Home இரகசியகேள்வி-பதில் நாங்கள் எந்த நாட்களில் செக்ஸ் வைத்துக்கொண்டால் எளிதாக கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படும்

நாங்கள் எந்த நாட்களில் செக்ஸ் வைத்துக்கொண்டால் எளிதாக கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படும்

117

maxresdefaultநான் 27 வயது பெண். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளன. நானும், என் கணவரும் ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண் டிருக்கிறோம். எனக்கு வர வர செக்ஸ் மீது ஈடுபாடு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மேலோங்கி யிருக்கிறது. குழந்தைக்காக `தாம்பத்யம்` வைத்துக்கொள்ள வேண்டியது இருப்பதால், நாங்கள் எந்த நாட்களில் செக்ஸ் வைத்துக்கொண்டால் எளிதாக கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படும் என்பதைக் கூறவும்?

பதில்:- நாள் குறித்து வைத்துக்கொண்டு கணவனும்- மனைவியும் தாம்பத்ய உறவில் ஈடுபடுவது நல்லதல்ல. தாம்பத்யம் மிக இனிமையானது. கணவன், மனைவி இடையே அன்பையும், பாசத்தையும், அன்னியோன்யத்தையும் வளர்க்கக்கூடியது. மனதுக்கும், உடலுக்கும் மகிழ்ச்சிதரக்கூடிய இன்பம் நிறைந்த இந்த `உறவை’ குழந்தை பெறுவதற்காக மட்டுமே என்ற கண்ணோட்டத்தில் அணுகுவது சரியல்ல. குழந்தை பெறுவதற்காக மட்டுமே செக்ஸ் வைத்துக்கொண்டால் உங்களுக்கு மன நெருக்கடிதான் அதிகமாகும்.

மருத்துவ ரீதியாக `கருத்தரிப்புக்கு ஏற்றவை’ என்று குறிப்பிடப்படும் சில நாட்கள் இருப்பது உண்மை. அந்த நாட்களில் மட்டும் உறவு வைத்துக்கொள்ளாமல் எல்லா நாட்களிலும் உறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கே கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதும் உண்மை.

ஒரு வாரத்தில் 3 முதல் 4 தடவை உறவு கொள்கிறவர்களில் 51 சதவீதம் பேர் கருத்தரிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். 2 முதல் 3 முறை மட்டுமே உறவு கொண்டால் கருத்தரிப்பு சதவீதம் 46 சதவீதமாகக் குறையும். ஒன்று அல்லது இரண்டு தடவை மட்டும் உறவு கொள்ளும்போது 32 சதவீதமே கருத்தரிக்கும் வாய்ப்பு. வாரத்தில் ஒரு தடவைக்கும் குறைவாக உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு 17 சதவீதமாக குறைந்துவிடுகிறது. அதே நேரத்தில் வாரத்தில் நான்கு தடவைக்கு மேல் உறவில் ஈடுபடும் பெண்களில் 83 சதவீதம் பேர் கருத்தரிக்கிறார்கள்.

நீங்கள் கருத்தரிப்பிற்கு ஏற்ற காலம் என சில நாட்களை குறித்து வைத்துக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் அது நிர்ப்பந்தம் ஆகிவிடும். அதை கணக்கு பார்த்து செய்யும் கட்டாய வேலை போல் கணவரும் கருதத் தொடங்கிவிடுவார். ஆசைஆசையாய் சந்தோஷ கொண்டாட்டத்துடன் அனுபவித்து மகிழ வேண்டிய பரவச சங்கமத்தை கட்டாய கடமையாக நினைத்தால், மன அழுத்தம் தோன்றி கருத்தரிப்பது தாமதமாகும்.

ஒரு வேளை கருத்தரித்து விட்டாலும், `நாம் தான் தாய் ஆகப் போகிறோமே.. இனியும் ஏன் உடலுறவில் ஈடுபட வேண்டும்` என்ற எண்ணம் உருவாகி, அதுவே உங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த ஜென்மத்தையே சுவாரஸ்யமில்லாததாக்கி விடும். அதனால் வாழ்க்கையை தாம்பத்யத்தின் மூலம் ரசியுங்கள். அப்படி ரசிக்கும் வாழ்க்கையின் பரிசாக உங்கள் கர்ப்பம் அமையட்டும். உங்களுக்கு இந்த இளம் வயதிலே செக்ஸ் மீது ஈர்ப்பு இல்லாமல் போக என்ன காரணம் என்று தெரியவில்லை.

கணவருடன் கலந்து பேசி, செக்ஸாலஜிஸ்டை சந்தித்து ஆலோசனை பெற்று வாழ்க்கையை இன்பமாக அமைத்துக் கொள்ளுங்கள்.

கிளர்ச்சி அடைவது என்பது என்ன?

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.

பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.

கிளர்ச்சி அடைவது என்பது என்ன? அதாவது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல்,. மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. இதற்குக் காரணம் பாலுணர்வு அடிப்படையான சிந்தனை, உணர்வு, படிமம் போன்றவை இன்றி பாலுணர்வுக் கிளர்ச்சி என்ற விஷயத்துக்கே துளியும் சாத்தியமில்லை.

ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் செக்ஸ் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.