Home சமையல் குறிப்புகள் சுவையான மட்டன் குழம்பு தயார் செய்வது எப்படி?

சுவையான மட்டன் குழம்பு தயார் செய்வது எப்படி?

207

சமையல் கலை:தேவையான பொருட்கள் :

மட்டன் – அரை கிலோ

சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 2
மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி
மல்லித் தூள் – ஒன்றரை மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் – கால் கப்
கசகசா – அரை மேசைக்கரண்டி
சோம்பு தூள் – ஒரு தேக்கரண்டி
பட்டை – அரை அங்குலத் துண்டு
கல் உப்பு – 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி

செய்முறை :

மட்டனைத் துண்டுகளாக்கி கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய் துருவலுடன் கசகசா சேர்த்து மிக்ஸி நைசாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி சற்று வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டனை சேர்த்துப் போட்டு நன்கு கிளறவும்.

பிறகு உப்பு சேர்த்து பிரட்டவும். (உப்பு சேர்த்து பிரட்டுவதால் கறியில் நன்கு உப்பு சேர்ந்துவிடும்) மட்டன் சற்று நிறம் மாறியதும் மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

மிதமான தீயில் வைத்து மட்டன் தூள் வகைகள் ஒன்றாக சேரும்படி நன்கு 2 நிமிடங்கள் பிரட்டவும்.

அடுத்து மட்டனுடன் தேங்காய் விழுது ஒன்றாக சேரும்படி கிளறிவிட்டு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி தீயை அதிகமாக வைத்து, ஒரு முறை கிளறிவிட்டு குக்கரை மூடி 6 விசில் வரும் வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து பார்த்தால் கறியில் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் மேலே மிதந்து வந்திருக்கும். இப்போது சுவையான மட்டன் குழம்பு ரெடி.

சுவையான மட்டன் குழம்பு தயார்.