Home இரகசியகேள்வி-பதில் கேள்வி பதில் பாலியல்

கேள்வி பதில் பாலியல்

91

east-indian-nude-women-n085கேள்வி
டாக்டர் நான் சுய இன்பத்தில் ஈடுபடும் போது மிகவும் குறைவான அளவிலேயே விந்துகள் வெளியேறுவதாய் உணர்கிறேன்.
இதை எப்படி சரி செய்வது.(தயவு செய்து பெயர் வெளியிட வேண்டாம்)

பதில்
விந்து(Sperm) எனப்படுவது கண்ணுக்குத் தெரியாத அமைப்பு.அதை உங்கள் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. வெளிவருகின்ற திரவம் சுக்கிலப்
பாயம்( Seminal fluid)எனப்படும். இதிலே விந்துகள் கலந்திருக்கும். விந்துகள் தவீர சுக்கிலப் பாயத்தில் விந்து உயிர்வாழ்வதற்குத் தேவையான
பல்வேறு பதார்த்தங்களும் கலந்திருக்கும்.ஒருதடவையில் வெளியேறும் சுக்கிலம் பாயத்தின் அளவு இரண்டு மில்லி லீட்டருக்கும்
அதிகமாக இருந்தால் அது சாதாரண அளவாகும்.2 மில்லி லீடர் என்பது மிகவும் சிறிய அளவு.அதனால நீங்கள் மனத்தைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

கேள்வி
டாக்டர் எனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதமாகியும் தொடர்ச்சியாக இரத்தம் போகிறது.இவ்வாறு எத்தனை மாதம்
வரை இரத்தம் போகலாம்.?

பதில்
குழந்தை பிறந்து சில நாட்களுக்கு பெண்ணுறுப்பு வழியே இரத்தம் போன்ற திரவம் தொடர்ச்சியாக வெளிவரும்.
இது முற்று முழுதாக இரத்தம் அல்ல .இரத்தத்தோடு ,கருப்பையின் உட்பகுதியில் இருந்து பிரிந்து வரும் பகுதிகள்
போன்றவையோடு வேறு பல சுரப்புகளும் சேர்ந்து வெளிவரும். இது லோக்கியா ..எனப்படும். ஆரம்ப ஒரு வாரகலத்திற்குள்
இவ்வாறு வெளிவருவது சிவப்பு நிறமாக இரத்தம் போலவே இருப்பதால் அது ரெட் லோக்கியா எனப்படும்.
அதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு அதன் நிறம் இள மஞ்சள் நிறமாகவும் பின்பு வெள்ளை நிறமாகவும் வெளியேறும்.
அப்படியல்லாமல் குழந்தை பிறந்த பின்பு தொடர்ச்சியாக இரத்தமே வெளியேறுகிறது என்று நினைப்பவர்கள் உடனடியாக
வைத்திய சாலைக்கு செல்ல வேண்டும். குழந்தை பிறந்து ஒரு நாளின் பின் இரத்தம் தொடர்ச்சியாக வெளியேறினால் கூட அசாதாரணமானது. நான் திருமணமாகாத கல்லூரி மாணவி. நான் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கி எனது காலில் பலத்த அடி காரணமாக சதை
பிய்த்துவிட்டது நிறய ரத்தம் விபத்தில் சேதமாகிவிட்டது காலில் பிளாஸ்டிக்
அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.அதோடு பெல்விஸ் எனப்படும் காலும்
இடுப்பு எலும்பும் இணையுமிடத்தில் எலும்பு முறிவு அது பெட் ரெஸ்டில்
சரியாகிவிட்டது. கடந்த 3 மாதங்களூக் முன்பு வரை மாதவிடாய் சரியாக வந்து
கொண்டிருந்தது ஆனால் கடந்த 3 மாதமாக மாதவிடாய் ஆகவில்லை இதே போல்
எப்பவாவது ஒரு முறை பிரச்சணை இருக்கும் 2மாதம் மாதவிடாய் ஆகாமல் இருந்து
மறுபடி ஆவேண் ஆணால் இந்த முறை 3 மாதங்களாகியும் ஆகவில்லை. என்ன காரணம்
என்று கொஞ்சம் விளக்குங்கள் . நான் எந்த தவறும் செய்யவில்லை . கடந்த ஆறு
மாதங்களாக நன்றாக நடக்க முடியாத நிலை விபத்தின் காரணமாக தற்பொது நன்றாக
நடக்கிரேண் . கொஞ்சம் எடை கூடியுள்ளது தயவுசெய்து என்ன செய்யட்டும் என்று பதில் அளியுங்கள்.

பதில்
நல்லது சகோதரி.
மாதவிடாய் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் பிந்திப்போவதற்கு
பல்வேறு விதமான காரணங்கள் இருக்கலாம்.
அதிலே முக்கியமான ஒரு காரணி மன உளைச்சல் ஏற்படுவதாகும்.கடந்த மூன்று
மாத காலமாக உடல் சுகவீனமுற்று இருந்த உங்களுக்கு ஏற்பட்டிருந்த மன உளைச்சல் காரணமாக மாதவிடாய் பிற்போகி இருக்கலாம்.
இது ஒரு சாதாரண நிகழ்வு உங்கள் உடல் நிலையும் மன நிலையும் பழைய நிலைக்குத் திரும்பும் போது மாதவிடாயும் சீராகும்.
ஆனாலும் உங்க்கள் உடல் நிறை அதிகரித்து உள்ளதாக கூறியுள்ளதோடு முன்பும்
ரெண்டு மாதமளவில் மாதவிடாய் பிந்திப் போவதாக கூறியுள்ளதால் உங்களுக்கு
சூலக நீர்க்கட்டிகள் பிரச்சினை (PCOD)இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது நல்லது.

என் வயது32. ஆசிரியையாக வேலை பார்க்கிறேன். கணவர் என் மீது அதிக பாசம்கொண்டவர். ஒன்பது வயதில் மகன் இருக்கிறான். நாங்கள் இருவரும் வேலைபார்ப்பதால், அடுத்த குழந்தை பிறந்தால் கவனிக்க முடியாது என்ற எண்ணத்தில்
மூன்று முறை அபார்ஷன் செய்தேன் . எப்படியாவது ஒரு பெண் குழந்தையை பெற்
றெடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு , மீண்டும் தாய்மையடைந்தேன். பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றேன் . என்ன நடந்ததோ தெரியவில்லை. நான் ஆசைப்பட்டது போலவே பெண்ணாக உருவெடுத்திருந்த அந்த குழந்தை, வயிற்றிலே இறந்துவிட்டது. குழந்தையை வயிற்றிலிருந்து வெளியேற்ற ஆபரேஷன் செய்தபோது ,கர்ப்பப் பையும் கிழிந்திருப்பதாகக்கூறி, அதையும் சேர்த்துஅகற்றிவிட்டார்கள். அதன் பிறகு என் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது .அன்பான என் கணவரின் தாம்பத்ய ஆசையை என்னால் தீர்த்துவைக்க முடியவில்லை .
உறவின் போது பயங்கர வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது . இதனால் எனக்கு தாம்பத்யம் என்றாலே பயம் ஏற்படுகிறது. தாம்பத்யத்தில் திருப்தி கிடைக்காததால் என் கணவர் என்னை விட்டு அகன்று விடுவாரோ என்றுகவலைப்படுகிறேன். ஆபரேஷனுக்குப் பிறகு என் உடல் எடை பத்து கிலோ அதிகரித்து 63 கிலோவாகி விட்டது . என் மகன் தனக்கு மட்டும் ஒரு தம்பியோ, தங்கையோ இல்லையே என்று ஏங்குகிறான் . இந்த விஞ்ஞான யுகத்தில் என் குடும்பத்தின் இன்னொரு குழந்தை ஆசையைத் தீர்க்க எந்த வழியும் இல்லையா ?

நான் என்க ணவருக்கு உடல் ரீதியாகவும் நல்ல மனைவியாக இருக்க ஆலோசனை கூறுங்கள்.
இது மாதிரி சம்பவங்கள் வாழ்க்கையில் மிகவும் சாதாரணமாக ஏற்படுகிறது. ஒன்றுக்கு மேல் குழந்தை வேண்டாம் என்ற பட்சத்தில் பாதுகாப்பான (தற்காலிக தடையில்) உடலுறவு கொண்டிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, முதலில் குழந்தை தரித்து, பிறகு அதை களைத்து , இதனால் அடுத்து பிறக்க இருக்கும் குழந்தைக்கும் பேராபத்தாகிவிடும். இன்னும் தாயாக இருக்கும் அந்த பெண்ணின் உயிருக்கும் கேடாகவும் அமைந்துவிடும் . இதனால்தான் நாங்கள் சொல்லுவோம் குடும்ப கட்டுபாடு என்பது செய்ய கூடாது
, குடும்ப கட்டுபாடு என்பது குழந்தை பிறக்க நிரந்தர தடையாக அமைந்துவிடும். ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைபடும் பொழுது பெற்று கொள்ள முடியாத சூழ்நிலையும் அமைந்துவிடும் , குடும்ப கட்டுபாடு செய்து கொண்டால்.

ஏற்கனவே இருக்கும் ஓரிரு பிள்ளைகளும் இயற்கை சீற்றம் அல்லது விபத்துகளினால் இறந்துவிட நேரிட்டால்கூட (இறைவன் உதவியால் அப்படி ஏதும் ஏற்பட கூடாது )
பெற்றோர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிடுகிறது. ஆகவே குடும்ப கட்டுபாடு போன்றவற்றை செய்யாமல் வாழ்க்கை வாழ்வதே சிறந்தது என்று , எங்கள் வழியில் நான் சொல்ல ஆசைபடுகிறேன்.

பத்து குழந்தை பெற்றால் அதை பராமரிக்க முடியாது, நமக்கு போதியம் ஊதியம் இல்லை என்பதுகூட ஒரு மன பலவீனம்தான் . ஒவ்வொரு குழந்தை அடுத்து அடுத்து பிறக்கும்போதும் அதற்கான செல்வம் கூடிகொண்டேதான் இருக்கும் . இதை நான் சொன்னால் நம்ப மாட்டீங்க. உணர்ந்தால் மட்டுமே நம்புவீர்கள் ?
நட்புடன்