Home சூடான செய்திகள் வேறொரு நபருடன் உல்லாசம் அனுபவித்த பெண்ணை உருட்டுக் கட்டையால் அடித்து கொலை

வேறொரு நபருடன் உல்லாசம் அனுபவித்த பெண்ணை உருட்டுக் கட்டையால் அடித்து கொலை

22

தமிழகத்தில் வேறொரு நபருடன் உல்லாசம் அனுபவித்த பெண்ணொருவரை உருட்டுக் கட்ையால் அடித்து கொலை செய்த வழக்கில் அவரது கள்ளக்காதலனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள அழிச்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல்.

இவர் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சந்திரா (வயது 40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். imagesஇந்தச் நிலையில், கடந்த மாதம் சந்திரா, அங்குள்ள ஐயனார் கோவிலிலுள்ள ஒரு சுவாமி சிலையின் கழுத்தில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த புவனகிரி பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலையில் சந்தேகத்தின் பேரில் சந்திராவின் கள்ளக்காதலனான அழிச்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (20) என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் சந்திராவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, பிரகாஷ் பொலிஸில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

எனக்கும் எங்கள் கிராமத்தில் வசிக்கும் சந்திராவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. சந்திராவின் கணவர் வெளிநாட்டில் உள்ளதால் நான் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்தேன். இதனால் எனக்கு அவருடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. சந்திராவின் மகள்கள் பாடசாலைக்கு சென்றதும் நான் அவரது வீட்டுக்கு சென்று சந்திராவுடன் உல்லாசம் அனுபவித்து வந்தேன். இந்த நிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த ஹரிகரன் (28) என்பவரும் சந்திராவுடன் நெருங்கி பழகி வந்தார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரிகரனுடன் சந்திரா அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தது எனக்கு தெரியவந்தது.

இதனையடுத்து அவருடன் உள்ள பழக்கத்தை துண்டிக்குமாறு நான் சந்திராவிடம் பலமுறை தெரிவித்தேன். இருப்பினும் அவர் ஹரிகரனுடன் உள்ள தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து பழகி வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நான் சென்னைக்கு சென்றேன். பின்னர் கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு சொந்த ஊருக்கு திரும்பி வந்து, சந்திராவை பார்க்க நினைத்து அவரது வீட்டுக்கு சென்றேன். அங்கு ஒரு அறையில் சந்திராவும், ஹரிகரனும் உல்லாசமாக இருந்தனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த நான் ஹரிகரனை அங்கிருந்து அடித்து விரட்டினேன்.

அப்போது ஆத்திரத்தில் இருந்த நான் சந்திராவை கொலை செய்ய முடிவு செய்தேன். அவரது மகள்கள் வீட்டிலுள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால், சத்தம் போடாமல் இருக்க சந்திராவின் வாயில் துணியை வைத்து அடைத்தேன். இதையடுத்து அவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்தேன். அவர் இறந்ததை உறுதி செய்ததும் சந்திராவின் உடலை அவரது வீட்டின் பின்புறம் உள்ள ஐயனார் கோவிலுக்கு கொண்டு சென்றேன். பின்னர் சந்திரா தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸாரை நம்ப வைக்க முடிவு செய்தேன். அதன்படி அவர் அணிந்திருந்த புடவையை கழற்றி சந்திராவின் கழுத்தில் கட்டினேன்.

புடவையின் மறுமுனையை கோவிலில் இருந்த சுவாமி சிலையின் கழுத்தில் கட்டி, அவர் தூக்குமாட்டியது போல கட்டினேன். பின்னர், நான் வீட்டிற்கு சென்று எதுவும் தெரியாதது போல இருந்தேன். ஆனால், பொலிஸார் நடத்திய விசாரணையில் நான் உண்மையை ஒப்புக்கொண்டேன். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். இதையடுத்து பிரகாஸை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.