Home சூடான செய்திகள் 15 வயது காதலியுடன் உல்லாசமாக இருந்த 17 வயது காதலன் கழுத்து நெரித்து கொலை

15 வயது காதலியுடன் உல்லாசமாக இருந்த 17 வயது காதலன் கழுத்து நெரித்து கொலை

17

15 வயது காதலியுடன் உல்லாசமாக இருந்த 17 வயது காதலன் கழுத்து நெரித்து கொலை…. உத்தரபிரதேசத்தில் பரபரப்பு……………..!!

15 வயது பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 17 வயது காதலனை கழுத்தை இறுக்கி கொலை செய்த பெண்ணின் அப்பா உள்ளிட்ட உறவினர்கள், தங்கள் பெண்ணுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்திலுள்ளது பார்டல் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் மக்கான்சிங். இவருக்கு சுக்வீர், சுனில், சுஷில் என்ற மகன்களும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகனுக்கு மட்டும் திருமணமாகிய நிலையில் மருமகள் ரிங்கியும் இதே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் மக்கான்சிங் மகள், 17 வயதான ராகேஷ் சிங் என்ற வாலிபரை காதலித்துவந்துள்ளார். நேற்று காலையில் மக்கான் சிங் குடும்பத்தில் மகளை தவிர பிறர் வெளியே சென்றிருந்தனர்.

அப்போது காதலனை வீட்டுக்கு அழைத்த அந்த பெண், படுக்கையறையில் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக மக்கான்சிங் மற்றும் குடும்பத்தார் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. வீட்டுக்குள் தங்களது குடும்ப பெண் இன்னொரு ஆணுடன் சல்லாபிப்பதை பார்த்த அவர்கள் ஆத்திரமடைந்து, வீட்டுக்குள் சென்று இருவரையும் அடித்து உதைத்துள்ளனர். கயிற்றால் ராகேஷ்சிங் கழுத்தை இறுக்கி கொலை செய்த குடும்பத்தார், தங்கள் குடும்பத்து பெண்ணின் வாயில் வயலுக்கு வைத்திருக்கும் பூச்சி மருந்தை எடுத்து ஊற்றியுள்ளனர்.

இதனால் அப்பெண் மயக்க நிலைக்கு சென்றார். இதனிடையே கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் ஓடி வந்து பார்ப்பதற்குள், குடும்பத்தார் அனைவரும் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், பெண்ணை மொராதாபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு, ராகேஷ் சிங்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர். பெண்ணின் தந்தை, அண்ணன்கள், அண்ணி ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இதை ‘கவுரவ’ கொலையாக போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் வழக்கின் ஒரே சாட்சியமான பாதிக்கப்பட்ட பெண் இயல்பு நிலைக்கு திரும்பினால்தான் விசாரணையில் வேகம் பிடிக்கும் என போலீசார் கூறினர். அதே நேரம், அந்த பெண் மிகவும் சீரியசான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்