Home சூடான செய்திகள் ஆபாச “சிடி’ பார்க்கும் பெண்கள் – அதிர்ச்சி தகவல்

ஆபாச “சிடி’ பார்க்கும் பெண்கள் – அதிர்ச்சி தகவல்

33

ஆபாச “சிடி’ பார்க்கும் மோகம் பெண்களிடம் அதிகரித்து வருவதை அறிந்த மத்திய குற்றப்பிரிவு வீடியோ பைரசி போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மளிகைக் கடை, பாத்திரக்கடை, பால் கடையில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆபாச, புதுப்பட “சிடி’க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை திருவொற்றியூர் பூங்காவனபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்(40). இவர் அப்பகுதியில் 20 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்து செல்லும் பெண்களிடம் சகஜமாக பேசி பழகி வந்தார். கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களிடம் புதுப்பட தமிழ் பட “சிடி’க்களை வாடகைக்கு விட்டு வந்தார். அதில், ஒரு சில பெண்கள் ஆங்கில படங்களை விரும்பிக் கேட்டனர். ஆங்கில பட “சிடி’க்கள் ஒன்றுக்கு பத்து ரூபாய் வாடகை பெற்று வந்தார். ஆங்கில படங்களை விரும்பி பார்த்து விட்டு, மீண்டும் வேறு ஆங்கில படங்கள் வேண்டும் என்று சில பெண்கள் கேட்டனர். அப்பெண்களுக்கு “பெண்கள் மட்டும் நடித்திருக்கும்’ ஆபாச “சிடி’க்களை வாடகைக்கு கொடுத்தார். ஒரு சில பெண்கள் ஆபாச “சிடி’க்களை மளிகைக் கடைக்காரரிடம் விலைக்கு வாங்கி வீட்டில் வைத்து போட்டு பார்த்தனர்.

பெண்களிடம் ஆபாச “சிடி’ மோகம் அதிகரித்து வரும் ரகசிய தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்றது. முதலில் அதிர்ச்சியடைந்த போலீசார் குறிப்பிட்ட கடைகளில் சோதனையிட முடிவு செய்தனர்.கமிஷனர் லத்திகாசரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குறிப்பிட்ட மளிகைக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த புதுப்பட மற்றும் ஆபாச “சிடி’க்களை பறிமுதல் செய்தனர். மளிகைக் கடையில் “சிடி’க்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டிருந்த போது, காய்கறி வாங்கச் சென்ற பெண்கள் “சிடி’யை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, வேறு புதுப்பட “சிடி’ கேட்டனர். அப்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

திருவொற்றியூர் எர்ணாவூரைச் சேர்ந்தவர் அசோக்(28). இவர் அப்பகுதியில் ஆனந்த் மெட்டல் என்ற பாத்திரக் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் உள்ள பாத்திரங்களில் சிறிய ஆபாச படங்களை போட்டு வைத்து விடுவார். வழக்கமாக பாத்திரம் வாங்கச் செல்லும் பெண்கள் பாத்திரத்தை எடுத்து பார்த்தனர். அப்போது, பாத்திரத்திற்குள் இருக்கும் ஆபாச படத்தை பார்த்து கடைக்காரரிடம் ஆபாச “சிடி’க்களை கேட்கின்றனர். பெண்கள் கடைக்கு வந்து பாத்திரம் வாங்குவது போல், கடையின் உரிமையாளர் அசோக்கிடம் ஆபாச “சிடி’க்களை வாங்கிச் சென்றனர்.

இத்தகவலை அறிந்த போலீசார் பாத்திரக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். பாத்திரங்களில் போட்டு வைத்திருந்த சிறிய அளவிலான ஆபாச படங்களுடன் “சிடி’க்களை பறிமுதல் செய்தனர்.அண்ணாநகர் 13வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் தனசேகரன்(23). இவர் எஸ்.எஸ்.மில்க் என்ற பெயரில் பால் கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கு புதுப்பட மற்றும் ஆபாச “சிடி’க்களை விற்பனை செய்து வந்தார்.

பிராட்வே பகுதியில் “சிடி’ விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் காசிம்(23). இவரது கடையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கடையில் இருந்த ஆபாச, புதுப்பட “சிடி’களை பறிமுதல் செய்தனர். திருவொற்றியூரைச் சேர்ந்த கவிமணி(43) என்பவரது கடையில் இருந்து புதுப்பட மற்றும் ஆபாச “சிடி’க்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அண்ணாநகர் 10வது பிரதான சாலை பிளாட்பாரத்தில் புதுப்பட, ஆபாச “சிடி’க்களை விற்பனை செய்து வந்த முஸ்தபா(37) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு நபர்களிடம் இருந்து ஆயிரத்து 500 “சிடி’க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. “சிடி’க்களின் மதிப்பு எட்டு லட்சம் ரூபாய்.
மத்திய குற்றப்பிரிவு வீடியோ பைரசி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாறு “சிடி’ வேர்ல்டு என்ற கடையில் திடீர் சோதனை நடத்தினர். கடையில் இருந்த ஆபாச, புதுப்பட “சிடி’க்களை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடைக்கு சென்ற கல்லுõரி மாணவி, போலீசாரை பார்த்ததும் திகைத்து நின்றார். வாடகைக்கு எடுத்துச் சென்ற “சிடி’யை திருப்பிக் கொடுக்க வந்ததாக மாணவி கூறினார். மாணவியின் கையில் இருந்த “சிடி’யை வாங்கிக் கொண்டு அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த “சிடி’யை கடையில் உள்ள கம்ப்யூட்டரில் போலீசார் போட்டுப் பார்த்த போது, அது ஆபாச “சிடி’ என தெரிய வந்தது. சிறிது துõரம் மெதுவாக நடந்து சென்ற அந்த மாணவி பின்னர் ஓட்டம் பிடித்தார்.