Home இரகசியகேள்வி-பதில் Tamil Sex Qustions வாசகர்களின் சில பாலியல் சந்தேகம் கேள்வி பதில்

Tamil Sex Qustions வாசகர்களின் சில பாலியல் சந்தேகம் கேள்வி பதில்

458

pennukku vinthu varuvathu,pennai thaduvuthal,sex aarvam,sunny leaon,kalla thodarpu,kallakathal,udal uravu payam,kathaliyudan sex,sex with lover,eppadi seivathu,athika suyainpam,சாதாரண நேரங்களில் காம உணர்வு வருவது சரியா தவறா?

காமம் என்பது, பசி, தூக்கம், இருமல், தும்மல் போல நமக்கு ஏற்படும் ஒரு உணர்வே. எப்படி மேற்சொன்ன பசி தூக்கம் போன்ற உணர்வுகள் வரும்போது நாம் அவற்றை பெரிதுபடுத்துவது இல்லையோ அதுபோல காம உணர்வையும் கருத வேண்டும்.

சிலர் காம உணர்வு வருவதால், தான் தவறு செய்கிறோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் சிக்கித் தவிக்கிறார்கள். அது ஒரு பாவச்செயல் போன்றும், ஏதோ பெரும் குற்றம் இழைத்துவிட்டது போலவும் கருதி மனதுக்குள் புழுங்கி, தேவை இல்லாத மனக்கவலைக்கு ஆளாகிறார்கள் அது தேவை இல்லாத ஒன்று.
எப்படி பசி, தூக்கம் வருகையில் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறீர்களோ, அது போலவே காம உணர்வு வருகையிலும் நடந்து கொள்ளுங்கள். அது வரும் போகும். அப்படி ஒரு உணர்வு நமக்குள் எழவில்லை என்றால் தான் அதற்காக வருத்தப்பட வேண்டுமே ஒழிய வருவதற்காக இல்ல. அப்படி ஒரு உணர்வு வரவில்லை என்றால் தான் நமக்குள் ஏதோ பிரச்சினை உள்ளது என்று அர்த்தம்.
ஆகவே அதை ரசியுங்கள், மாறாக வெறுக்காதீர்கள், உங்களையும் வருத்திக்கொள்ளாதீர்கள்..

நான் எனது துணையுடன் ஒரு நாளைக்கு எத்தனை முறை உடல் உறவில் ஈடுபடலாம்? அதற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் உண்டா?

பதில்:
ஒரு நாளைக்கு இத்தனை முறை தான் துணையுடன் உறவு கொள்ள வேண்டும் என்று எந்த வரைமுறையும் இல்லை. எத்தனை முறை வேண்டுமென்றாலும் உறவு கொள்ளலாம்.
ஆனால், கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய ஒரு விதி உள்ளது. அது என்னவென்றால், உங்களுக்கு உறவு கொள்ள நாட்டம் இருந்து உங்கள் துணைக்கு அந்த சமயத்தில் நாட்டம் இல்லை எனில் நிச்சயமாக அவரை வற்புறுத்தி உறவுகொள்ள வைக்கவோ உறவில் ஈடுபடவோ கூடாது. அதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.
அதனால முதலில் உங்கள் துணையிடம் கேளுங்கள், உறவு கொள்ள விருப்பம் இருப்பதாக தெரிவியுங்கள் அவரும் அதே மன நிலையில் இருந்தால் அல்லது நீங்கள் கேட்டதும் அந்த மனநிலையை உருவாக்கி உங்களுடன் உறவுக்கு தயார் ஆவாரேயானால் நிச்சயம் உறவு கொள்வதில் எந்த தவறும் இல்லை.
அப்படி அல்லாமல் சோர்வாக உள்ளது என்றோ மனது சரி இல்லை என்றோ இப்போது உறவு கொள்ள விருப்பம் இல்லை என்றோ சொன்னால் தயவு செய்து அவர் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்களின் இச்சையை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர் எதனால அப்படி சொல்கிறார் என்று அவரிடம் கேளுங்கள், அவருக்கு உங்களின் உதவி தேவைப்படுமாயின், அதை செய்ய முற்படுங்கள். நீங்கள் காண்பிக்கும் அன்பு நிச்சயம் அவரது மனநிலையை மாற்றும். சிறு நேரத்தில் அவரே இணங்கி உறவில் ஈடுபட ஒத்துக்கொள்ளலாம்.
விருப்பதின்பால் உண்டாகும் உறவிலே அதிக இன்பம் கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். அன்பினால மட்டுமே இந்த அற்புதங்களைச் செய்ய முடியும்.

பெண் உறுப்பு சுத்தம்:
பெண்களின் பிறப்பு உறுப்பு ஆணுறுப்பை விட மிகவும் மென்மையானது. விரைவில் கிருமித்தொற்றுக்கும் உட்படக் கூடியது. அதனால் அது மிகவும் சிரத்தையுடன் பராமரிக்கப்பட வேண்டும்.
சிறுநீர் கழிக்கையில் பெண்கள் பிறப்புறுப்பை, முன் பகுதி வழியாக கை விட்டு கழுவ வேண்டும். ஏனென்றால் ஆசன வாய்ப்பகுதியில் கிருமிகள் அதிகம் இருக்கும். அதனால் பின் புறமாக கை விட்டு பிறப்புறுப்பை சுத்தம் செய்கையில் ஆசன வாயில் இருந்து கிருமிகள் உறுப்புக்குப் பரவ வாய்ப்புகள் அதிகம்.
அதே போல, மலம் கழித்த பின்பு முதலில் பிறப்புறுப்பை முன் பகுதியில் கை விட்டு சுத்தம் செய்த பின்பு, பின் பகுதி வழியாக ஆசன வாயை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் மலம் என்பது கழிவு, அதனால் பிறப்பு உறுப்புக்கு கிருமிகள் சீக்கிரம் பரவி விடும்.
அதனால் பிறப்புறுப்பை கிருமித் தொற்றுகளில் இருந்து முடிந்தவரை காப்பாற்ற முடியும்.
தயவுசெய்து பெண்கள் மேற்கூறிய முறையைப் பின்பற்றவும்

ஆண்களின் மார்புக் காம்புகள் (Nipples):
பெருவாரியான ஆண்களுக்கும் பெண்களுக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் ஆணின் மார்புக்காம்புகளுக்கும், பெண்ணின் மார்பகக் காம்புகளைப் போல உணர்ச்சிகள் (sensitiveness) உண்டு.
பெண் அவளின் காம்புகளைத் தொடும்போது எப்படி சுகம் அல்லது கூச்சம் உணருகிறாளோ அதுபோலவே ஆணும் உணருகிறான்.
பெருவாரியான ஆண்கள் அதை கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவன் காம்புகளுக்கு பெண்ணைப் போலவே உணர்ச்சி இருப்பது நிஜமே.
உறவு கொள்ளுகையில் அவனது காம்புகளை பல பெண்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை. உணர்ச்சிப்பெருக்கில் உங்களின் காம்புகளைப் போலவே அவன் காம்புகளும் விறைக்கும் (Erection).
ஆதலால் பெண்கள் இனியாவது அவனது காம்புகளுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்களேன்.
அவனுக்கு எப்படி செய்தால் பிடிக்கும் என்று நீங்கள் கவலை கொள்ளத் தேவை இல்லை. அவனிடம் அதைப்பற்றி பேசுங்கள். அவனின் விருப்பத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களின் காம்புகள் எப்படியெல்லாம் தூண்டப்படவேண்டும் அல்லது சுவைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதைப்போலவே அவனுக்கும் செய்யலாம். நிச்சயம் அவன் அதை ரசிப்பான், அந்த சுகம் அவனுக்கும் பிடித்துப்போகும்.
நிச்சயம் இது உபயோகமான தகவல் என நம்புகிறேன்.