும் தான் உறவில் ஈடுபடுகிறாரா என்றும் அவதானிப்பது நல்லது சார் !